15. மனிதனுடைய இன்றைய நிலைமையும் அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்
மனிதனுடைய இன்றைய நிலைமையும்
அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்
N.அசோகன்
வ. எண் | மனிதனுடைய இன்றைய நிலைமை | அன்னை அவனுக்கு வழங்க விரும்புவது |
1 | மனிதன் இன்பத்தை நாடுகிறான். | அன்னை அவனுக்கு பேரின்பத்தை வழங்குகிறார். |
2 | மனிதன் அவனுடைய சிறுமை குணம் படைத்த அகம்பாவத்தை மையமாக வைத்து வாழ்க்கையை நடத்துகிறான். | அன்னை அவனுடைய ஆன்மாவை மையமாக வைத்து வாழ்க்கையை அமைத்துத் தர முன் வருகிறார். |
3 | பணம் மற்றும் வசதியைத்தான் மனிதன் தேடுகிறான். | அன்னை அவனுக்கு ஆன்மீகப் பொக்கிஷங்களை அளிக்கிறார். |
4 | பகுதியானதும், பிரிவினையை வலியுறுத்தக்கூடியதுமான அறிவை மனிதன் பாராட்டுகிறான். | அன்னை முழுமையானதும், ஒற்றுமையை வலியுறுத்தக் கூடியதுமான ஆன்மீக அறிவை அவனுக்கு வழங்குகிறார். |
5 | மனிதன் அடுத்தவர்களிடமிருந்து பெறுவதன் மூலம் வளர விரும்புகிறான். | அடுத்தவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் வளர்வதற்கான வழியை அன்னை கற்றுத் தருகிறார். |
6 | மனிதன் வெளிச் செயல்பாடுகளையே முக்கியமாகக் கருதுகிறான். வெளி உலகம் அவன் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக நினைக்கிறான். | அவனுடைய வாழ்க்கையை அகத்திலிருந்து நிர்ணயிக்க அன்னை வழி சொல்கிறார். |
7 | அவன் பணத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கிறான். | அவனை பணத்திற்கு அதிபதியாக்க அன்னை முன் வருகிறார். |
8 | புலனறிவை அவன் பாராட்டுகிறான். | உள்ளெழுச்சியாகக் கிடைக்கும் அறிவை அன்னை அவனுக்கு வழங்குகிறார். |
9 | மனிதன் அவனுடைய ஆசைகளுக்கு அடிமையானவன். ஒன்றன்பின் ஒன்றாகத் தன் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு முடிவில்லாத முயற்சியில் தன் வாழ்நாள் முழுவதும் செலவழிக்கிறான். | ஆசைகளிலிருந்து அவனை நிரந்தரமாக விடுவித்துப் பேரின்பத்தை அவனுக்குச் சொந்தமாக்க அன்னை முன் வருகிறார். |
10 | அவனுடைய பார்வை, பகுதியானது மற்றும் தற்காலிகமானது. | கடந்த காலம், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பூரணப் பார்வையை அன்னை அவனுக்கு அளிக்கிறார். |
11 | காலம் மற்றும் இடத்திற்கு மனிதன் கட்டுப்பட்டு இருக்கிறான். | காலத்தையும், இடத்தையும் கடந்து செல்லக்கூடிய ஒரு ஆன்மீகசக்தியை அன்னை அவனுக்கு அளிக்கிறார். |
12 | தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ள அவன் வாழ்க்கையைத் தேடிப் போகிறான். | அவனுக்கு வேண்டியதை வழங்க வாழ்க்கை அவனைத் தேடி வரும்படி அன்னை செய்கிறார். |
*****
- Login to post comments