01. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
N. அசோகன்
1. ஆனந்தம்: | பரம்பொருள் எந்தகட்டுப்பாட்டிற்குள்ளும் வராமல் பூரண சுதந்தரத்துடன் இருக்கும் பொழுது வெளிப்படையாக இந்த பூரண சுதந்தரம் வரம்பற்ற நிலையாகவும் சப்ஜெக்டிவாக, பேரின்பமாகவும் உணரப்படுகிறது. |
2. உண்மை: | சத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது சத்தியமாக மாறுகிறது. அந்த சத்தியத்தைதான் நாம் இங்கே உண்மை என்கிறோம். |
3. பொய்: | சத்தியத்திற்கு மாறுபட்டு இருப்பவையெல்லாம் பொய் என்று கருதப்படுகிறது. |
4. அன்பு: | ஒன்றாக இருக்கும் பரம்பொருள் பலவாக பிரிந்து நிற்கும் தன்னுடைய படைப்போடு தன்னை இணைத்துக் கொள்ள பயன்படுத்தும், ஒன்றுபடுத்தும் உணர்வைதான் அன்பென்று நாம் அழைக்கிறோம். |
5. வெறுப்பு: | இப்படி ஒன்றுபடுத்தும் வேலையை அன்பு செய்யும் பொழுது அதை எதிர்த்து பிரிவினையை வலியுறுத்தும் உணர்வுதான் வெறுப்பு. |
6. மகிழ்ச்சி: | நம்முடைய பிராண மையத்தில் உள்ள எனர்ஜி லெவல் திடீரென்று உயரும் பொழுது அதை நாம் மகிழ்ச்சியாக உணர்கிறோம். |
7. வருத்தம்: | நம் உணர்வு மையத்தினுடைய எனர்ஜி லெவல் திடீரென்று குறையும் பொழுது அதை நாம் வருத்தமாக உணர்கிறோம். |
8. தைரியம்: | மனிதனுடைய மன உறுதி முடியாது என்று தென்படுகின்ற சூழ்நிலையில் முடியும் என்று செயல்படும் பொழுது அது தைரியமாக வெளிப்படுகிறது. |
9. பயம்: | ஆபத்தை உணர்கின்ற உணர்வை நாம் பயம் என்கிறோம். வெளிநோக்கிச் செல்கின்ற மன உறுதி வழக்கத்திற்கு மாறாக திசை திரும்பி உள்நோக்கி போகும் பொழுது அது அச்சமாகத் தெரிகிறது. மேலும் அச்ச உணர்வு பாஸிட்டிவான முயற்சிகளை முறியடிக்கும். |
10. ஆசை: | தான் விரும்பியதை அனுபவிக்க வேண்டும் மற்றும் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு. |
தொடரும்..... |
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மனம் கட்டுப்படாத இடத்தில் கட்டுப்பட்டால், எவருக்கும் முடியாதது நமக்கு முடியும். நமக்கு முடியாதது முடிந்தால் உலகம் உள்ளடக்கம். உலகத்தை வெல்ல உன்னை உள்ளே சந்திக்க வேண்டும். |
******
- Login to post comments