08. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- இனாமாக வருகிறது என்றால் எதையும் கேட்பான்.
- இறைவன் அழைப்பை ஏற்பவரில்லை.
- நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
- அன்பர் ஒருவர் செய்வது அனைத்துலகம் பெறுவது.
- தாமரை இலைத் தண்ணீர்போல.
- வாழ்வால் பாதிக்கப்படாமல் வாழவேண்டும்.
- நீர்க்குமிழி.
- சமர்ப்பணமாகாத சித்தி நீர்க் குமிழியாகும் - நிரந்தரமான நீர்க்குமிழி.
- பெண்புத்தி பின்புத்தி.
- ஆன்மா முன்னேயறியும். மனம் அறியும் பின்னே.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் தாழ்ந்தவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை சமூகத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்தால் புரட்சி வெற்றியடையும். |
******
- Login to post comments