Skip to Content

14. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - சைத்தியபுருஷன் என்பதை நம் அன்பர்கள் நன்றாக அறிவார்கள்.அதை எப்படி இங்குக் கொண்டு வருவது?

அண்ணன் - 1) Being, becoming, Being of the becoming

  2) புருஷன், பிரகிருதி, பிரகிருதியின் புருஷன்

  3) ஆன்மா, வாழ்வு, வாழ்வின் ஆன்மா (சைத்திய புருஷன்)

இப்பிரிவினையைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஸ்ரீ அரவிந்தர் கூறும் 3 நிலைகளை - மேலே சொன்னவற்றிற்குரிய நிலைகள் - விளக்க முடியும். எளிய பாஷையில், மேற்சொன்ன மூன்றை - மூன்றும் ஒன்றே.

துறவறம் - இல்லறம் - இல்லறத்தில் துறவறம் என்று கூறலாம். மேலும் விளக்கம் தேவைப்பட்டால்,

a)இல்லறம் (மனிதன்) - இன்று நாம் வாழ்வது, இன்ப துன்பங்களுடையது.  கர்மத்திற்குக் கட்டுப்பட்டது, அதிர்ஷ்டம் நமக்கில்லை, எப்போதோ தானே வரலாம், நல்லது நடக்க வெகு நாளாகும். காலத்திற்குட்பட்டது.(வாழ்வு, பிரகிருதி, காலம்)

b)துறவறம் (தவசி) - தவம், இல்லறத்தின் இடர்ப்பாடுகளற்றது. வாழ்க்கைக்குரியதல்ல, கடவுளை நாடுவது, காலத்தைக் கடக்கவல்லது.(இறைவனுக்குரியது) புருஷன், காலத்தைக் கடந்தது, இறைவன் செயல் விரைவாக நடக்கும்.

c)இல்லறத்தில் துறவறம்  (பூரணயோகி) - துறவியின் தூய்மையுடன் இல்லறத்தை நடத்துவது, இல்லறம் தாழ்ந்தது என்ற மனநிலையிலிருந்து மாறி, இல்லறம் துறவியைப் பூரணப்படுத்தும் என அறிந்து, இறைவனின் கடமைகளை அவன் சார்பில் உலகில் பூர்த்தி செய்வது, காலமும், காலத்தைக் கடந்த நிலையும் சந்திக்குமிடம்.(பூரணயோகிக்குரியது, சைத்திய புருஷன்; காலமும் காலத்தைக் கடந்தநிலையும்சேருமிடம்). Instantaneous miraculousness க்ஷணத்தில் பூர்த்தியாகும் என்று பகவான் கூறும் நிலை.

மனித செயல் பூர்த்தியாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். தவசிக்கு இறைவன் செயல் விரைவில் பூர்த்தியாகும் - வாழ்வில்லை.

பூரணயோகிக்கு வாழ்வில் எந்தக் காரியமும் க்ஷணத்தில் பூர்த்தியாகும்.

இந்தியர் இந்த மூன்றாம் நிலைக்குரிய மனநிலையை நாட்டை அபிவிருத்தி செய்வதில் மேற்கொண்டால் எந்த வேகத்திலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

தம்பி - வாழ்வில் பிரச்சினை தீருவதையும், க்ஷணத்தில் அன்னை தீர்ப்பதையும் நடந்த காரியங்கள் மூலம் விளக்கினால் புரியும்.

அண்ணன் - ஒரு ஏழை கிராமம் வசதி பெறுவது, உலகில் ஆயுதக்குவியலைக் கலைப்பது, ஒதுக்கப்பட்டவன் நிலை உயர்வது, சமூகம் எவரை அழிக்க முயல்கிறதோ அவர் முன்னேறுவது, பிள்ளைகள் படிப்பு வேகம் போன்றவற்றைப் பற்றி நம் அபிப்பிராயம் என்ன?

தம்பி - இதெல்லாம் நடக்காத காரியம், அப்படி நடந்தால் நெடுநாளாகும், பல தலைமுறையாகும்.

அண்ணன் - நீ சொல்லிய பதில் வாழ்வுக்குரியது.இந்நிலையை becoming, பிரகிருதி, வாழ்வு, இல்லறம் என்ற பல சொற்களால் சொன்னோம்.துறவறம் என்பது மோட்சம் பெறும் நிலை என்பதால் அதை நாம் விவரிக்கத் தேவையில்லை.

தம்பி - பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைத் துறவறமும், இல்லறமும் இணைந்த நிலையாக நான் புரிந்து கொண்டேன்.

அண்ணன் - நிதானமான குடும்பஸ்தன் கட்டுப்பாடாக நடப்பதை நாம் அறிவோம்.கட்டுப்பாடு எனில் ஆசை, கோபம் எழுவதைக் கட்டுப்படுத்துவதாகும்.அது போன்றவை எழாமல், கட்டுப்பாடு தேவைப்படாத நிதானம் சமத்துவம் எனப்படும்.அந்நிலையில் சைத்திய புருஷன் வெளிப்படுகிறான்.அம்மன நிலையில் செயல்படும் பொழுது காரியங்கள் அபரிமிதமாக வெற்றி பெறுகின்றன.

தம்பி - அம்மனநிலையில் காரியங்களைச் செய்தால் நம் பத்திரிகை விற்றதுபோலிருக்கும் அல்லவா?ஒரு பிரதிகூட விற்க முடியாது என்பது போன்ற பத்திரிகை அளவுகடந்து விற்றதல்லவா?

