Skip to Content

10. அன்பர் உரை

அன்னையின் சக்தி கன்ஸர்வேட்டிவாக செயல்படாமல், கிரியேட்டிவாக, முன்னேற்றமாகச் செயல்படும்

(சென்னை - மாம்பலம் - தியான மையத்தில், ஜனவரி 4, 2001இல், திரு. N. அசோகன் நிகழ்த்திய உரை) 

கன்சர்வேட்டிவ் என்றால் இருப்பதைக் காப்பது எனவும், கிரியேட்டிவ் எனில் புதியதாகப் படைப்பது எனவும் பொருள். பழையது பவுன் என்பது கொள்கை. முன்னோர் மூதாதையர் அறிவுக் களஞ்சியம். இலக்கியங்கள் இலட்சியமானவை. வேதம் கூறுவது வேதவாக்கு. அவற்றை நாம் அறிவது பெரியது. நம்மால் அவற்றைக் கடந்த நிலையை எட்ட முடியாது. எனவே அவற்றைப் போற்றிக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையை conservative என்கிறோம். அது நாளடைவில் மாறி அன்றைய தோற்றம் - வேஷ்டி, குடுமி -பெரியது. இன்றைய மாற்றம் தவறு என்றாகிவிட்டது. Creative என்றால் உயர்ந்த நிலையில் காவியம் சிருஷ்டி. அன்றாட நிலைகளிலும் ஆயிரம் நேரங்களில் நாம் creativeஆக இருக்கிறோம். உற்சாகமாக இருப்பதை creative எனவும், தளர்ந்திருப்பதை அங்ஙனமில்லை எனவும் கொள்கிறோம்.   வாழ்வையும், யோகத்தையும், யோக வாழ்வையும் பொருத்த அளவில் இச்சொற்கள் தரும் பொருள்கள் எவை?

  • நெடுநாளிருப்பது உயர்வு - Creative conservative.
  • நீர்க் குமிழியாய் அழிவது தாழ்வு - சிறியது, மாற வேண்டிய பழைய நிலை.
  • ஆன்மீகச் சாரமுள்ளவை காப்பாற்றப்பட வேண்டும். (conserve)
  • காலத்திற்குரியவை காலம் மாறும்பொழுது மாறவேண்டும்.
  • நித்தியம், அநித்தியம் என்பவை மாறிய நிலைகள்.
  • தோற்றம் மாற வேண்டியது. அதைக் காப்பாற்ற முயலக்கூடாது.
  • உள்ளுறை விஷயம் நீடிக்க வேண்டும். அதை அழிய விடக் கூடாது.
  • கல்வி முறை மாறலாம், கல்வி நீடிக்க வேண்டும்.
  • பேச்சுப் பாணி மாறலாம், பேசும் பண்பு மாறக் கூடாது.

மெடிகல் காலேஜ், கம்ப்யூட்டர் கோர்ஸ், Ph.d., இலக்கியம், சமூகவியல் என்று பாடங்கள் நாளாவட்டத்தில் முக்கியத்துவம் மாறும். அவை தோற்றம். ஆனால் கல்வி அடிப்படை. கல்வி வேண்டுமா, வேண்டாமா என்று கேள்வியை எழுப்பக்கூடாது. 1967 முதல் உலக சர்க்கார்கள் சத்திய ஜீவிய சக்திக்குட்பட்டுள்ளன என ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடம் சூட்சும உலகில் சந்தித்துக் கூறினார். இன்று உலகின் பொருளாதார நிலை, பணப்புழக்கம் அன்னை சக்திக்குட்பட்டு அபரிமிதமாகப் பெருகி வருகிறது. அப்படிப் பெருகி வரும் சக்தி ஏற்படுத்தும் மாறுதல்கள் புதிய படைப்பா, பழைய நிலையைக் காப்பாற்றுகின்றனவா எனில்,

அவ்வளவும் புதியன என அன்னை கூறுகிறார்.

