07.சிறு குறிப்புகள்
“சிறு குறிப்புகள்”
‘மனைவியை வென்ற கணவன்’
அதிகம் படித்த கணவன் அன்னையிடம் வந்தபொழுது காரிருளாக இருந்த வாழ்வு இருள் குறைந்து நிலம் தெளிந்து புத்துயிர், புத்துணர்ச்சி வந்தாலும், நிலம் தெளிந்த பின் பொழுது விடியும் என்ற நம்பிக்கையின்றித் தவிதவித்தான். பொழுது விடியப் போகிறது என்பது யாருக்குத் தெரிந்தாலும் தனக்குத் தெரியவில்லை. மனம் அந்த இடத்தில் கை விடுகிறது.
படிப்பின் சிறப்போடு, நம்பிக்கையுமிருந்ததால், அன்னையை அதிகமாக ஏற்றுக் கொள்ள முயன்ற பொழுது விடிந்தது. பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்று சுதந்திரமாக வாழ்வு அமைந்தது. வாழ்வு சில ஆண்டுகட்கு முன் இருந்ததை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இன்று அளவுகடந்து மாறிவிட்டது. எல்லாம் Mother's grace என்ற வாயால் கூறாமல், மனதால் கூற முடிகிறது.
உடனுள்ளவர் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்றெல்லாம் கூறினாலும் மனம் எதையும் நாடவில்லை. எல்லாம் கூடி வந்த பின் என்ன இருக்கிறது தேடுவதற்கு!
இவர் வாழ்வில் பெரிய குறை
குறை பெரிதானாலும் உலகம் அறியாதது, வீடு அறியும். இவர் மனைவி பிரபலமானவள். அவளுக்கு நண்பர்கள் அதிகம். ஆபீசில் A1 என்று பெயர் வாங்கியவள். எவராலும் முடியாததை இவள் செய்வாள் எனப் பெயர் வாங்கியவள். இவளுக்கு ஒரு நல்ல குணம். கணவனைக் குறை கூறுவாள். பிறரெதிரில் அடக்கமான இந்தியப் பெண் எனப் பெயர் வாங்கிவிட்டாள். இது போன்ற மனைவி கிடைக்க நீ புண்ணியம் செய்தவன் என்று எல்லோரும் அவள் எதிரிலேயே சொல்லும்படி நடப்பதால், இவளைப் பற்றி எவரிடமும் குறை கூறி மனம் சமாதானமடைய முடியாது.
அன்னை அருளால் குடும்பக் கஷ்டம் ஒவ்வொன்றாக விலகும்பொழுது மனைவியின் சின்னத்தனம் படிப்படியாய் கடுமையாகிறது.
மனைவி தன் ஆதிக்கத்தை கணவனிடமிருந்து அவனுடைய உறவினர்களுக்கும் நீட்டிவிட்டாள் அன்னையால் வீடு அற்புதமாக இருக்கும்பொழுது, மனைவி முக்கியமான நேரத்தில் கணவனைக் குறை சொல்லுவதும், குத்தலாகப் பேசுவதும், மனத்தைப் புண்படுத்துவதும், அன்னை மீதுள்ள நம்பிக்கையே போவதுபோல் அமைகிறது. கணவன் மனம்,
• ஏன் என் மனைவி இப்படியிருக்கிறாள்?
• எல்லோரிடமும் நடப்பதைப்போல் என்னிடமும் இருக்கக்கூடாதா?
• நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்?
• அன்னை ஏன் மனைவி விஷயத்தில் பலிக்கவில்லை?
என்று புழுங்குகிறது. இதைப் பற்றி அன்னை என்ன கூறியிருக்கிறார் எனக் கேட்கவும் கணவனுக்குத் தோன்றவில்லை. இப்படிப் பல ஆண்டுகள் கழிந்தன. மனம் மீண்டும் இதே கேள்விகளை எழுப்பிய பொழுது, புத்தகங்கள், நண்பர்கள், சொந்தச் சிந்தனை என
பலவற்றையும் கலந்தபொழுது ஒருவர் அன்னை கூறியதை எடுத்துக் காட்டினார். இது பிரச்சினையில்லை, வாய்ப்பு, மேலும் வாழ்வு விரிவடைய வந்த வாய்ப்பு, என்று கூறினார். அதுவே சரியானால், அந்த வாய்ப்பைப் பெறுவதெப்படி? அதற்கு அவர் கொடுத்த அன்னை பதில்,
“உனக்கு மிகவும் பிடித்ததைப் பிரியமாக விட்டுக் கொடுக்கும் மனமிருந்தால், மனைவி பிரச்சினையிருக்காது. அது வாழ்வு வளர உதவும்” என்பது. அவருக்கு மிகப் பிரியமானது சமாதி தரிசனம். சமாதியையும் ஆசையாகத் தரிசனம் செய்தால் பலிப்பது ஆசைதான், பக்தியில்லை, என அவர் அறிவார். அதைப் பல மாதம் மனத்தோடு போராடி ஏற்றுக் கொண்டார். அது பிரியமாக ஏற்கப்படவேண்டும் என மேலும் போராடினார். அவர் போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
மனைவி தலைகீழே மாறிவிட்டாள்.
“என் மனைவியும் இப்படி மாறுவாள் என அவள் மாறிய பின்னும் என்னால் நம்ப முடியவில்லை. திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக இல்லாத மாறுதல். என்ன செய்தால் என்னை அழ வைக்கலாம் என்று இதுவரை முனைந்தவள், என்ன செய்து என்னை சந்தோஷப்படுத்தலாம் என்று ஒரே குறியாய் இருக்கிறாள்” என்று அவர் இன்று கூறினார்.
****
சொசைட்டியின் வெளியீடுகள் |
|
கர்மயோகியின் நூல்கள் : |
|
1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும் | ரூ. 20 |
2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம் | ரூ. 20 |
3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம் | ரூ. 20 |
4. சிறியதும் பெரியதும் | ரூ. 20 |
5. கணவன் மனைவி | ரூ. 20 |
6. இரத்தினச் சுருக்கம் | ரூ. 20 |
7. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம் | ரூ. 40 |
8. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் | ரூ.100 |
9. அதிர்ஷ்டம் | ரூ.100 |
10. பேரொளியாகும் உள்ளொளி | ரூ.100 |
தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவு தபால் கட்டணம் ரூ. 15/-சேர்த்து M.O செய்யவும்.
- Login to post comments