அண்ணன் - Mother's Force அன்னை சக்தி அம்மனநிலை - சமத்துவம், நிதானம் -மூலம் செயல்படுகிறது.நாட்டின் முன்னேற்றம் விரைவாகப் பூர்த்தியாக தலைமை அதுபோல் செயல்பட வேண்டும். அப்பொழுது அன்னை சக்தி உள்ளே வரும்.இந்தியருடம்பில் ஒளி அன்னை சக்தி செயல்பட உதவும்.குடும்ப முன்னேற்றத்திற்கும் சட்டம் அதுவே.

தம்பி - இன்று நாம் செயல்படுவதையும், நாம் இருக்க வேண்டிய நிலையையும் ஒப்பிட்டுக் காட்ட முடியுமா?

அண்ணன் -

இன்று நாமுள்ள நிலை               

இருக்க வேண்டிய நிலை

1. Casual

கவனமற்ற, கவலையற்ற நிலை

Fully serious

பொறுப்பான, இலட்சிய மனநிலை

2.Scattered attention

மனம் நிலைப்படாமல் இருப்பது

Concentrated attitude

இலட்சியமே குறியாக இருப்பது                 

3.ஆசை, கோபம் வருவது,வந்து கட்டுப்படுத்துவது

அவை எழாத நிதானம்

4.பிரச்சினை வந்தால் அன்னையை அழைப்பது

இடையறாத நினைவு

5.சூழலைக் கவனிப்பதில்லை

சூழலைச் சூட்சுமமாகக் கவனிப்பது

6.சமர்ப்பணமற்ற செயல் வேலையை ஆரம்பித்த பின் சமர்ப்பணம் செய்தல்

சமர்ப்பணமே முதற்கடமை முடிவும் சமர்ப்பணமேயாகும்.

தம்பி - சில சமயம் பெரிய காரியங்களும் எளிதாக நடந்து விடுகின்றன.சிறிய காரியங்களும் நடப்பதில்லை.ஏன்?உதாரணமாக இப்பொழுது கரண்ட் 1½ மணி நேரமாக இல்லை.நான்கு, ஐந்து பேர் கூப்பிட்டுப் பார்த்தனர்.4, 5 முறை கூப்பிட்டால் வரும் கரண்ட், 1½ மணியாக வரவில்லை.

அண்ணன் - இன்று ஏன் கரண்ட் வரவில்லை என எனக்குத் தெரியும். காரணங்கள் ஆயிரம்.பொதுவாகச் சொல்வது கஷ்டம்.இன்று 6பேர் உட்கார்ந்து கரண்டைக் கூப்பிடுகிறார்கள்.அவர்கள் உட்காருமுன் என்ன சொன்னார்கள் தெரியுமா?"வரும், கரண்ட் வரும், பாரேன்" என்றார்கள்."கரண்ட் கூப்பிட்டால் வரும், வரும், பாரேன்" என்றால் வராது, எதிர்பார்த்தால் வராது.ஒரு முறையை வலியுறுத்தினால் முறை சக்தியை இழக்கும்.

தம்பி - பல காரணங்களுண்டு என்றீர்களே, சிலவற்றைச் சொல்லுங்கள்.

அண்ணன் -1) எதிர்பார்ப்பது.

2)Challenge செய்வது, வருதா, இல்லையா எனப் பாரேன் என்பது.

3) நான் கூப்பிட்டால் வரும் என்பது - egoistic attitude.

4) நம்பிக்கையில்லாமல் கூப்பிடுவது.

5) வீடு முழுவதும் அசுத்தமாயிருந்தால் கரண்ட் இதுபோல் வாராது.

அன்னைக்குப் புறம்பான எந்த விஷயமும் ஊன்றிப் போன இடங்களில் அருள் செயல்படாது.

தம்பி - இது சிலருக்குத்தான் முடியுமா?எல்லோராலும் முடியுமா?

அண்ணன் - எல்லா விஷயமும் எல்லோராலும் முடியும்.ஒருவரால் முடியும், அடுத்தவரால் முடியாது என்பதே பொது விதியில் இல்லை.அன்னையை அறிந்த முதல் இந்தச் சக்தி வந்து விடும்.நாளாகும் என்பதேயில்லை.எல்லா திறமைகளும் (கரண்ட்டைக் கூப்பிடுவது போன்றவை) ஆரம்பத்திலேயே வரும்.

தம்பி - இதெல்லாம் கட்டுரையாக எழுதினால் புரியாது, கதையாக எழுதினால் புரியும்.

அண்ணன் - கதை மூலம் நன்றாகச் சொல்லலாம்.அனுபவம் என்பது ஒருவருக்கு ஓர் அனுபவம் வருகிறது.எல்லா அனுபவமும் ஒருவருக்கே வராது.அதைப் பார்த்துப், புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்தால் கதை எழுத வருமா?கதை எழுதுபவருக்கும் புரியவேண்டும்.அன்னை பக்தராக இருந்து, இதெல்லாம் புரிபவர் கதை எழுதக் கூடியவரானால், ஒரு நீண்ட நாவல் எழுதினால் போதும்.எல்லா சட்டங்களும் அதனுள் அடங்கும்.அம்முயற்சி 25 வருஷமாகப் பலிக்கவில்லையே. இலக்கியம் சக்தி வாய்ந்தது.இலக்கியத்தைச் சரிவரப் பயன்படுத்தினால், அதாவது பயன்படுத்தியிருந்தால், பிரெஞ்சுப் புரட்சியைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் ஓர் ஆசிரியர்.

தம்பி - அன்னையின் கொள்கைகள், வாழ்வின் எதிரொலி, ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களை உலகப் பேரிலக்கியங்களைப் படித்தவர்கள் அவை மூலம் எளிதில் அறிய முடியும்.

- தொடரும்.

********

அடுத்த மாதத்தில் வரும் தரிசன நாள்

April 24

அன்னை பாண்டியில் நிலையாகத் தங்க வந்த நாள்

 



book | by Dr. Radut