Skip to Content

08. வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும்....

வாழ்க்கையிலும் மற்றும் ஆன்மீகத்திலும் நம் கண்ணிற்கும், அறிவிற்கும் தெரியாத பல அருமையான விஷயங்களை நாம் அனுமதித்தால் அன்னை நமக்கு உணர்த்தி வழங்குவார்

ஐன்ஸ்டினின் முதல் மனைவி தம்மால் இவருடன் குடித்தனம் செய்ய முடியாது என விவாகரத்து செய்துவிட்டார். பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் வசனம் எழுதுபவரிடம் சண்டை போட்டுக் கொண்டார். பிறகு அவர் முதல் மந்திரியான பின் "நான் சண்டை போட்டிருக்க மாட்டேன். அப்பொழுது தெரியவில்லை' என்றார். புரந்தரதாசருக்கு மனைவியின் ஆத்மீகப் பெருமை தெரியாததால் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். காமராஜ் பிரதமர் நேருவைப் பார்க்கப்போய் மூன்றுநாள் காத்திருந்து முடியவில்லை. நேருவே பிறகு காமராஜரை AICC தலைவராக்க விரும்பினார். மூளை வளர்ச்சியற்றதாகக் கருதிய குழந்தை பின்னால் பிரபலமடைந்த பின் "இதெல்லாம் அன்று எப்படி தெரிய முடியும்' என்பார்கள்.

அன்று அறியாததை இன்று அறிவது அறிவு வளர்ச்சி.

பின்னால் தெரியப் போவதை முன்னால் அறிவது ஞானம்.

அதை இன்று மனம் அனுமதிப்பது நல்லுணர்வு (right attitude).

அதை அனுமதிக்கும் குணம் நிதானம், பொறுமை.

அக்குணத்தின் பாங்கு தானே நடப்பதை ஏற்பது.

எதிர்பாராமலிருப்பது மனம் அப்பாங்கை வளர்க்கும் வகை.

தோன்றுவதைப் பேசாமலிருப்பது எதிர்பார்க்காமலிருக்க உதவும்.

ஆன்மீக பாஷையில் இதை Silent will மனோ சக்தி என்கிறோம்.

இதை அனுமதிக்கும் உணர்வு அன்பு.

அன்பை வெளிப்படுத்தும் நடைமுறை ஆதரவு.

அதற்குரிய பழக்கம் இனிமை, அடக்கம்.

பிறர் நம் எதிர்காலத்தை அறியாதபொழுது, நாம் அறிந்தால், "இவர்கட்கெல்லாம் என் பெருமை தெரியவில்லை. ஒரு நாள் அது வெளியில் வரும்" என நினைக்கிறோம். நாமே நம் எதிர்காலச் சிறப்பை அறியமுடியாத மனநிலையை unconsciousness கண்மூடித்தனம் என்கிறார் அன்னை.

எப்படி நாம் இதை அனுமதிப்பது?

  • பிறர் குறையைக் குறை எனக் கண்டுகொள்ளாவிட்டால் அவர் நிறைவு பெறும்பொழுது குறை எழாது.
     
  • எதிரியிடமும், மட்டமான கயவனிடமும், முரடனிடமும் மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டால், எதிர்ப்பும், மட்டமும், கயமையும், முரட்டுத்தனமும் ஓய்ந்தபின் மனிதத்தன்மை செயல்படும். மனிதத்தன்மைக்கு ஆன்மவிளக்கம் உண்டு.
     
  • அவமானப்படுத்தும்பொழுது ஆத்திரப்படாமல், அவமானம் நம் ஆன்மாவுக்கில்லை, நாம் அவமானப்பட வேண்டிய உள்ளுறை குணத்திற்கே எனப் பொறுமையாக இருந்தால் அனுமதி கிடைத்து அன்னை உள்ளே வருவார்.
     
