Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/88) ஞானத்தை எட்டினால் பிரம்மம் சச்சிதானந்தமாகத் தெரிகிறது. தெய்வ நிலையில் அவை சத், சித், ஆனந்தமாகப் பிரிந்து தெரிகின்றன. சத்திய ஜீவியத்தில் ஒன்றில் மூன்றாகத் தெரிகின்றன.

  • ஒன்றில் மூன்று, மூன்றாகப் பிரிந்து தெரிகின்றன.
  • ஒருவன் மகன், கணவன், தகப்பனாக இருக்கிறான்.
  • மகனாவதும், கணவனாவதும், தகப்பனாராவதும் மூன்று அம்சங்கள்.
  • இந்த அம்சங்கள் அவனை மூன்று மனிதனாகப் பிரிப்பதில்லை. பிரிக்க முடியாது.
  • உடை, கண்ணாடி, செருப்பு மூன்று பொருள்கள். தனிப்பட்டவை.
  • தலை, கை, கால் மூன்று அங்கங்கள், ஒரே உடலின் மூன்று அங்கங்கள்.
  • உடை, கண்ணாடி, செருப்பு மூன்று பொருள்கள், மூன்று வேறு பயன் தருபவை.
  • பொருள்கள் பிரிந்தவை, அவை ஒன்றுபடுவதில்லை.
  • அங்கங்கள் மூன்றும் ஒரே உடலுக்குரியவை.
  • வெவ்வேறானாலும் நேரடியாக இணையாவிட்டாலும், ஒரே உடலில் இணைகின்றன.
  • அங்கம் பிரியும், அம்சம் பிரியாது.
  • மத்திய சர்க்கார், மாநில சர்க்கார், முனிசிபாலிட்டி வெவ்வேறு காரியங்களை நடத்துபவை.
  • அவை முற்றிலும் பிரிந்து தோன்றுகின்றன.
  • ஆனால், அடிப்படையில் மூன்றும் ஒரு சர்க்காரின் வேறு பகுதிகள்.
  • கல்வி, செல்வம், இராணுவம் தனிப்பட்டவை.
  • அவை மூன்றும் வெவ்வேறு செயல்களைச் செய்பவை.
  • கல்வியும், செல்வமும், போரும் இணைந்தவை அல்ல.
  • தொழில்கள் பிரியும், சர்க்காரின் அங்கங்கள் பிரியா.
  • தெய்வீக மனம் கிருஷ்ணாவதாரத்திற்குரியது.
  • மௌனமான முனிவர் மனம் இராமாவதாரத்திற்குரியது.
  • மனிதனுக்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடைப்பட்ட நிலைகள் நான்கு.
  • அவை மௌனம், திருஷ்டி, நேரடி ஞானம், ஞானமாகும்.
  • மௌனத்திற்குரியவர் முனி - இராமாவதாரம்.
  • திருஷ்டிக்குரியவர் ரிஷி - வசிஷ்டர் போன்றவர் - ரமண மகரிஷி.
  • நேரடி ஞானத்திற்குரியவர் யோகி - இராமகிருஷ்ணர், இராமலிங்கர்.
  • ஞானத்திற்குரியவர் - தெய்வம் - சிவன், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், லக்ஷ்மி, சரஸ்வதி, காளி - கிருஷ்ணாவதாரம்.
  • பிரம்மா, சிவன், விஷ்ணு போன்ற கடவுள்கள் பிரிந்து தோன்றினாலும் அவர்கள் அனைவரும் சத்திய ஜீவியத்தில் பிறந்தவர். அந்நிலையில் அவர்களும் ஒருவரே.
  • மனிதன் அறிவால், சிந்தனையால் புரிந்து கொள்கிறான்.
  • முனிவர் மௌனத்தால் புரிந்து கொள்கிறார்.
  • ரிஷி திருஷ்டியால் - ஜோதியால் - புரிந்து கொள்கிறார்.
  • யோகிக்கு சிந்தனை, மௌனம், ஜோதி போன்ற கருவிகள் தேவையில்லை.

    அவர் நேரடியாகப் புரிந்து கொள்வார்.

  • தெய்வம் ஞானம் பெற்றது. அது ஞானத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதன் ஞானத்துடன், அஞ்ஞானமும் கலந்து வரும்.
  • தெய்வம் அஞ்ஞானத்தைப் புறக்கணித்து ஞானத்தால் செயல்படும்.
  • சத்திய ஜீவியத்தில் அஞ்ஞானமில்லை. அது முழுமையான ஞானம்.
  • சத்திய ஜீவியம் அஞ்ஞானத்தை ஊடுருவி, அதன் அடிப்படையான ஞானத்தைத் தொட்டு, அதன் மூலம் அஞ்ஞானத்தை ஞானமாக திருவுருமாற்றுகிறது.
  • பகவானும், அன்னையும் சத்திய ஜீவிய அவதாரங்கள்.

