Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV 

கர்மயோகி

766) The Life Divine நூல் மேலே போகப் போக கருத்தின் கம்பீரத்தை பகவான் உயர்த்துகிறார். ஆரம்பத்தில் பகுத்தறிவுக்கு விளக்கம் அளிக்கிறார். அடுத்தாற்போல அறிவு ஞானமாவதைக் காட்டுகிறார். பின் பகுதியில் பரம்பொருளை விளக்குகிறார். அறிவு பரம்பொருளை எட்டமுடியாது. போகப் போக நூல், கருத்தின் நிலையை உயர்த்துவதால், வாசகரும் தம் அறிவு நிலையை உயர்த்த வேண்டும். இல்லை எனில் நூல் விளங்காது.

கருவியை உயர்த்தும் கருத்து.

The Life Divine கடினமான தத்துவ நூல். படிப்பவர் நிலையை உயர்த்தும் வகையில் நூல் அமைந்துள்ளது. முதல் அத்தியாயத்தைப் படிப்பது சுலபம். அதிலும் முக்கியக் கருத்துண்டு. மற்ற அத்தியாயங்களைவிட எளிது. இதன் கருத்தை மனதில் ஏற்றுக்கொண்டால் பின்வரும் அத்தியாயங்களில் வரும் கடினமான கருத்துகள் விளங்க உதவும். நூல் கடினமானது என்றாலும், படிப்பவர் திறமையைப் படிப்படியாக உயர்த்துமாறு அத்தியாயங்களும், அங்குள்ள கருத்துகளும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கும் கருவியான மனிதனின் திறமையை உயர்த்துமாறு எழுதப்பட்ட நூல் The Life Divine.

****

767) கடைசி அத்தியாயங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் நூலின் பல பகுதிகளில் பகவான் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கின்றார்.

முதலிலேயே வரும் முடிவு.

The Life Divine எழுதிய முறையில் பல சிறப்புகளுண்டு. அவற்றுள் ஒன்று முடிவில் உள்ள கருத்துகளை முதலிலேயே அறிமுகப்படுத்துவது. உதாரணமாக ஓர் அத்தியாயம் முழுவதும் விவரித்த கருத்தை அடுத்த அத்தியாயத்தில் முதலில் ஒரு பாராவாக எழுதுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் அதையே ஒரு வாக்கியத்திலும் குறிப்பிடுகிறார். சற்று பின்னே சென்றால் அதை ஒரு சொல்லாலும், சொற்றொடராலும் எழுதுவது ஸ்ரீ அரவிந்தரின் பாணி. அதனினும் சிறப்பு அக்கருத்தை முன்வரும் அத்தியாயங்களில் கருத்தின் வித்தாக அறிமுகப்படுத்துவதாகும்.

****

768) பகுத்தறிவிலிருந்து பரம்பொருளுக்கும், அதிலிருந்து ஆன்மீக மனம் பரம்பொருளை அறியும் நிலைக்கும் நம்மை பகவான் அழைத்துச் செல்கிறார்.

பகுத்தறிவு கண்ட பரம்பொருள்.

பகுத்தறிவு பரம்பொருளை அறிய முடியாது என்பது உலகத்தின் கருத்து. முடியும் என்பதை The Life Divine நிரூபிக்கிறது. The Life Divine தரும் விளக்கங்கள் பகுத்தறிவுக்குரியன. அவற்றின்மூலம் பகவான் பிரம்ம ஞானத்தை விளக்குகிறார். மனம் சிந்திப்பது. சிந்தனையிலிருந்து மனம் எப்படி ஆத்மாவைத் தொடுகிறது என்று 762இல் பார்த்தோம். அங்கிருந்து பகவான் அறிவுப்பாதை வழியாக பிரம்மத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

****

769) இதைச் சாதிக்க அவர் கையாளும் முறைகள் மூன்று:

  1. வாசகருக்குத் தேவையான புது அறிவுத் திறனை அளிக்கிறார்.
  2. மொழிக்கு புதுத் திறனை அளிக்கும் வகையில், முரணான சொற்றொடர்கள்.
    பரந்த கருத்தைத் தழுவும் சொற்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறார்.
    மனம், ஜீவியத்தை மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
  3. யோக மரபுக்குப் புதிய சமஸ்கிருதத்திலும் சொல்ல முடியாத உயர்ந்த ஆன்மீக உண்மைகளை அறிமுகப்படுத்துகிறார்.

புதிய அறிவு, புதிய மொழி, புதிய யோகம்.