  • ஆதாயத்தைக் கருதாமல், அன்பைக் கருதினால், கண்ணை மறைக்கும் ஆதாயம் விலகி எதிர்காலத்தை உணர்த்தும் அன்பு அன்னையை உள்ளே அழைக்கும்.
     
  • பிறர் சுயநலம் சுடும்பொழுது, அதைத் தம் சுயநலம் சூடுபடுகிறது எனப் புரிந்து கொண்டால் பிறர் மீதுஎழும் எரிச்சல், நம் மீது எழும் வருத்தமாக மாறும்.
     
  • வரும் செய்தியின் பின்னாலுள்ள உண்மையைக் காண மனம் விழைவது, உண்மை வரும்முன் அன்னையை அழைத்து அருளைச் செயல்படச் செய்யும்.

நம் வாழ்க்கையில் நமக்குச் சில புரியலாம், பல புரியாமல் இருக்கலாம். பெரியவர்கள் வாழ்க்கையில் நமக்கு அதிகமாகப் புரியும். அன்னை ஆசிரமத்தில் வாழ்ந்த 54 ஆண்டு வாழ்வில் சுமார் 500 நிகழ்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. நம் தலைப்புக்குரிய அனுபவத்தைத் தர வல்லவை அவை. நாம் தெரியாமல் செய்யும் நல்லதை அன்னை தெரிந்து செய்வதைக் காணலாம்.

  • அருளுக்குரியவரை அன்னை தமக்குரியவராக ஏற்றுப் போற்றியவை.
     
  • ஆர்வத்தால் காரின் பின்னால் ஓடி வந்தவனை பல ஆண்டு கழித்து ஏற்று அருள் அனுக்கிரஹம் செய்ததும் அவனுக்கு சித்தப் பிரமையை அளித்தும், அருள் தொடர்ந்து செயல்பட்டது.
     
  • அன்னையையோ, தம்மையோ, அறியாத அயல்நாட்டில் வசிப்பவரை அவர் விருப்பத்திற்கு மாறாக அழைத்து, அவர் எதிர்ப்பை மீறி அரவணைத்து, அவர் இருளை முன் கொணர்ந்து, அவர் மனம் வெதும்பி கசங்கும்பொழுது பொறுமையாக இருந்த அன்னை அவருக்குப் பொறுமையை உணர்த்தி, சேவைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தி, அவர் சேவையின்பொழுது சினங்கொள்வதை ஏற்று, செயல்பட்ட விதம் வெளியிடப்பட்டுள்ளது.
     
  • அரசனாக இருந்த ஜன்மத்தில் நரபலி கொடுத்தவர் கனவில் இறந்த ஆத்மாக்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர் ஆசிரமம் வந்து அருளை நாடிப் பெற்று, பிறகு அருளைவிட்டு விலகி, மீண்டும் அதைத் தேடிவரும் பொழுதெல்லாம் ‘வாழ்வை' அன்னை தம் வாழ்வில் அனுமதித்த விதம்.
     
  • உயர்ந்த ஆன்மவிழிப்புள்ளவர், வேணுகானத்தைக் கேட்பவர், இக்கட்டான வாழ்க்கைச் சந்தர்ப்பத்தில் திருமணத்தையே விழையும்பொழுது அன்னை அவர் ஆன்ம விழிப்பைப் புறக்கணித்து, அறிவின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்து திருமணம் செய்ய அனுமதி வழங்கியது.
     
  • தம்முடன் உள்ள நெருக்கத்தை இருளை வளர்க்கப் பயன்படுத்தியவரை அனுமதித்தது.
     
  • எதற்கும் உதவாத மனிதனை எல்லாப் பொறுப்பையும் ஏற்கச் செய்து முதன்மையாக்கியது.
     
  • பவித்திரமான ஆன்மாவும், சிறுபிள்ளைத்தனமான மேல்நாட்டுப்பழக்கமும் உள்ளவரை அவர் பவித்திரத்தின் மூலம் சிறுபிள்ளைத்தனத்தை மாற்ற முயன்றது.
     
