Skip to Content

14. நிலையும் நினைப்பும்

நிலையும் நினைப்பும்

N. அசோகன்

நம்முடைய அகந்தை உண்மையில் ஒரு குப்பைக் கூட்டமாகும். ஆனால் அது ஒரு விலைமதிப்பற்ற ரத்தினம் என்றும், அப்படி தன்னை நாம் நடத்த வேண்டும் என்றும் நம்மை அது நம்ப வைத்துள்ளது. இது ஒரு தவறான கருத்தாகும். ஆனால் உண்மையில் நம்மிடம் உள்ள விலைமதிப்பற்ற ரத்தினம் நம்முடைய சைத்திய புருஷன்தான். ஆனால் அது இருப்பதுகூட நமக்குத் தெரிவதில்லை. அகந்தையைப் பற்றிய தவறான கருத்திலிருந்து நாம் விடுபட்டு அதை நாம் குப்பையைப் போல உண்மையில் நம் personalityயிலிருந்து களைந்து எடுத்துவிட்டு, நம்முடைய சைத்திய புருஷனை மேல் மட்டத்திற்கு கொண்டு வந்து, அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் வழங்குவதுதான் சரியான செயல்பாடாக அமையும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
அகந்தையிலுள்ள ஒளி தானழிய பிரார்த்திக்கும்.
அகந்தை தன் அழிவை நாடாது.
அகந்தைக்கு வித்தான ஒளி.

*****



book | by Dr. Radut