11. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
48. பொய்யின் உண்மையை ஏற்று, பொய்யை மெய்யாக்கும் திறன்
- பொய்யை விலக்குவது கடினம்.
- நம் பொய்யை விலக்குவது அவசியம், அது முடியும்.
- பிறர் பொய் நம்மிடம் கூறுவதை விலக்கப் பிறரை விலக்க வேண்டும்.
- உலக வாழ்வில் அது எளிமையாகச் செய்ய முடியாது.
- உடன் பிறந்தவர், பிள்ளைகள், பெற்றோர் நம்மிடம் பொய் சொல்வதால் அவர்களை எப்படி விலக்குவது?
- பிறர் பொய் நம் பொய்யின் பிரதிபலிப்பு.
- ஆழத்தில் நம் பொய்யை விலக்கினால் அவர்களால் நம்மிடம் பொய் சொல்ல முடியாது.
- ஆழம் என்பது அவரும் நாமும் இரத்த பாசத்தில் இணையுமிடம்.
- வெளி மனிதரிடையே அது செய்வது சிரமம் குறைவு.
- இரத்த பாசமில்லாத இடம் கடினமில்லை.
- அவர் நமக்குத் தேவைப்பட்டால் அவர் பொய்யை விலக்க முடியாது.
- அவர் தேவைப்படுகிறது எனில் அவர் பொய் தேவைப்படுகிறது.
- எலிசபெத்திற்கு விக்காம் பொய் தேவைப்பட்டது, தேவாமிருதமாக இருந்தது.
- ஆழம் அதிகமானால், பொய்யின் ருசி அதிகமாகும்.
- பிறருடன் பழகினால் அவர் பொய் குறையும், பொய் மெய்யாக மாறும்.
- அப்படி மாறிய இடத்தின் தொடர்பு பாதிக்காது.
- மாறாத இடம் பாதிக்கும்.
- அவை கலந்திருப்பதால், பிரித்து செயல்படுவது சிரமம்.
- அவர் மாறிய மனநிலையை மட்டும் ஏற்றால் - அது மெய் - அது வளரும்.
- அது பூரண மெய்யாகச் செயல்படும் திறன் வாய்ந்தது.
- அது உலகுக்கு அதிர்ச்சி தரும்.
- அதையும் சிறிது பொய்யான நம்பிக்கையால்தான் அவன் செயல்படுத்துவான்.
- அச்செயல் தனிநபர் செயலல்ல.
- அது பிரபஞ்ச செயலாகும்.
- அதன் அடிப்படை உண்மையென்பதால் அது அகல, நீளத்தில் வளரும்.
- ஒருவர் செயலை உலகையாளும் என நிரூபிக்கும்.
- உலகம் முழுவதும் பரவியதும் உண்டு.
- ஏழ்மை பொய் - உயிரில் பொய்.
- அறியாமை பொய் - மனத்தின் பொய்.
- நோயும் பொய் - உடலின் பொய்.
- பொய்யை மெய்யாக மாற்றுவது பிறரைத் திருவுருமாற்றுவது.
- திருவுருமாற்றம் மோட்சத்தைக் கடந்தது.
- பிறரைத் திருவுருமாற்ற சத்புருஷனால்தான் முடியும்.
- பிறரைத் திருவுருமாற்றும் தகுதி யோகத் தகுதி.
- பொய் பணத்தால் வெளிப்பட்டால், அதன் சக்தியதிகம்.
- பணத்தை பொய்யனிடம் கொடுத்து வாங்குவது அவன் பொய் மெய்யாக மாறுவது.
- அவனே மாறிய பின்னும், பணம் பொய் சொல்ல வற்புறுத்தும்.
- பணத்தை திருப்பித் தரும் பொய்யன், பணத்தின் பொய்யை மீறி மெய்யை ஏற்பதாகப் பொருள்.
- பொய் வேறு, மெய்யின் தோற்றம் பெற்ற பொய் வேறு.
- மெய்யின் தோற்றம் பெற்ற பொய் வலிமை மிக்கது.
- பொய் தன் அளவில் திறன் பெற்று, மெய்யாகத் தோன்றும் திறனையும் பெற்றதால் அதன் வலிமையை சமாளிக்க முடியாது.
- அதன் வலிமை வளைய, மெய்யின் சத்தியம் நிலை உயர்ந்து ஆன்மாவை எட்ட வேண்டும்.
- மெய் ஆன்மாவின் அறம் என்பதால், அது அகமாக முயலும் பொழுது ஆன்மாவாகிறது.
- அதன் முன் மெய்யாக நடிக்கும் பொய் ஜபம் பலிக்காது.
தொடரும்.....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் எந்நிலைக்குரிய முறையும் முன்னிலையில் சுருக்கு வழியாகும். நிலைகளின் வேறுபாடு அதிகமானால் சுருக்கம் அதிகம். முன்னிலையில் சுருங்கி, பின்னிலையில் விரியும். |
*******
- Login to post comments