  • தாம் - அன்னை - கூறுவதை எல்லாம் தட்டி நடப்பவருக்கும் அதனால் அவர் சிரமப்படும்பொழுது, அருள் வழங்க மறுப்பதும், அவர் மன்றாடிக் கேட்கும்பொழுது, வழங்குவதும்.
     
  • வீம்புக்கு இலட்சியம் பேசியவர் இலட்சியத்தைப் பூர்த்தி செய்தபொழுது வீம்பு விழிபிதுங்கி இலட்சியம்வேண்டாம், பணம் வேண்டும் என்று அலறியபொழுதும், அலறலைக் கேட்காமலிருந்து, அவர் மனமும் செயலும் மாறியபின், பணத்தைப் பெருவாரியாக அளித்தது.
     
  • அன்னை சேவையை வாழ்வாக ஏற்றவர், முக்கிய நேரத்தில் - அன்னையை - தம்மை விலக்கிய பொழுதும், அவர் சூழலில் உள்ள சேவை மூலம் அவர் காரியத்தைப் பூர்த்தி செய்தது.
     
  • எவருக்கும் கிட்டாத சேவையை எதற்கும் லாயக்கில்லாத மனிதருக்கு 20 வருஷம் அளித்த பின்னும், அவர் சேவையிலிருந்து தானே விலகியதை அனுமதித்து, மீண்டும் சேவைக்கு அழைத்தபடியிருந்தது.
     
  • தீமையின் உருவை, தீண்டத்தகாத ஜன்மத்தை, அருகில் அமர்த்தி அருள் செய்தது.
     
  • பொய்யின் புதுப்புது உருவங்களைச் சிருஷ்டிப்பவருக்கு அவர் "காணிக்கையைப் பறித்து 25 ஆண்டு பொய்க்கு மெய்யின் பலனை அளித்து, பின்னர் பொய்க்கே உரிய பொறுமை வேண்டிய பொறுப்பை அளித்தது.
     
  • போரை நிறுத்தச் சுமுகம் ஏற்படுத்த வேண்டி நிறுவிய இடத்தில் போர் மூட்டிய பெருந்தகையினருக்கு வெற்றிக்கு மேல் வெற்றியளித்தது.
     
  • சுயநலத்தை மட்டும் வெட்கமின்றிப் பாராட்டி வந்தவர்கட்கு அவர்கள் சுயநலம் பாதுகாக்கப்படும் வகையில் நடந்தது.
     
  • புயல் வீசும்பொழுது அனல்போல் தம் மேல்படும் காற்றினால் அவதிப்படும் அன்னையின் சரீரம், அதைப் புண்படுத்தும் இராசிக்காரர்களை நூற்றுக்கணக்காக தரிசனத்திற்கு அனுமதித்தது போன்ற நிகழ்ச்சிகள் இன்று நூற்றுக்கணக்காகப் பிரசுரமாவதை நாம் படித்தால், அன்னை எப்படி மனிதனுள் அருளை அனுமதித்தார் என அறியலாம். அது நமக்குப் பயன்படும்.
ருசி உடல் உணர்வு. உடனே பலன் தருவது. அறிவு மனத்திற்குரியது. எதிர்காலத்தை உணர்த்துவது. ருசியைப் பின்பற்றினால் பின்னால் வரப்போவது தெரியாது. அறிவைப் பின்பற்றினால் அது சரியாக வரும்.
 
ஆன்ம உணர்வை ஏற்றால் காலத்தைக் கடந்து பயன் பெறலாம்.

ருசியைக் கட்டுப்படுத்தி, அறிவின்படி நடப்பது எதிர்காலத்திற்குப் பயன்படும். ருசியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மறுத்து, சமர்ப்பணத்தால் ஆன்மாவைப் பின்பற்றுவது அன்னையை அனுமதிப்பதாகும்.