வாசகருக்கு இல்லாத அறிவைத் தந்து, தம் எழுத்தைப் படிக்க வைப்பது ஸ்ரீ அரவிந்தர் வழி. அவருடைய கருத்துகள் உலகத்திற்குப் புதியதானதால், பழைய மொழியால் அவற்றை விளக்க முடியாது. தெய்வம் என்று கூறினால் விக்ரஹம் நினைவுக்கு வருகிறது. அல்லது உருவம் தோன்றுகிறது. ஞானிகளும் தெய்வம் என்ற சொல்லைக் கேட்டு பிரம்மத்தை நினைக்கின்றனர். அவர்கள் பிரம்மம் என்று அறிவது சத் புருஷனின் மூன்று அம்சங்களில் ஒன்று. அதனால் God என்ற சொல்லை முடிந்தவரை ஸ்ரீ அரவிந்தர் தவிர்த்து That என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இன்று இல்லாத கருத்தைத் தெரிவிக்க முரணான சொற்றொடர்களை உருவாக்குகிறார். Miserly-spendthrift சிக்கனமான ஊதாரி, comprehensive preciseness பரந்து விரியும் குறிப்பான இலக்கு என்பன போன்ற சொற்றொடர்கள் நூலில் ஏராளமாக வருகின்றன. யோக மரபிலில்லாத புதிய ஆன்மீக உண்மைகளைக் கூறுகிறார். Eg. ஆன்மா வளர்கிறது; மோட்சம் முடிவானதன்று, ஆரம்பம்; பிரம்மம் என நாம் அறிவது பிரம்மத்தின் பகுதி; காலத்தையும், காலத்தைக் கடந்த நிலையையும் இணைப்பது வாழ்வுக்குரிய ஆன்மீகம்; கர்மம் தூய வாழ்வில் கரையும்.

****

770) ஆன்மீகத்தை, அறிவுக்கு பகவான் விளக்கும் வகையில் எழுதினார்.

மொழியின், உரைநடையின் தரத்தையே இதற்காக உயர்த்தினார்.

எழுத்தின் பாணியின் தரத்தை உயர்த்தினார்.

ஆன்மீகத்திற்குரிய அறிவுப் பாணி.

****

771) கணிதத்தில் (infinity) அனந்தத்தை அறிவது (intellect) அறிவில்லை. பரம்பொருள் சிந்தனைக்குரிய மனத்தைத் (thinking mind) தொடுவதால் ஏற்படுவது அது. அறிவின் பிரகாசம் The Life Divine-ஐப் புரிந்துகொள்ளாது. சிந்திக்கும் மனம் அளவுகடந்து (infinite expansion) விசாலமடைந்தால் The Life Divine புரியும்.

உலக நாகரீகம் முழுவதும் மேல் மனத்துடன் நிற்கும்.

புதிய கருத்துகள், கண்டுபிடிப்புகள் அத்துடன் நிற்பதும் உண்டு. எல்லா மனிதர்கட்கும் பயன்படும் அளவில் வருவதும் உண்டு. பூமி சூரியனைச் சுற்றிவருவது, ஆகர்ஷண சக்தி, சூரிய மண்டலம் போன்றவை வெறும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புடன் நிற்கவில்லை. இன்று நாம் பயன்படுத்தும் T.V., ரேடியோ, டெலிபோன் ஆகியவற்றை நாம் பயன்படுத்த இக்கருத்துகள் பயன்படுகின்றன. Infinity அனந்தம் என்பதை உலகம் வெகுநாள் முன்னதாக அறியும். அதன் application தொடர்ந்த பயன் நமக்கு எத்தனையோ products பொருள்கள் மூலமாக வருகின்றன. எந்தப் பொருள்மூலம் எந்தத் தத்துவம் பயன்படுகிறது என்பதையும் நாம் முழுவதும் அறியோம்.

பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் infinity அனந்தம் தத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருத்து கணிதத்தில் ஏராளமாகப் பயன்படுகிறது. இது மேல் மனத்திற்குரிய வாழ்வு. மனிதன் வாழ்விலும், ஜடத்திலும் infinityயை அறிதல் அவசியம். காமதேனு, கற்பக விருட்சம், அக்ஷயப்பாத்திரம் என்பவை ஜடத்திலும் அனந்தமுண்டு என்று அறிவிக்கின்றன. இதை practical concept of infinity எனலாம். எந்த ஒரு பேனா கம்பனியும் உலகத்தின் பேனா தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இது infinite production முடிவில்லாத உற்பத்தி. இதுபோன்று வாழ்வின் பல அம்சங்களில் அனந்தத்தைக் காண்கிறோம். ஜட வாழ்விலும்,சமூக வாழ்விலும் முடிவற்ற பெருக்கத்தைக் கண்டால் உலகம் வளம் பெறும், அப்பொழுது,

  • நம் தேவைகட்குப் பற்றாக்குறை என்பதிருக்காது
  • அளவோடு கிடைக்கும் பணம், அளவற்று நாட்டில் புழங்கும்.

