Skip to Content

04. அஜெண்டா

அஜெண்டா

வியாதியைக் குணப்படுத்தும் திறமை

  • மகான்கள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள்.
  • அவர்கள் கை பட்டால் வியாதி குணமாகும், பாவம் கரையும் என்று மக்கள் ஸ்பர்சத்தைப் போற்றுவதுண்டு.
  • தட்சிணாமூர்த்தி சுவாமி பெரு வியாதி வந்த பெண் மீது காறித் துப்பியதால் பெரு வியாதி மறைந்தது.
  • பிராணாயாமம் 5 ஆண்டு செய்தவர் கையில் உள்ள அக்னி எந்த வியாதியையும் குணப்படுத்தும் என்று கூறுவார்கள்.
  • அன்னை குணப்படுத்தும் சக்தியைப் பற்றிய சோதனைகள் செய்தார்.
  • அவர் செய்த சோதனை உடலில் உள்ள செல்கள் சுமுகம் பெற்று ஞானம் பெறுவதால் எழும் திறமை.
  • ஒரு சொல்லுக்கு அர்த்தம் வேண்டுமானால் அகராதியைப் பார்த்து அறிகிறோம்.
  • ஒருவர் அகராதி முழுவதையும் மனப்பாடம் செய்து அதை நிறைவேற்றுவது அசாதாரண காரியம்.
  • மனப்பாடமே செய்யாமல் அந்த ஞானம் பெற அகராதி எழுதியவராலேயே முடியாது.
  • கிடைக்காத அட்மிஷனை நிறைய மார்க்கால் பெறுகிறோம்.
  • பின் தங்கிய ஜாதிச் சலுகையால் குறைந்த மார்க்கால் பெறலாம்.
  • பிரின்சிபால் உறவினர், அவர் தயவால் பெறுகிறோம்.
  • கல்லூரிக்குப் பணம் கொடுத்துப் பெறலாம்.
  • ஆபீஸ் கிளார்க் அட்மிஷன் லிஸ்ட்டில் ஒரு பெயரைத் திருட்டுத்தனமாக மாற்றி மற்றொருவருக்குக் கொடுக்கலாம்.
  • கல்லூரி நிர்வாகம் மாணவன் சிறந்த கிரிக்கெட் விளையாடுபவன் என அழைத்துக் கொடுப்பதுண்டு.
  • மாணவன் மாநிலத்தில் முதலாக வந்ததால், பல கல்லூரிகளும் போட்டி போட்டு அவனை நாடுவதும் அரிபொருளாக உண்டு.
  • அது போல் வியாதி குணமாவது, பிரச்சினை தீர்வது உலகில் பல வகையாக உண்டு.
  • உயர்ந்த முறைகள், தாழ்ந்த முறைகள் பலிக்கும்.
  • தவறான முறைகளும் அதிகமாக பலிக்கும்.
  • தடுப்பு ஊசி உடலில் வியாதியை எழுப்பி உடலுக்கு அந்த வியாதியை சமாளிக்கும் திறன் தருகிறது.
  • நல்ல ஆரோக்கியம் உள்ள உடலில் வியாதி இயல்பாக நுழைய முடியாது.
  • உயர்ந்த ஜீவியம் உள்ளவருக்குத் தடுப்பு ஊசி தேவையில்லை. தடுப்பு ஊசி அவருக்குத் தவறான உடல்நிலையை, பலஹீனமாகத் தரும்.
  • டெல்லியில் உள்ளவரிடம் போனில் பேசுகிறோம். ஈமெயில் பெறுகிறோம். அவை டெலிபதியாகாது.
  • அன்னை செய்த சோதனை உடலின் செல்கள் ஞானம் பெற்று சுமுகமாக சரணாகதியை ஏற்பதால் எழும் திறன்.
  • பார்வைக்குப் பலன் ஒன்றாகத் தெரியும்.
  • உள்ள நிலையின் உயர்வு வேறு.
  • வலியுள்ள இடத்தில் அவர் உடலிலேயே அவர் கை பட்டால் வலி மறைகிறது எனக் கண்டு அன்னை ஆச்சரியப்பட்டார்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அற்புதம் அன்றாடம் நடப்பது தெய்வீக வாழ்வு.
 

******



book | by Dr. Radut