Skip to Content

09. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

N. ரவி, சிதம்பரம்

ஸ்ரீ கர்மயோகி அவர்களின் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீ அன்னை முறைகளை பயன்படுத்தி செயல்பட்டதன் விளைவாக ஏற்பட்ட அனுபவங்கள்:

ஒவ்வொரு வருடமும் Diary Season-க்காக செய்ய வேண்டிய ஆர்டர்களை செப்டம்பர் மாத இறுதியில் செய்வதுண்டு. இவ்வருடமும் 2013 சீசன் ஆர்டர் 2012 செப்டம்பரில் ஆர்டர் கொடுத்துவிட்டேன். ஆர்டர் மதிப்பு சுமார் 70,000/- ரூபாய் இருக்கும். அதற்குமேல் தேவைப்பட்டால் உடன் வருவித்து விற்பனை செய்வதுண்டு.

சென்ற வருடம் 90,000/- ரூ. (2012) sales செய்து இருந்தேன். தானே புயலில் கடலூர் மாவட்டமே ஸ்தம்பித்த வேளையில் அன்னையிடம் சமர்ப்பணம் செய்து diary-களை 95% விற்றது சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் மற்ற கடைகளில் பாதிக்குமேல் தேங்கிவிட்டதாகச் சொன்னார்கள். இந்த வருடம் ஆர்டர் கொடுத்தபின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்- கழகத்தில் நிதி நெருக்கடி, சம்பளக் குறைப்பு என total sales மிகவும் குறைந்து கஷ்டப்பட்ட நேரத்தில் அன்னையிடம் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்து நிலைமையைப் பூர்த்தி செய்து கொண்டு வந்தேன்.

Jan. 2013 மீண்டும் காலேஜ் திறந்து இயங்க ஆரம்பித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளக் குறைப்பு, நிதி நெருக்கடி காரணமாக diary sales முன்னேற்றம் இருக்காது என்ற பேச்சுகளால் பயம் வேறு. அந்த நேரத்தில் நமக்குதான் Mother's Grace இருக்கிறதே என்ற தெளிவான நம்பிக்கையில் மேற்படி அபிப்பிராயங்களை எல்லாம் கஷ்டப்பட்டு ஒதுக்கி வைத்துவிட்டு அன்னையிடம் diary sales-ஐ சமர்ப்பணம் செய்துவந்தேன். அந்த சமயத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஓர் ஆன்மீக சொற்பொழிவிற்கு அழைப்பு வந்திருந்ததால் அதைக் காண ஆவல் ஏற்பட்டு கடையிலிருந்து ஒரு நாள் மாலை 6 மணிக்குச் செல்லத் தயாரானபொழுது, அங்கு செல்ல முடியாதபடி sales நடக்க ஆரம்பித்தது. மீண்டும் அரை மணி நேரம் கழித்து செல்ல முயன்ற போது ஒருவர் diary வேண்டும், model காண்பியுங்கள் என்றார். அப்போது மனதில் ஒரு மாற்றம் கிடைத்தது. உடனே bundle-களைப் பிரித்து அனைத்து model-களையும் display செய்தோம். Model பார்த்தவர் உடனே ரூ. 2000/- மதிப்பிற்கு 20 diaries வாங்கிக் கொண்டார்.

சில நாட்கள் கழித்து எங்கள் கடையில் ரெகுலராக வாங்கும் customer-களைத் தேடிப் போய் order கேட்டேன். ஆனால் அவர்கள் இந்த வருடம் diary வாங்கவில்லை எனவும், பிறகு வாங்கிக் கொள்கிறோம் எனவும் காரணம் கூறினர். மறுபடியும் திகைப்பாக இருந்தாலும் அன்னை நினைவு மேலிட நம்மால் முடியாத போதுதான் அன்னை நினைவு வருகிறது என்று எண்ணி மனதை அமைதிப்படுத்திக் கொண்டேன். புதிய நபர்கள் மூலம் diaries விற்க ஆரம்பித்தது. Corporate கம்பெனி (Power Plant) order 60 diaries ரூ.7000/- மதிப்பிற்கு கிடைத்தது. அந்த கம்பெனியின் நபர் வாயிலாக ரூ.15,000/- ஆர்டர் கிடைத்தது. கவுன்ட்டர் sales-உம் மிகவும் துரிதமாக நடந்தது. நான் நினைத்து (plan) வைத்திருந்த வாடிக்கையாளர்களைத் தவிர புதிய வாடிக்கையாளர்களால் அதாவது அன்னையின் அருளால் வந்த வாடிக்கையாளர்களால் sales ஆனது மிகவும் பிரமிப்பாக இருந்தது. இவ்வாறாக diary sales ரூ.1,14,000/-ஐ எட்டியது.

