Skip to Content

11. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

48. பொய்யின் உண்மையை ஏற்று, பொய்யை மெய்யாக்கும் திறன்

  • பொய்யை விலக்குவது கடினம்.
  • நம் பொய்யை விலக்குவது அவசியம், அது முடியும்.
  • பிறர் பொய் நம்மிடம் கூறுவதை விலக்கப் பிறரை விலக்க வேண்டும்.
  • உலக வாழ்வில் அது எளிமையாகச் செய்ய முடியாது.
  • உடன் பிறந்தவர், பிள்ளைகள், பெற்றோர் நம்மிடம் பொய் சொல்வதால் அவர்களை எப்படி விலக்குவது?
  • பிறர் பொய் நம் பொய்யின் பிரதிபலிப்பு.
  • ஆழத்தில் நம் பொய்யை விலக்கினால் அவர்களால் நம்மிடம் பொய் சொல்ல முடியாது.
  • ஆழம் என்பது அவரும் நாமும் இரத்த பாசத்தில் இணையுமிடம்.
  • வெளி மனிதரிடையே அது செய்வது சிரமம் குறைவு.
  • இரத்த பாசமில்லாத இடம் கடினமில்லை.
  • அவர் நமக்குத் தேவைப்பட்டால் அவர் பொய்யை விலக்க முடியாது.
  • அவர் தேவைப்படுகிறது எனில் அவர் பொய் தேவைப்படுகிறது.
  • எலிசபெத்திற்கு விக்காம் பொய் தேவைப்பட்டது, தேவாமிருதமாக இருந்தது.
  • ஆழம் அதிகமானால், பொய்யின் ருசி அதிகமாகும்.
  • பிறருடன் பழகினால் அவர் பொய் குறையும், பொய் மெய்யாக மாறும்.
  • அப்படி மாறிய இடத்தின் தொடர்பு பாதிக்காது.
  • மாறாத இடம் பாதிக்கும்.
  • அவை கலந்திருப்பதால், பிரித்து செயல்படுவது சிரமம்.
  • அவர் மாறிய மனநிலையை மட்டும் ஏற்றால் - அது மெய் - அது வளரும்.
  • அது பூரண மெய்யாகச் செயல்படும் திறன் வாய்ந்தது.
  • அது உலகுக்கு அதிர்ச்சி தரும்.
  • அதையும் சிறிது பொய்யான நம்பிக்கையால்தான் அவன் செயல்படுத்துவான்.
  • அச்செயல் தனிநபர் செயலல்ல.
  • அது பிரபஞ்ச செயலாகும்.
  • அதன் அடிப்படை உண்மையென்பதால் அது அகல, நீளத்தில் வளரும்.
  • ஒருவர் செயலை உலகையாளும் என நிரூபிக்கும்.
  • உலகம் முழுவதும் பரவியதும் உண்டு.
  • ஏழ்மை பொய் - உயிரில் பொய்.
  • அறியாமை பொய் - மனத்தின் பொய்.
  • நோயும் பொய் - உடலின் பொய்.
  • பொய்யை மெய்யாக மாற்றுவது பிறரைத் திருவுருமாற்றுவது.
  • திருவுருமாற்றம் மோட்சத்தைக் கடந்தது.
  • பிறரைத் திருவுருமாற்ற சத்புருஷனால்தான் முடியும்.
  • பிறரைத் திருவுருமாற்றும் தகுதி யோகத் தகுதி.
  • பொய் பணத்தால் வெளிப்பட்டால், அதன் சக்தியதிகம்.
  • பணத்தை பொய்யனிடம் கொடுத்து வாங்குவது அவன் பொய் மெய்யாக மாறுவது.
  • அவனே மாறிய பின்னும், பணம் பொய் சொல்ல வற்புறுத்தும்.
  • பணத்தை திருப்பித் தரும் பொய்யன், பணத்தின் பொய்யை மீறி மெய்யை ஏற்பதாகப் பொருள்.
  • பொய் வேறு, மெய்யின் தோற்றம் பெற்ற பொய் வேறு.
  • மெய்யின் தோற்றம் பெற்ற பொய் வலிமை மிக்கது.
  • பொய் தன் அளவில் திறன் பெற்று, மெய்யாகத் தோன்றும் திறனையும் பெற்றதால் அதன் வலிமையை சமாளிக்க முடியாது.
  • அதன் வலிமை வளைய, மெய்யின் சத்தியம் நிலை உயர்ந்து ஆன்மாவை எட்ட வேண்டும்.
  • மெய் ஆன்மாவின் அறம் என்பதால், அது அகமாக முயலும் பொழுது ஆன்மாவாகிறது.
  • அதன் முன் மெய்யாக நடிக்கும் பொய் ஜபம் பலிக்காது.

 

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எந்நிலைக்குரிய முறையும் முன்னிலையில் சுருக்கு வழியாகும். நிலைகளின் வேறுபாடு அதிகமானால் சுருக்கம் அதிகம்.
 
முன்னிலையில் சுருங்கி, பின்னிலையில் விரியும்.
 

*******



book | by Dr. Radut