07. லைப் டிவைன் - கருத்து
லைப் டிவைன் - கருத்து
பிரம்மத்திற்கும் உலகிற்கும் உள்ள பிரிவினையை நாம் கடப்பது அவசியம்
- மரபு இறைவன் உலகை சிருஷ்டித்தான் என்கிறது.
- குயவன் பானையைச் செய்தால் குயவனும், பானையும் வேறு, வேறு.
- ஸ்ரீ அரவிந்தம் இதை மாற்றி இறைவன் தானே உலகமானான் என்கிறது.
- இதனால் உலகம் வேறு, இறைவன் வேறு என்பது மாறி உலகமே இறைவன், உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் இறைவன் - சர்வம் பிரம்மம் - என்றாகிறது.
- உலகில் பொருள்கள் ஜடமாகவும், செயல்கள் சலனமாகவும், ஞானம் எண்ணமாகவும் தோன்றுகின்றன.
- அவை தோற்றம்.
- தோற்றம் எதுவானாலும், விஷயம் ஒன்றே. அனைத்தும் பிரம்மம்.
- மனிதனுக்கு மூன்று அம்சங்கள் உள.
- அவை உலகுக்குரிய ரூபம் (individual).
- பிரபஞ்சத்திற்குரிய பொதுத்தன்மை (universal).
- கடந்ததற்குரிய பிரம்மம் (Absolute transcendence).
- இம்மூன்றையும் பகவான் ஜீவியத்தின் பொது ரூபங்கள் என்கிறார்.
- நாமறிந்த அம்மனிதனுக்கும் அம்மூன்று அம்சங்கள் உள.
- குடும்பம் நடத்தும் தனி மனிதன்.
- ஊருக்குரிய பொது மனிதன்.
- பிரம்மத்திற்குரிய பரம்பொருள் அம்சம்.
- சிருஷ்டி என்பது ஒரே அம்சத்தாலானதல்ல.
- உலகம் முழுவதும் ஜடமாகவோ, உயிராகவோ, பிரம்மமாகவோ இருந்தால் ருசிக்காது.
- பல அம்சங்கள் பல நிலையில் வந்து கலந்து மிளிர்வது உலகம்.
- சங்கீதம் என்றால் என்றும் ஒரே பாட்டு, உடை எனில் தினமும் ஒரே உடுப்பு, சாப்பாடு எனில் தினமும் ஒரே உணவு என்றில்லை.
- அவை பலதரப்படுவதால் ரஸம் எழுந்து வாழ்வு ருசிக்கிறது.
- விளையாட்டு, படிப்பு, கதை, நாடகம், பொழுதுபோக்கு ஆகியவற்றில் பலவகை எழுவதால் வாழ்வு சிறப்படைகிறது.
- பல்வேறு பண்புகள் மொழிகளாக நாடு பிரிந்து கலந்து உயிர்த்தெழுந்து சிறப்பாகும் பரிணாம முயற்சியை இயற்கை இந்தியாவில் மேற்கொண்டதால் அதற்குரிய அடிப்படை ஐக்கியம். நாடு ஒருமைப்பட வேண்டி இயற்கை அந்நிய ஆட்சியை 600 ஆண்டுகட்கு முன் நாடியதாகப் பகவான் கூறுகிறார்.
- அதுவே நாட்டின் கலாசாரச் சிறப்பு.
*******
- Login to post comments