ஆகர்ஷ்ண சக்தி ஈர்க்கும். மின்சாரம் இயக்கும். அன்னை சக்தி புதியன படைக்கும். இலையும், காயும், மரமும், பட்டையும் மண்ணில் புதைத்தால் உளுத்துப் போகும். விதை முளைக்கும். விதைக்குப் புதியன படைக்கும் திறனுண்டு. சில மரத்துக் கிளைகளும் மண்ணில் புதைக்கப்பட்டால் துளிர்க்கும். புத்துயிர் தரும் திறமை

எல்லா (மரத்தின்) பகுதிகட்குமில்லை. விதைக்குண்டு. அதுபோல் அன்னை சக்திக்குள்ள சக்தியின் திறன்கள் எவை?

நம்முள் அன்னை சக்தி நுழைந்தால், ஏற்கனவே உள்ள திறமைகள், சக்திகள் பெருகும்.

பொட்டல் நிலம் பயிரிடும் நிலமாக மாற பல ஆண்டுகள் பண்பட வேண்டும். மண் உப்பு கலந்திருந்தால் புல்லும் விளையாது. உப்பு தண்ணீர் பாய்ந்தால் உள்ள பயிரும் அழியும்.

அன்னை சக்தி பட்ட பின் பொட்டல் மண் முதல் ஆண்டு விளை நிலமாயிற்று. உப்பு மண்ணில், உப்பு நீரில் பயிர் பச்சைப் பசேலென வளர்ந்து தழைத்தது.

பயந்தவன் வேலை செய்யத் தகுதியற்றவன். பயந்து பயந்து சாவான். வேலை நடக்காது. எங்கும் வேலைக்கு எடுக்கமாட்டார்கள். பயந்தவன் பக்தனானான். பயம் பிடுங்கித் தின்றது. அன்னையை அழைத்தான். வேலை செய்து பிழைக்க முடியாதவனுக்கு மானேஜர் வேலை வந்தது. பயம் பீதியாயிற்று. அன்னையை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டான். பயத்தை மீறி ஆட்கள் பணிந்தனர். சிறந்த மானேஜர் எனப் பெயர் பெற்றான்.

  • அன்னை சக்தி பயத்தைத் தைரியமாக மாற்றும்

Life Divine படித்தால் புரியாது என்று பெயர் பெற்ற புத்தகம் Life Divine.பக்தன் ஆசிரமம் வந்தவுடன் அவனுக்குக் கிடைத்த உபதேசம் Life Divine" புரியாது. படிக்கவேண்டாம்." உபதேசத்தை ஏற்றான். மற்ற நூல்களைப் பயின்றான். எந்த வாயில் மூலமும் அன்னை எந்த ஞானத்தையும் தருவார். Life Divine தத்துவம் அனைத்தும் மற்ற நூல்கள் மூலம் பக்தனுக்குக் கிடைத்தன. மேலும் புதிய எண்ணங்கள் மனதில் தோன்றின. வாழ்வில் Life Divine ஐ எப்படிப் பயன்படுத்த முடியும் என்றும் தோன்றிற்று. Life Divine கடினமானது என்பது உண்மை என்பதைப் படித்து பக்தன் அறிந்தான். கடினமானாலும் பக்திக்குப் புரியும். அதன்படி மற்ற subjects  பாடங்களைப் பயில முடியும் எனவும் தோன்றியது. தோன்றியவை பலன் அளித்தன. அதனடிப்படையில் பல நூல்களைப் பலர் எழுத முடிந்தது. Mother's Force is creative என்பது நடைமுறையில் உண்மை எனக் காண முடிந்தது. அன்னை சக்தியால் இல்லாத குணங்களை உற்பத்தி செய்ய முடியும். அவற்றுள் ஒன்று,

  • சிறிய உள்ளத்தில் பெரிய மனப்பான்மை எழும்.
  • இதுவரை வாழ்நாளில்லாதது போல் 1½ வருஷ சம்பளத்தை பிரமேயமில்லாமல் நன்றிக் கடனாக, அன்பளிப்பாக அளிக்க சாதாரண மனித இதயம் எழுகிறது.