இதுவரை வந்த மாற்றங்கள் டெக்னாலஜியால் வந்தவை. மனம் விசாலமடைந்து புதிய நோக்கம் எழுந்து, மனிதனுடைய ஆத்மா வாழ்வில் செயல்பட்டால் மேற்சொன்ன மாற்றங்கள் வரும். அது நம் வாழ்வை ஆழ்ந்து தொடும். மேல் மனத்தோடு நிற்காது. மேலை நாடுகளில் உபரிப் பணம் அதிகமாகி என்ன செய்வது என்று தெரியாத நிலையிலிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் மூலம் 1 நாளைக்கு உலகில் உலவும் பணம் $ 1 டிரில்லியன், 40 லட்சம் கோடி ரூபாய் எனக் கூறுகிறார்கள். இந்திய பட்ஜெட் 1½ லட்சம் கோடி ரூபாய் என்றால் பணப் பெருக்கத்தை நாம் யூகிக்க முடியும். நாடு பயன்படுத்தும் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க முடியும் என்ற கருத்தை உலகத்தில் முக்கியப் பொருளாதார நிபுணர்கள் ஆழ்ந்து யோசனை செய்கிறார்கள்.

****
 

772) சோம்பேறி, சுறுசுறுப்பானவன், பூரணயோகி ஆகியவர்கள் பல நிலைகளில் உடல் திருவுருமாற்றத்தைப் பெறும் தெய்வங்கள். சிருஷ்டியின் முடிவான நிலைக்குரியது ஒன்று.

பரிணாம வளர்ச்சிக்குரிய உணர்வு அடுத்தது. பரிணாமத்தில் வளரும் தெய்வம், யோகி.

திருவுருமாறும் மனிதன் அந்த நிலைக்குரிய தெய்வமாகிறான்.

நாம் மாற்றத்தை அறிவோம். திருவுருமாற்றம் என்பது புதிய கருத்து. நோயிருந்தால் அது போக மருந்து சாப்பிடுகிறோம். வறுமையிருந்தால் அது அழியப் பாடுபடுகிறோம். இதுவே நாமறிந்தது. திருவுருமாற்றத்தால் நோய் அழிந்து ஆரோக்கியம் அதிகமாகும், வறுமை மறைந்து வளம் பெருகும். திருவுருமாற்றத்தில் இது தவிர்க்க முடியாதது. ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கும் போகும் முறை திருவுருமாற்றம். சோம்பேறி திருவுருமாறினால் அதிகச் சுறுசுறுப்பாகிவிடுவான்; சாதாரண மனிதன் திருவுருமாறினால் அவனுடைய நிலையில் உள்ள தெய்வமாக மாறுவான்; உழைப்பாளி திருவுருமாறினால் ஊர்த்தேவதையாவான்; உணர்ச்சிமிக்கவன் திருவுருமாறினால் ஆவேசமான தெய்வமாக - காளி போன்ற தெய்வம் - மாறுவான்; மனத்தால் வாழ்பவன் திருவுருமாறினால் மனத்திற்குரிய தெய்வமாகிய சரஸ்வதி, லட்சுமி, இந்திரன்போல் மாறுவான்; திருவுருமாறினால் மனித நிலையை மனிதன் கடந்துவிடுவான்.

****

773) வேதனையால் துரோகத்தின் மூலம் விஸ்வாசம் எழுகிறது (பத்ரகிரியின் மனைவி). இந்திரனை விரும்பிய அகல்யா கற்புக்கரசியாக, கல்லாக மாறினாள். ஆயிரமாண்டு அனுபவித்தபின் 5 கணவரைப் பெற்று திரௌபதி பத்தினியானாள். தாரை சந்திரனுக்குக் குழந்தை பெற்றாள்.

வேதனையால் துரோகத்தின் மூலம் விஸ்வாசம் எழுகிறது.

ஒரு பாதையின் இரு முனைகள் எதிரானவை. ஒரு முனை ஒளியானால் அடுத்தது இருள். நாம் விஸ்வாசத்தைப் போற்றுகிறோம். துரோகத்தை வெறுக்கிறோம். விஸ்வாசத்தில் முடியும் பாதை துரோகத்தில் எழுகிறது என நம்மால் நம்பமுடிவதில்லை. விதையிலிருந்து ஆரம்பித்து, முளை, செடி என வளர்ந்து மரமாக முடிகிறது என்பதுபோல் வாழ்வின் தன்மைகள் எதிரானவற்றிலிருந்து ஆரம்பிக்கின்றன என்பது தத்துவம்.

