05. சாவித்ரி
சாவித்ரி
P.123 But here were world's half-way to heaven
மோட்சப் பாதையின் மேலான லோகங்கள்
- திரையிருக்கிறது ஆனால் நிழல் போன்ற சுவரில்லை;
- அவை மனிதனுக்குப் பிடிபடும் ரூபங்கள்
- கறைபடாத தூய்மையை நாடும் தீவிரம்
- மூலத்தின் ஆனந்தம் முகத்தைக் காட்டியது.
- பூமியின் தூய்மை மோட்ச உலகின் ஆனந்தம் பெற்றுத்தரும்.
- அது இதயம் இறைவனையறியும் உணர்வாகும்
- இயற்கை எழிலின் ஜோதியின் சிகரம்,
- இயற்கையைக் கடந்த பிரம்மத்தின் புல்லரிப்பு:
- புவியின் கடின பாதைகளில் வலிமை கொண்டாடும் கொக்கரிப்பு
- வலியின் கொடுமையை அனுபவித்தறியாத,
- அன்பின் லீலை அகன்று வெட்கத்தைக் கடந்த இயற்கை.
- ஜடத்தின் சபைகளில் கொட்டாரமடித்த கனவுகள்
- என்றாலும் இறைவனின் கோயில் கதவு மூடப்பட்டது.
- இறைவன் விடும் மூச்சு தழுவும் உலகங்கள்;
- பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்தின் ஆடையின் அலங்காரம்.
- யுகாந்த மௌனத்தின் வெண்ணிறப் பரப்பு
- ஜீவன் பெற்ற ஆனந்தத்தின் அமரத்துவ ரூபங்கள்
- பரந்த லோகங்களைக் கடந்து வரும் பிரம்ம உறக்கம்.
- புதிரான குரலின் ஆனந்தமடங்கும் ஒர்
- புனித இனிமையின் அன்பு அழைக்கிறது,
- உலகத்தின் உடல் புல்லரிக்கத் தீண்டும் தேனின் சுவை,
- இயற்கையின் உடலைத் தழுவும் பொங்கிவரும் ஆனந்தம்,
- காப்பாற்றும் கரங்கள் அணைத்துப் பிடித்த லோகம்
- எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத ஏற்றமிகு தோற்றம்,
- மனிதன் மறுக்கும் ஆனந்தத்தை வலிய அளிக்கும்.
- காணாத தெய்வத்தைக் கை தட்டி அழைக்கும் குரல்,
- தழலாக எழும் கானம், வெண்ணிற ஆசை
- வையகத்தின் இசையை வைத்திருக்கும் நெஞ்சம்
- உறங்கும் காதில் ஒலிக்கும் பூரிப்பு.
- தூய்மை நெருப்பாக உணர்த்தும் உறவு நிறை வீடு,
- மனித உடலறியாத மகிமை நிறைந்த வேகம்;
- பரந்து விரிந்த சக்தி பாரமற்று செயல்படும்
- தாளம் பூரித்துத் தழைக்கும் இன்பம்.
- காலம் கனிந்து பாடும் கானம் இறைவனின் மகிழ்ச்சி;
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் மேல்மனத்தின் எந்நிலையிலிருந்தும் அழைப்பது நம் முயற்சி. அதைத் தாண்டினால் அழைப்பு நிற்காது. தானே எழும். |
*****
- Login to post comments