*******

II/89) பிரித்துப் பார்க்கும் திறன் நாம் எந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்பதைப் பொருத்தது. கண்டம் நமக்கு அகண்டமாகத் தெரிந்தால்தான் The Life Divine விளங்கும்.

  • சிறியதில் பெரியதைக் காண்பது ஞானம்.
  • அரச குமாரனை இளையராஜா என்பர்.
  • குழந்தையைக் குழந்தையாகக் காணாமல், தகப்பனாருடன் இணைத்துக் காண்கிறார்கள்.
  • பெரிய குடும்பத்துக் குழந்தைகளை சின்ன அய்யா என்பதும் அதுவே.
  • மனிதன் அணுவின் பிரம்ம சிறப்பை நெகட்டிவாக அறிந்ததன் பயன் அணுகுண்டு.
  • அதையே பாஸிட்டிவாக அறிந்தால் உலகில் கரி, பெட்ரோல் எரிய வேண்டாம். எரிந்து சூழலைப் பாழ் செய்ய வேண்டாம்.
  • கணவனைத் தெய்வமாகக் காணும் பரம்பரை, மனைவியைச் சக்தியாகக் காண்பதில்லை.
  • ஏழை நாடுகள் பணத்திற்காகப் பரிதவிக்கிறார்கள். சமூகத்தினுள் ஏராளமான பணம் மறைந்திருப்பதை அவர்கள் காணவில்லை. மெக்கன்ஸி எடுத்துக் கூறியும் காணவில்லை. பேனா முனையில் சர்க்காருக்கு 2 லட்சம் கோடியுண்டு என்று மெக்கன்ஸி கூறினார்கள்.
  • நியூட்டன் கூறியவை 200 ஆண்டுகள் உலகை ஆண்டன. நியூட்டனைவிட, சாக்ரடீஸைவிட உயர்ந்த மனம் உற்பத்தியாக முடியாது என்றார் பகவான்.

    சமூகத்தைப்பற்றி அதுபோன்ற உண்மைகள் ஏராளம் என்பது The Life Divine கூறுவது. இன்று அதுபோல் செயல்படுத்தக் கூடியவை பல.

    1. உலக வருமானத்தை ஒவ்வொரு நாடும் உற்பத்தி செய்யலாம்.
    2. எல்லா நாட்டு மருத்துவமும் இணைந்தால் உலகில் குணப்படுத்த முடியாத வியாதியிருக்காது.
    3. செய்யக் கூடியவற்றைச் செய்தால் உலகில் ஏற்றத்தாழ்விருக்காது. சமதர்மம் எழும்.
    4. சூழல் பாழானது சரியாகும்.
    5. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும்.
    6. பொருளாதார நெருக்கடி மறையும்.
    7. அணு ஆயுதம் பரவுவது நிற்கும்.
    8. இன்று மனிதன் - தனி மனிதன், சமூகம் - விரும்பும் அனைத்தையும் செய்யலாம்.
  • குழந்தையைத் தெய்வமாகக் கொண்டாடுகிறது உலகம்.
    1. இதைக் கல்வியில் பயன்படுத்தினால் உலகில் அனைவரும் பட்டதாரியாவர்.
    2. இதைக் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்தினால் அத்தனை பேரும் மேதையாகாவிட்டாலும், மேதா விலாசம் பெறும் தகுதி பெறுவர்.
    3. வளர்ப்பாலேயே குழந்தை 100 ஆண்டுகள் வாழும்.
  • மனைவியைத் தெய்வமாக்கினால்,
    1. மனம் நிறைந்து மணம் வீசும்.
    2. மனிதத் திறமை பல மடங்கு அதிகரிக்கும்.
    3. நாட்டில் இலக்கிய நிலை உயரும்.
    4. இலக்கியமில்லாத நாட்டில் இலக்கியம் எழும்.
    5. வயது வந்தவர்களின் பெருமை நாட்டிற்குச் சேவை செய்யும். அவர்களை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டியிருக்காது.
    6. அனாதை ஆசிரமங்கள் மூடப்படும்.
  • பிரித்துப் பார்ப்பது பெறும் திறன்.
  • ரூபம் அப்படியே உற்பத்தியாகிறது.
  • சக்தி ரூபமாவதே சிருஷ்டி.
  • பிரித்துப் பார்ப்பது சிருஷ்டி.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
செல்வத்தை பெறும் இரகஸ்யம் தளராத உழைப்பு.
 

*******



book | by Dr. Radut