இதைத் தொடர்ந்து மாம்பலம் தியான மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு தியானம் முடிந்து கிளம்பும்முன் 150 files folder கேட்டு ஆர்டர் வந்தது. நான் கடையில் இல்லை. இருந்தாலும் அந்த மையத்தில் அன்னையிடம் கேட்டுக் கொண்டேன். உடனே எனக்கு போன் கால் மூலம் file folders-க்கு பதிலாக pen set or pen drive தேவை எனவும் arrange செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த ஆர்டர் பூர்த்தி செய்யத் தேவையான item-களை phone மூலம் தொடர்பு கொண்டு, கடையின் பணியாளர் மற்றும் எனது மகன் மூலம் supply செய்தோம். இந்த ணிணூஞீஞுணூ மதிப்பு ரூ.17,000/- ஆகும். இந்த நிகழ்வு மூலம் நான், என் ஸ்தாபனம் அனைத்தும் அன்னையின் அருட்சூழலில் உள்ளதாகப் புரிந்து கொண்டேன்.

இவ்வாறாக, என் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஸ்ரீ அன்னை அருள் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ அன்னையின் முறைகளை பின்பற்றும் போது கிடைக்கும் பலன் மிகுதியாக இருந்தாலும் என்னுடைய பக்கம் தீவிரத்தை அதிகப்படுத்துதல் வேண்டும். அதைத் தொடர்ந்து செய்ய இயலவில்லை. இந்தக் கடிதம் எழுதும் தருணத்தில் மணிக்கொரு முறை அன்னை நினைவு என்பதை செய்திட வேண்டி எனக்குள் உறுதி கொள்கிறேன்.

ஸ்ரீ அன்னை வழிப்படி நடக்கவும், வாழ்வை அன்னை மையமாக நடத்தவும் காரணமாக உள்ள தங்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொதுவாக மனிதனுக்குத் தன் குறை தெரிவதேயில்லை. சில சமயங்களில் தன் பெருமையும் தெரியாமல் இருப்பது உண்டு. தம்மைப் பற்றித் தலைகீழாக நம்புபவர் பலர். தம்மிடம் உள்ள குறையைப் பிறரிடம் மட்டும் காண்பவர் சிலர். ‘நான் உயர்ந்தவன். என்னால் பலரும் நன்மை அடைகிறார்கள் என்பது என் அபிப்பிராயம்’ என்று நம்புபவர் இதுவரை தன்னுடன் இருந்தவர்கள் நிலையை நினைவுபடுத்திப் பார்த்தால் உண்மை புரியும். தன்னையே முழுமையாக அறியாத மனிதன் பிறரை அறியமுடியாது. சத்திய ஜீவியத்தில் மனிதன் தன்னைப் பூரணமாக அறிவான். அதேபோல், பிறரையும் பூரணமாக அறிவான். மனிதன் பிறர் வாழ்வில் கலந்து பூரிக்கிறான். சத்திய ஜீவன் பிறர் ஆத்மீக வாழ்வில் கலந்து வளர்கிறான்.

தான் ஒரு ஆன்மா என்று அறிந்த மனிதர் இல்லை. அது தெரிந்தால் அவர் ரிஷியாகி விடுகிறார்.

நல்லவனும் கெட்டவனும் தன்னை அறிந்து, பிறரையும் அறிய அன்னை ஜீவியத்தை ஏற்க வேண்டும்.

********



book | by Dr. Radut