துரோகம், எதிர்ப்பு, தீவிர விஸ்வாசம்,

என்பதும் சூட்சும உண்மை. ரிஷிகளால் சபிக்கப்பட்ட துவாரபாலகர்கள் பூமியில் பிறவி எடுக்கவேண்டும் என்றானபின் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். சாபத்தை அழிக்க முடியாது, கடுமையைக் குறைக்கலாம் என்றார். பூமியில் வாழும் நாட்களைக் குறைக்க வேண்டுமானால் என்னை எதிர்ப்பது உதவும் என்று கூறினார். துவாரபாலகர்கள் ராட்சஸர்களாகவும், நாராயணனுக்கு எதிரிகளாகவும் பிறந்து, மீண்டும் விஷ்ணுவை அடைந்தனர்.

பிரியம் எழுந்தால் அதை வெளிப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், பிரியம் துரோகமாக வெளிப்படும்.

பத்ரகிரி என்ற அரசன் பிச்சைக்காரியின் அழகை மெச்சி அவளை இராணியாக்கினான். அவள் அரசனுக்கு துரோகம் செய்து குதிரைக்காரனுடனிருப்பதைக் கண்ட அரசன் அவளை ரோட்டில் நிறுத்தி கல்லால் அடித்து சாகடித்தான். அவள் நாயாய் பிறந்து அவனைத் தொடர்ந்தாள். சட்டியால் நாயின் மண்டையிலடித்துக் கொன்றான். காசி ராஜன் மகளாய்ப் பிறந்து பத்ரகிரியிடம் வந்து மோட்சம் பெற்றாள். பிச்சைக்காரி அரசன் மீதுள்ள பிரியத்தை முதலில் துரோகமாகவும், பிறகு நாயின் நன்றியாகவும், முடிவாக சிஷ்யையின் பணிவாகவும் காட்டினாள்.

****

774) நோயாலும் வேதனையாலும் உடல் திருவுருமாற்றம் அடைகிறது.

****

775) தாங்க முடியாத, தணியாத பூரிப்பு (intolerable ecstasy) மனிதனுக்கு வேதனையாக எழுகிறது.

ஆனந்தம் உயர்ந்தது. மனித ஜீவியத்தால் அதைத் தாங்க முடியாது. ஆனந்தம் மனிதனுக்கு வந்தால், அவன் அதை வலியாக உணர்கிறான். முடிவான ஆனந்தம் வந்தால் தாங்கமுடியாத வேதனையாகிறது. சர்க்கார் அதிகாரி ஒருவருக்கு நல்ல வாய்ப்பெழுந்தது. அவருடைய ஆலோசனைக்குப் பரிசாக ரூ.10 லட்சம் கொடுத்தார் ஒரு செல்வர். மாதம் 12,000 ரூபாய் சம்பாதிப்பவர் ரூ.10 லட்சம் பெற்றார். அந்தச் செக்கை பாங்கில் போடாமல் சில நாள் வைத்திருந்தார். ஒரு நாள் பாங்கில் போட முடிவு செய்தார். அன்று காலை எழுந்தவுடன் பயம் மேக மண்டலமாக அவரைச் சூழ்ந்தது. காரணம் தெரியவில்லை. பிரார்த்தனை செய்தார். பயம் விலகியது. பெருந்தொகை கைக்கு வந்தால் நாம் சந்தோஷம் வரும் என நினைப்போம். அனுபவம் பயமாக வருகிறது.


தொடரும்...

****

ஜீவிய மணி

கவலைப்படுவது எளிது.

களித்து மகிழ்வது எளிதன்று

*****

Comments

01.யோக வாழ்க்கை விளக்கம்

01.யோக வாழ்க்கை விளக்கம் IV
 
766) 
Para 3 - Please remove extra blank line after line 6
 
767)
Para 3  -  Line 2  -   முதலி லேயே     -      முதலிலேயே
 
769)
Para 3  -  Line 6  -    Godஎன்ற              -      God  என்ற
 
771)
Para 4  -  Line 1  -   infinityஅனந்தம்     -      infinity அனந்தம்
Please combine Para 4 &  Para 5
Please combibe Para 7 &  Para 8
Para 8  -  Line 2  -   நிலையிருக்கிறார்கள்    -   நிலையிலிருக்கிறார்கள்



book | by Dr. Radut