இந்த படைப்புத்திறன் Creativity பல வகையானது. உண்மைக்கு அவை பலிக்கும்.

  • சொத்து வாங்கினால், பத்திரச் செலவு 13% என்பது சட்டம். அது தவிர்க்க முடியாதது. நாம் வாங்கும் சொத்துக்குக் கிரயச் செலவு செய்த பின் வில்லங்க சிக்கலை அவிழ்க்க மீண்டும் சில ஆண்டுகள் கழித்து வேறு பெயரில் கிரயம் செய்ய வேண்டிவரும் பொழுது, நமக்கு அது விரயமான செயல். சர்க்காருக்குத் தவிர்க்க முடியாத செலவு.

 - அந்நிலையில் சட்டம் புதிய உருவத்தில் எழுந்து இருமுறை பத்திரச் செலவைத் தவிர்த்தது. முதல் முறை ரூ. 28,000மும், அடுத்த முறை ரூ. 1,84,000மும் செலவு தவிர்க்கப்பட்டது.

இது ஒரு வகை படைப்புத்திறன்.

  • எதிரி மனத்தில் நமக்குச் சாதகமான கருத்து எழுவது ஒரு வகை.
  • பக்தன் மீது எழுந்த புகாரை விசாரிக்க ஜட்ஜ் நியமிக்கப்பட்ட பொழுது எப்படி அவரிடம் சிபாரிசு செய்வது என யோசனை செய்யும் நேரம், ஜட்ஜ் பக்தனுடைய கூட்டாளியிடம் வந்து இது எனக்குப் புதிய விஷயம். பழைய நண்பரென்ற முறையில் உங்களிடம் விவரம் சேகரம் செய்ய வந்துள்ளேன்" என்பது மற்றொரு வகை.
  • 20 ஆண்டுகட்கு முன் நம்மை அவமானப்படுத்தியவர் நம்மை அணுகி உதவி கேட்கும் நிலையை ஏற்படுத்தியது ஒரு படைப்பு.
  • எதிரி வக்கீல் வாய் மூலமாக நமக்குரிய வாதம் தவறுதலாக எழுவது ஒன்று.
  • வாங்கிய பணத்தை ரசீது இல்லை என்பதால் இல்லை என மறுக்கும் பெரிய மனிதர் மறுக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துவது வேறொன்று.
  • பெரியவர் சிறியவரிடம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசிய அடுத்த நிமிஷம் மன்னிப்புக் கேட்பது ஒன்று.
  • பக்தரை விஷமமாகக் கேலி செய்த பெரிய மனிதரை, பக்தர் எதிரிலேயே மற்றொருவர் வந்து கேலி செய்வதும் அன்னை சக்தியின் படைப்புத்திறன்.
  • பக்தருக்குத் தொந்தரவு செய்த முதன் மந்திரி முதலாண்டில் பதவியை இழந்தது அடுத்த வகை.
  • அன்னை கருத்தொன்றை விளக்கி இதனடிப்படையில் கதை எழுதினால் பரிசு கிடைக்கும் என்று கூறியபின் ஒருவர் அதே போல் எழுதியதை உலகத்தில் முதன்மையான Wall Street Journal இப்புத்தகத்திற்கு பரிசு தரவேண்டும் என எழுதுவதும் இவ்வகையைச் சேர்ந்ததாகும்.