தம்மைத் தாமே கட்டுப்படுத்த முடியாதவரை சந்தர்ப்பம் கட்டுப்படுத்தும். அதையே நிர்ப்பந்தம் என்கிறோம். ருசியைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், சந்தர்ப்பம் வந்து நிர்ப்பந்தம் செய்வதற்கு முன், இந்த ருசியின் பிரதிநிதிகள் நம்மைச் சூழ்ந்துள்ளதால் அவர்கள் செயலை விரும்பி அனுமதித்தால், பின்னால் நிர்ப்பந்தமாக நடக்க வேண்டியதை நாம் சுருக்கமான முறையில் நீக்கலாம்.

தம் சிறு வயதில் "நான் ஒரு மகானுடன் வாழவேண்டும்" என்று அதிகமாக விரும்பியவர் மகான்களைத் தேடினார். உள்ளூர் கோயிலுக்கு வரும் பல சாமியார்களில் ஒருவரைத் தாம் விரும்பிய மகானாகத் தேர்ந்தெடுத்து, வீட்டிற்கு அழைத்துப் போனார். அவருக்கு ஒரு வகை சித்தியுண்டு. குளிக்க மாட்டார். ஆனால் உடல் வாடை வராது. சிகரட் குடிப்பார். பேசமாட்டார். கொஞ்சநாள் வீட்டிலிருக்கும் பொழுது மகானுக்கு மனித சுபாவம் எழ ஆரம்பித்தது. மகான் என்பதால் பொறுமையாக அனைவரும் அவருக்குப் பணிவிடை செய்தனர். அன்னை அறிமுகமாயிற்று. இவர் அன்பரானார். ஆசிரமம் வர ஆரம்பித்தார். மகானுக்கு அது ஒத்து வரவில்லை. மகான் புறப்பட்டுத் தம்மூர் கோயிலுக்குப் போய்விட்டார்.

ஆசிரமம் வர ஆரம்பித்தபின் இவருக்கு மற்றொரு பக்தர் பழக்கமானார். இளைஞரும், பெரியவரும் பக்தர்களாகப் பழகினர். மகானுடன் வாழ விரும்பிய இளைஞருக்கு அன்னை அருள் பிரவாகமாக எழுந்தது. ஆயிரம் வாய்ப்புகள் வந்தன. ஆன்மீக வாய்ப்புகள் பெரியவை. இளைஞருக்கு விழிப்புற்ற ஆன்மாவுண்டு. அதற்கெதிரானதும் உண்டு. அன்னை சூழலில் விழிப்புற்ற ஆன்மா Life Divine படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், ஆத்மானுபவம் பெறவும், வாழ்வின் சிறப்புகளை அடையவும், பேரும் புகழும் பெறும் சந்தர்ப்பங்களாகவும் ஏராளமாக வந்தன. அவற்றை ஏற்க முடிவு செய்திருந்தால் விழிப்புற்ற ஆத்மா ஜீவன்முக்தன் நிலையை எளிதாகக் கடந்திருக்கும். ஆன்மாவுக்கெதிரான குணம் தலை எடுத்தது.

அதை வெளிப்படுத்தி ஆனந்த நிறைவு பெற முடிவு செய்தார்.

இளைஞருக்கு ஆத்மானுபவ சந்தர்ப்பம், அடுத்தவருக்கு எதிரான சந்தர்ப்பமாயிற்று. அவர் இளைஞரை விட வயதில் பெரியவர்.அவரும் அன்னை அன்பர். இளைஞர் இந்த முடிவை எடுத்தவுடன் இளைஞரின் செயல் தீவிரம் பெற்றது.

பெரியவர் முன்னுள்ளவை இரண்டு.இளைஞரை விலக்குவது அல்லது இளைஞரை ஏற்றுத் தம்மைப் பாதுகாப்பது. அவர் அதற்கடுத்த முடிவை ஏற்றார். "இளைஞரை விலக்கினால் அருள் தந்த சந்தர்ப்பம் விலகும். அவரை ஏற்று என்னைப் பாதுகாத்தால், விரதம் அனுஷ்டித்தும் பலனில்லாமல் போகும். இளைஞர் இஷ்டத்தை நிறைவேற்றட்டும். அது அன்னையை என் வாழ்வினுள் அனுமதிக்கும்" என்று முடிவு செய்தார்.

