பகவானுடைய இதர நூல்கள்
வாழ்வுக்குரிய சட்டம்போல் மனத்திற்குரிய சட்டங்களும் உண்டு. ஆன்மாவுக்குரிய சட்டங்களும் உள்ளன. சிலவற்றை மட்டும் உதாரணமாக எழுதுகிறேன். நீண்ட விளக்கமின்றிச் சுருக்கமாக எழுதுகிறேன்.
- நமக்கு வரும் அத்தனைத் தொந்தரவுகளும், நம்மால் பயனடைந்தவர்களால் மட்டுமே வரும்.
- ஒரு நல்ல காரியம் செய்தால், பெற்றவர் அதை மறந்துவிட்டாலும், அந்தக் காரியம் நம்மை மறக்காது. அதே குணமுள்ள மற்றொருவர் மூலம் நமக்குரிய பலன் வரும்.
- பலனை எதிர்பார்த்தால், எதிர்பார்த்த அளவு பலன் வரும்.
- பலனை எதிர்பார்க்காவிட்டால், அதிகப் பலன் வரும்.
- நாய் விற்ற காசு குலைக்குமா என்பது பழமொழி - நிச்சயமாகக் குலைக்கும். பணம் எந்த வழியாக வருகிறதோ, அதேபோல் செலவாகும்.
- நல்ல முறையில் சம்பாதித்த பணம் கடனாகக் கொடுக்கப்பட்டால் தவறாது வரும். கேட்காமலும் வருவதுண்டு.
மேற்சொன்னவை வாழ்வுக்குரியவை. மனத்திற்குரியவை சில.
- கேட்டால் கிடைக்காது, எதிர்பார்த்தால் கிடைக்காது. கேட்காவிட்டால் கிடைக்கும்.
- வாய் விட்டுப் படித்தால் கொஞ்சம் புரியும். மௌனமாகப் படித்தால் அதிகம் புரியும்.
- சிந்தனை பலன் தரும். சிந்திக்காவிட்டால் அதிகமாகப் புரியும், அதிகமாகப் பலன் எழும்.
ஆன்மாவுக்குரிய சில சட்டங்களும் உண்டு.
- பிரியம் எவர் மீதுண்டோ அவர் வியாதி, கர்மம், அதிர்ஷ்டம், குணம், நம்மை நாடி வரும்.
- பரோபகாரம் செய்தால் பெற்றவர் துரோகம் செய்வார்.
- ஆண்டவனுக்குச் சேவை செய்ய விரும்பினால், அதை யாருக்குச் செய்தாலும் சேவையை அவர் மூலம் ஆண்டவன் பெற்றுக் கொள்வார்.
அன்னைக்குரிய சட்டங்களில் சில.
- பணம் செலவு செய்தால் பெருகும்.
- நமக்கு எப்பொருள் அபரிமிதமாகத் தேவைப்படுகிறதோ, அதை நல்ல மனதுடைய அன்னை அன்பருக்குக் கொடுத்தால், அப்பொருள் நம்மை நாடி அபரிமிதமாக வரும்.
- சேவை என்பதை ஆண்டவனுக்கு மட்டும்தான் செய்யமுடியும்.
- நாம் மனத்தால் அன்னைக்குரியவராக மாறுவதுதான் அச்சேவை.
- பொருள்களுக்கு ஜீவன் உண்டு.
- ஜீவனோடு பொருள்களைக் கவனித்தால் அவை நம்மிடம் பேசும், உறவாடும், ஒட்டிக் கொள்ளும்.
- உடலுக்கு உயிரிருப்பதைப்போல், மனம் உண்டு, ஆத்மாவுண்டு, சைத்தியபுருஷனுண்டு.
- மானுடர் அனைவருக்கும் ஒரே மனம், ஒரே உயிர், ஒரே ஆன்மா, ஒரே உடலாகும்.
- காலம் உடலுக்கும், உணர்வுக்கும் வேறுபட்டது.
- உடலுக்குரிய காலம் 1 நிமிஷம் 1 மணியாக நகரும்.
- உணர்வுக்குரிய காலம் 1 மணி 1 நிமிஷமாக ஓடும்.
- அன்னை சக்தி செயல்படும்பொழுது ஜடத்திற்குள்ள சட்டங்களை மீறும். (தண்ணீர் பள்ளத்திலிருந்து மேட்டுக்குப் போகும்)
- ஒருவர் நம்மை நாடி வரவேண்டுமானால், அவர் உணர்வுடன் தொடர்பு கொண்டால் அது முழுமை பெறும் நேரம் அவர் நம்மை நாடி வருவார்.
- ஒரு பொருள் அபரிமிதமாகப் பெருகவேண்டுமானால் அதன் ஆத்மீகம் நமக்குத் தெரியவேண்டும் (1லிட்டர் அரிசியில் 5 பேர் பசியாறுவது வழக்கமானால் அதன் ஆத்மீகம் தெரிந்தால் 8 பேருடைய பசியை அது ஆற்றும்).
- Login to post comments