2. முகவுரை, முன்னுரை, முடிவுரை, முழு உரை, மூல உரை
முகவுரை, முன்னுரை, முடிவுரை, முழு உரை, மூல உரை
காதல் வாழ்வின் மூல உரையான முழுவுரை.
- முக்கிய கருத்துகளை மூலத்தில் சுட்டிக்காட்டுவது முகவுரை.
- முக்கிய கருத்துகளை வாசகர்கட்கு முழுமையாக நினைவுபடுத்துவது முடிவுரை.
- முன்னுரையும் முடிவுரையும் இணைந்து பெறும் முழுமையைக் கூறுவது முடிவுரை.
- மூலவுரை கருத்து மூலத்தை அடைந்து எழுப்பும் குரல்.
- மூலம் முழுமையை முக்கியமாக்குவது குரல் சொல்லாக ஒலிப்பது.
- மூலத்தின் குரல் எழுந்து முழுவதும் ஏற்றமாக ஒலிப்பது அம்சமுள்ள எழுத்து.
- மூலம் ஆதிமூலமாவது ஜீவன் மந்திரமாவது.
- களவொழுக்கம் கற்புக்கனல் நிறைந்த ஒழுக்கம்.
- உன்னையறியாதவனை நினைந்து மனம் உருகுவது காதல்.
- மறந்தவளை மறந்தறியாதது மனம் அறியும் காதல்.
- மணந்தவனை மனம் ஏற்று அவனில் கரைவது மணாளன் பெற்ற பெரும்பேறு.
- மனம் திருமணத்தால் நெஞ்சாக மாறி அதனுள் அவள் தெய்வமாக வீற்றிருப்பது திருமணம் நறுமணமாவது.
- மனமறிந்த வாழ்வு மணக்கத் தவறியதில்லை.
- கசந்த வாழ்வு காலத்தைக் கடந்த உயர்வு பெறும் நிலையைக் காட்டுகிறது.
- வாழ்வு தோல்வியையறியாதது என வற்புறுத்துவது காதலில் தோல்வி.
- கொடுமையான கணவன் கடுமை நிறைந்த காதலன்.
- சிடுமூஞ்சி என்ற மனைவி வாழ்வைக் கடந்த மனவளம் பெற்றவள்.
**********
- Login to post comments