06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
சாண் ஏற முயன்றால், முழம் ஏறுவோம்.
- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாயைத் திறந்தால் பிழைப்பு போகும்.
- ஏழைக்கு இராஜ வைத்தியம்.
ஏழையென்பதால் இராஜ கவனம் உண்டு.
- மயிலே, மயிலே என்றால் இறகு போடாது.
மயிலைக் கெஞ்சினால் அத்தனை இறகையும் போடும்.
- ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டும்.
எல்லையைக் கடந்தபின் அளவு கூடாது.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மேல் மனத்தின் எந்நிலையிலிருந்தும் அழைப்பது நம் முயற்சி. அதைத் தாண்டினால் அழைப்பு நிற்காது. தானே எழும். தானே எழும் அழைப்பு உள் மனத்திற்குரியது. |
*******
- Login to post comments