07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- மனித மனத்தில் நம்பிக்கைஊற்று வற்றுவதில்லை.
- நம்பிக்கையின் ஊற்றுக்கு உறைவிடம் விழிப்பான ஆன்மா.
- அதிகமான நம்பிக்கை ஏமாற்றமளிக்கும்.
- அதிகமான நம்பிக்கை ஞானமாகும்.
- நல்லது நடக்கும்என்று நம்பு.
- நல்லது மட்டும் நடக்கும்என்பது அன்பர் வாழ்வு.
- உடல்நலக்கேடு ஆத்மாவின் நலமாகலாம்.
- ஆழ்ந்த தியானம் உடல்நலக்கேடு உடல்நலமாக மாறுவதை கட்டம் கட்டமாகக் காட்டும்.
- வாழ்வின் இனிப்புச்சுவை மகிழ்வே.
- மகிழ்வையும் இனிமையாக்கும் மகிமையுண்டு சமர்ப்பணத்திற்கு.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் பெறும் நிலைகள் அனைத்திலும், தான் தாழ்ந்த நிலையில் இருப்பதை உணர்வதே (sincerity) உண்மை நோக்கம் ஆகும். பெறுபவர் தாழ்ந்தவர். |
*****
- Login to post comments