அதன்பின் இளைஞர் பெரியவர் வாழ்வையும், அவர் வீட்டையும், பொறுப்பையும் தம்மால் இயன்ற அளவு விரும்பி ஆர்வமாக அழித்தார். பெரியவர் நெருப்பாற்றில் எதிர் நீச்சலிட்டார். இளைஞர் கும்மாளமிட்டார். நெருப்பில் குளித்தவர் வாழ்வில் அன்னை அருளாக, அனுக்கிரகமாக, அற்புதமாக உதயமானார்.

இளைஞர் வாழ்வில் அவர் பெரியவருக்குச் செய்த அனைத்தும் பல மடங்காகப் பெருகி வாழ்வைச் சுடுகாடாக்கியது.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமர்ப்பணம் பலிக்க வேலையில் நமது கண்ணோட்டம் மாற வேண்டும்.நாம் செய்வதாகக் கருதுகிறோம்.நம்மை மீறி, அவை சென்ற காலத்து, "தெய்வச் செயல்' என்கிறோம்.அதை மாற்றி நாம் செய்வதையும் தெய்வச் செயலில் சேர்க்க வேண்டும்.

சமர்ப்பணம் மனித செயலை தெய்வச் செயலாக்கும்.

Comments

ஸ்ரீ அரவிந்த சுடர்To be

ஸ்ரீ அரவிந்த சுடர்

To be justified as a paragraph.

சமர்ப்பணம் etc. etc. - ok.

09. பகவானுடைய இதர நூல்கள்

 
 
 
 

In between the main heading and sub-heading - extra space is there.

2nd set of bullet points

bullet point no.5, line 1 - தங்கும்பழக்கம் - தங்கும் பழக்கம் 

          do.         7, line 1 - from தியானம் என to தியானமாகிறது. - separate para.

between the paragraph and the 3rd set of bullet points, no line space is there.

10. சாவித்ரி

 In between the main heading and sub-heading - extra space is there.

para no.1 - after line no. 6 - extra space is there.

       do.       - line no. 11 - திறமைகüல் - திறமைகளில்

        do.      -     do.    12 -  திறன்கüல் - திறன்களில்

         do.  2   -      do     6 - சப்தத்திருந்தே - சப்தத்திலிருந்தே

         do.       -       do.    7 - extra space is there.

எண்ணங்கள் முடிவற்றவை - to be centred.

ஸ்ரீ அரவிந்த சுடர் 

from செல்வம், etc. etc. - as a paragraph

from இரண்டாம் etc. etc.       do.

11. லைப் டிவைன் - கருத்து

from நாத்திகனின் etc. to be started from the margin.

1st set of bullet points -

There is no line space in between the bullet points

bullet point no.1, line 2 - பற்றித்தெரிய - பற்றித் தெரிய

          do.         2,    do. -  என்றுஅர்த்தமாகாது. - என்று அர்த்தமாகாது.

2nd set of bullet points -

bullet point no.2, line 2 -பிறருக்குச்சொல்லவும் - பிறருக்குச் சொல்லவும்

bullet point no.3, line 2 - எரிச்சல்வரும். - எரிச்சல் வரும்.

12. அன்பர் அனுபவம்

para no.1, line no.6 - from நான் T.V., etc. etc. to விட்டுவிட்டுச் சென்றோம்.- separate paragraph.

para no.1, line 13 - சொல் - சொல்லி

para no.2, line 15 - from என் கணவர்  etc. etc. - separate paragraph.

point no.2 - line no.3 - தேதியி-ருந்து - தேதியிலிருந்து 

  do.         2 - after line no.9 - extra space is there.

  do.         2 -       do.           17 -       do.

   do.         2 - line no.24 -  சொல் - சொல்லி     

   do.          3 - after line no.5 - extra space is there.

   do.          6 - after line no.1 & 2 - extra space is there.

