07. அன்பர் அனுபவம்
அன்பர் அனுபவம்
ராதிகா வெங்கடாசலம், சென்னை
ஸ்ரீ அன்னைக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும் இக்கடிதத்தை சமர்ப்பணம் செய்கிறேன்.
என் பெயர் ராதிகா. நாங்கள் அம்பத்தூர் தியான மையத்திற்கு கடந்த ஒன்பது வருடங்களாகச் சென்று அன்னையை வணங்கி வருகிறோம். என் கணவர் இன்று உயிருடன் இருப்பதே அன்னையின் அருளால்தான். தியான மையம் நடத்திக் கொண்டிருக்கும், திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் மூலமாகத்தான் நாங்கள் அன்னையைப்பற்றி தெரிந்துக் கொண்டோம். என் மகள் கல்லூரியில் படிக்கும்பொழுதே அவளுக்குக் கேம்பஸில் வேலை கிடைத்தது. 1லீ வருடங்களாக கேம்பஸில் வேலை கிடைத்த கம்பெனி கூப்பிடவில்லை. தியான மையத்தில் பரமேஸ்வரி என்ற சேவை அன்பர் எங்களை சாவித்ரி, ஸ்ரீ அரவிந்தரின் காவிய இதழ்கள், லைப் டிவைன் விரிவுரைகள், அன்னையின் அருள் என்ற நான்கு புத்தகங்களையும் தினமும் படித்துக் கொண்டு வரச் சொன்னார்கள். அதேபோல், நான் தினமும் படித்துக் கொண்டு வந்தேன். படிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே கேம்பஸில் தேர்வு செய்த கம்பெனியே கூப்பிட்டுவிட்டார்கள். அன்னைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அம்பத்தூர் தியான மையத்தை நடத்தி, எங்களைப் போன்ற அன்பர்களுக்கும் பிரார்த்தனையின் வழி கூறும் திரு. பாலசுப்ரமணியன் மற்றும் அன்பர் பரமேஸ்வரி அவர்களுக்கு மறுபடியும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நன்றிகள் அன்னையே.
********
- Login to post comments