12. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
47. தியானம் தேடி வருவது - மௌன சக்தி
- மனிதன் தேவைப்பட்டதைத் தேடுகிறான்.
- தேடுவது கிடைப்பதுண்டு. கிடைக்காமலும் போவதுண்டு.
- கிடைப்பது திறமை.
- கிடைக்காவிட்டால் தேட வேண்டியது திறமை.
- தியானம் அனைவருக்கும் உரியதில்லை.
- கம்ப இராமாயணம் அனைவரும் படிப்பதில்லை.
- ஓரளவு தமிழ் புலமையுள்ளவரே படிக்க முடியும்.
- படிப்பவரில் சிலருக்கே புரியும்.
- புரிவது அரிது, அதை நுணுக்கமாக உணர்வது பெரிது.
- புரிவதால், அதை எழுத முடியும் என்பதில்லை.
- சிறந்த பக்தியுள்ளவர்க்கே தியானம் உரியது.
- அது அனைவரும் தொடர்ந்து பயில்வதில்லை.
- பயில்பவர்க்கெல்லாம் பலன் வரும் எனக் கூற முடியாது.
- பலன் வரும்பொழுது அதன் கட்டங்கள் ஆயிரம்.
- முதற்கட்டம் தியானம் தினமும் செய்ய முடிவது.
- முடிவான கட்டம் சமாதி.
- முடிவான கட்டம் பலிப்பவருக்கு தியானம் தேடி வரும்.
- பெரிய மனிதர், அதிகாரி, மந்திரி, கவர்னரைப் போய்ப் பார்க்க அனுமதி கிடைப்பது தியானம் பலிப்பது.
- அவர் நம்மைத் தேடி வருவது தியானம் நம்மைத் தேடி வருவது.
- அனைவரும் பதவியை மனத்தால், செயலால் நாடுகிறார்கள்.
- பதவி எவரையும் தேடி வருவதில்லை.
- இந்திரா, சாஸ்திரி, ராஜாஜியைப் பதவி தேடி வந்தது.
- நாடிப் போகும் பதவி தேடி வர நாம் உச்சகட்ட உயர்வு பெற வேண்டும்.
- அந்த உச்சகட்ட உயர்வை அன்னை மனிதனுக்கு அவன் கேளாமல், கேட்கத் தெரியாமல் அளித்து, அவனை நாடி வருகிறார்கள்.
- ஏற்பவரிலர்.
- ஏற்றவர், அதன் அம்சத்தை அறிந்து ஏற்க வேண்டும்.
- ஏற்றதைப் பாராட்டிப் போற்ற வேண்டும்.
- தியானம் அவருக்குப் பலிக்கும்.
- அவர் போற்றுவதை தியானம் ஏற்க வேண்டும்.
- ஏற்ற தியானம் அதை நாட வேண்டும்.
- குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.
- நாம் தியானத்தை ஏற்ற பாங்கை தியானம் பாராட்டி நாடினால் தியானம் தேடி வரும்.
- முடிவான கட்டம் அப்பொழுது முதற் கட்டமாகிறது.
- அன்னை அவதாரம் முடிவானதை மனிதனுக்கு முதலாக்கித் தருகிறது.
- அதை ஏற்று, அடுத்த கட்டத்தில் அன்னையை ஆத்மா நாடினால் நம்மை நாடி தியானம் வரும்.
- தியானம் நாடி வருவது அன்னை நம்மை விரும்பி அழைப்பது.
- அது யோகத் தகுதியுண்டு என அறிவிப்பது.
- சூரியன் உதயமானால் பூமாதேவிக்கு உயிர் வருகிறது.
- தியானம் நாடி வருவது உள்ளத்தில் சூரியன் உதயமாவது.
- உள்ளம் உயர்ந்தால், உயர்ந்து ஆன்மாவை அறிந்தால், சூரியன் உதயமாகும்.
- அது மௌன சக்தியைத் தரும் - Silent will பலிக்கும்.
- உலகம் உள்ளேயுள்ளதை அறிபவனை நாடி தியானம் வரும்.
தொடரும்.....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் சைத்திய புருஷன் தானே இனிமையானவன். சுமுகம் செறிந்து இனிமையாகிறது. கடந்த காலம் இணைவதால் மேலும் செறிவடைகிறது. சைத்திய புருஷன் இனிமைக்குரியவன். |
******
ஸ்ரீ அரவிந்த சுடர் யோகத்திற்கு முதலாகத் தேவையானது சரியான நோக்கம், முறையல்ல. உணர்வோடு கலந்த நிலையிலிருந்து வெளிவந்து பிராணமய புருஷனைக் காணும் நோக்கம் தேவை. யோகத்திற்கு முறையைவிட நோக்கம் முக்கியம். |
******
- Login to post comments