05. சாவித்ரி
சாவித்ரி
P.113 Bring brief magnificent reminiscences
உயர்ந்த நினைவுகளைச் சுருங்கக் கொண்டு வரும்
- விளக்கம் தரும் எண்ணத்தின் உயர்ந்த உன்னதம்
- அது ஞானசிருஷ்டியின் ஆனந்தமில்லை
- உள்ளது திரை, அதன்பின் உள்ளது ஒளிந்துள்ளது
- அழகின் சிறையில் அகப்பட்ட ஆனந்தம் அப்படி பாதுகாக்கப்பட்டது
- இறைவனை நோக்கி இதயகமலம் எழ மறந்தது
- நமக்குப் பின்னுள்ள நாணயமாக சூட்சும அழகு
- உருவமே உள்ளது, தெய்வமே அரசன்
- அழகிய எல்லைக்குள் எழும் அர்த்தமுள்ள ஜோதி
- களையான இயற்கை கரைந்தெழும் பிழையற்ற எழில்
- சுதந்திரம் அங்கு சிறப்பை உருவாக்கும்
- அற்புத சித்திரம் அசைவின் சக்தியைப் பெறவில்லை
- ஜனித்தது, ஆன்மாவின் பூரிப்பு அர்த்தமுள்ளதாயிற்று
- ஒருமையின் கவர்ச்சி அதிசயமென எழுந்தது
- கோடாக எழுந்த கோலான எழிற் கற்பனை
- நிறைவுதரும் முழுமையை உணர்ந்தவர் பலரும்
- பூரித்தெழுந்த முழுமையின் புதுமை அளவால் சிறந்தது
- குறுகிய சிறுமையில் குதித்தெழும் அற்புதம்
- சிறிய இடத்தில் சீறி எழும் பூரிப்பின் புரியாத சிக்கல்
- சூழலைத் தழுவும் சுருதியின் பாங்கு
- சட்டப்படி எழும் சிறப்பான வடிவம்
- பிழையற்ற அமைப்பு கவர்ச்சி நிறை பயன் தரும்
- சொந்த ஆனந்தம் தரும் சுகம்
- சிறப்பையறிந்து வாழும் சிந்தனையற்ற வாழ்வு
- சொர்க்கம் ஏற்கும் சொந்த நிறைவு
- உள்ளதே எல்லாம், தேவையென்பது எழ மறுக்கும்
- உடைந்த உள்ளம் உழலும் அவலமில்லை
- சோதனை ஒழிந்த போராட்டமற்ற பெருவாழ்வு
- எழும் வலியின்று, எதிர்ப்பிற்கு வழியின்றி
- பயமும் சோர்வும் அற்ற உலகம்
- குறையின் அருளில்லை, தோல்வியின் எழுச்சியில்லை
- தவறு செய்ய வழியில்லை, தடுக்கி விழும் தன்மையில்லை
- செறிவான சொந்த ஆனந்தம் வகுத்த வழி
- சொல்லிழந்த எண்ணம் கண்ட ரூபமெனும் வண்ணம்
- அலையென எழும் அற்புத எண்ணமும் செயலும்
******
ஸ்ரீ அரவிந்த சுடர் உணர்வின் உண்மையைக் காணும்பொழுது மனம் உடைகிறது. அவ்வெண்ணங்கள் சித்திக்க விழைவது மனம் உடையும் நிலையைப் போற்றுவதாகும். உணர்வின் உண்மை மனத்தை உடைக்கும். |
******
- Login to post comments