13. அன்னை இலக்கியம்

para no.6, line no.1 - படிப்பறி வில்லாதவன்.- படிப்பறிவில்லாதவன்.

para no.6, line no. 4 - from செட்டியார் to மகிழ்ச்சியாயிருந்தது separate paragraph.

para no.13, line no.4 - extra space.

para no.16, line no.4 - from இவர்கள் to கொண்டிருக்கிறாள்.  - separate para.

para no.20 - after line no.5 - extra space is there.

para no.23 - line no.2 - தராம-ருக்க மாட்டார் - தராமலிருக்க மாட்டார்

para no.42, line no.4 - from மாப்பிள்ளைதான் பேசினார். - separate paragraph.

para no.43 - after line no.12 - extra space is there.

14. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

para no.2 - points nos. 2 & 3 are missing.

para no.3, line no.4 - from துறவறம் to தேவைப்பட்டால் - separate line after a single line space.

point a - line no.1 - (மனிதன்) is to come below இல்லறம்

point a - line no.- இன்ப (துன்பங்களுடையது.- இன்ப துன்பங்களுடையது.      

point b - line no.1 - (தவசி) is to come below துறவறம்

point c- line no. 1 - (பூரணயோகி) - is to be come below இல்லறத்தில் துறவறம்

The explanation of the above points have to come after leaving extra margin space.

point c - para 2, line 3 - from பூரணயோகிக்கு - separate paragraph.

point c - para 2, line 4 -from இந்தியர் - separate para

after a to c points -

between para no.1 & 2 - there is no line space.

para no.4- line no.1 - becoming - Becoming

para no.7 - line no.3 -from அண்ணன் -  Mother's - separate para

Under the Table no.5  - Column no. 2 - Tamil lines - between 2nd and 3rd lines - extra space.

Under the Table no.6  - Column no. 2 - Tamil lines - between 2nd and 3rd lines - extra space.

After the Table-

para no.1, line no.5 - from அண்ணன் - இன்று - separate para

do.            line no.11 - from தம்பி - பல  - separate para

do.            line no.12 - from அண்ணன் - separate para

15. மாம்பழத் தோப்பு

para no.2 - line no.5 - from நாமெல்லாம் separate para.

para no.3 - line no.23 - from முதலில்          do.

bullet points -

point no.1 - line no.2 - from முதலிலேயே separate bullet point.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

08. வாழ்க்கையிலும் மற்றும்

08. வாழ்க்கையிலும் மற்றும் (contd.)

2nd set of bullet points (contd.)

point no.11, line no. 1 -  முக்கியநேரத்தில் - முக்கிய நேரத்தில்

          do.         do.    3 -  காரியத்தைப்பூர்த்தி - காரியத்தைப் பூர்த்தி

          do. 12    do.    2 -அவர்சேவையிலிருந்து - அவர் சேவையிலிருந்து

           do. 14    do.    3 - உரியபொறுமை - உரிய பொறுமை

            do. 16    do.    2 - பாதுகாக்கப்படும்வகையில் -

                                         பாதுகாக்கப்படும் வகையில்

            do.   17    do.    2 - அதைப்புண்படுத்தும் - அதைப் புண்படுத்தும்

             do.           do.    3 -  நூற்றுக்கணக்காகதரிசனத்திற்கு -        

                                             நூற்றுக்கணக்காக தரிசனத்திற்கு

              do.           do.     5 - அனுமதித்தார்என - அனுமதித்தார் என

from ருசி உடல் உணர்வு. to  சரியாக வரும்.- no bullet and separate paragraph.

ஆன்ம உணர்வை ஏற்றால்          காலத்தைக் கடந்து பயன் பெறலாம் - no bullet and separate line.



book | by Dr. Radut