அன்னை உலகத்தின் பரிணாம வளர்ச்சியை அடுத்த கட்டமான சத்தியஜீவிய நிலைக்கு உயர்த்துவதற்காக வந்தவர் என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, அவருடைய சக்தி எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாகவும் முன்னேற்றமாகவும் செயல்படக் கூடியதென்பது நமக்கு நன்றாகப் புரியவேண்டும். உலகத்தின் நிலையையே உயர்த்த விரும்புகிறாரென்றால், தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருடைய மனநிலையையும் அவர் இம்மாதிரி உயர்த்தவே விரும்புகின்றார் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

அன்னையின் சக்தி புதிய மாற்றம் முன்னேற்றத்திற்கு உதவக் கூடிய விஷயங்களை ஆதரிக்கிறதென்னும்பொழுது, இத்தகைய முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள பழைய Conservative மனநிலை ஏன் அன்னைக்கு ஒத்து வருவதில்லை? அது ஏன் அன்னையின் சக்தி செயல்படுவதற்குத் தடையாகவுள்ளதென்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால், மேற்கண்ட தலைப்பு நமக்கு இன்னும் விவரமாகப் புரியும்.  

கன்சர்வேடிவ் மனநிலை என்றால் என்ன என்று கேட்டால், இருப்பதைப் போற்றும் மனநிலையாகும். இருப்பதைப் போற்றுகிறோம் என்றால், இருப்பதே சிறந்தது என்று நாம் நினைக்கிறோம் என்றாகிறது. இருப்பதுதான் என்றைக்குமே சிறந்தது, இனிமேல் வருவது இருப்பதற்கு என்றுமே ஈடாகாது என்று நாம் சொல்வதற்கில்லை. Life is a progressive movement என்னும்பொழுது, இருப்பதைவிட வருவது சிறந்ததாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. முடியாட்சி போய் மக்களாட்சி வந்துள்ளது. கிராமீய வாழ்க்கையைத் தாண்டி நகர வாழ்க்கை வந்துள்ளது. சாதி ஏற்றத்தாழ்வுகள் போய் ஜனநாயகச் சமத்துவம் வந்துள்ளது. மூடநம்பிக்கைகள் போய் விஞ்ஞானமயமான பகுத்தறிவு வந்துள்ளது. சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த மத ஈடுபாட்டைத் தாண்டி ஆன்மிகம் வந்துள்ளது. இப்படிப்பட்ட முன்னேற்றங்களை எல்லாம் பார்க்கும்பொழுது, இருந்த பழையதை விட வந்துள்ள புதியவை பல மடங்கு சிறந்தவை என்று நமக்கே நன்றாகத் தெரிகிறது. யாருமே இன்று தற்போதுள்ள மக்களாட்சி வேண்டாம், பழைய முடியாட்சிக்கே போவோம், நகர வாழ்க்கை வேண்டாம், பழைய கிராமத்திற்கே போவோம், கார், பஸ் வேண்டாம், பழைய கட்டை வண்டியிலேயே போவோம் என்று சொல்லமாட்டார்கள். அப்படிச் சொன்னாலும் அவர்கள் பேச்சு எடுபடாது. அப்படிப் பேசுபவர்களை மற்றவர்கள் பைத்தியக்காரர்கள் என்றும், மிகவும் பின்தங்கியவர்கள் என்றும் வர்ணிப்பார்கள்.

ஆகவே உலகத்தின் பரிணாம வளர்ச்சியில் பல விஷயங்களுக்குத் தற்காலிக முக்கியத்துவம் தானிருக்கிறது. அவற்றின் காலகட்டம் முடியும் பொழுது அவை தாமாக விலகி அடுத்த கட்டமாக வருகின்ற அவற்றை விடச் சிறந்த புதிய விஷயங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். தாமாக விலகி இடம் கொடுக்காமல் வருகின்ற புதிய விஷயத்தை இருப்பது எதிர்க்கும் பொழுது, அன்னையின் முன்னேற்ற சக்திக்கு இருப்பது எதிராகச் செயல்பட ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்ட சமயத்தில் அன்னை பழையதின் எதிர்ப்பை மீறி புதியது வெற்றி பெற வழி செய்கிறார்.

உதாரணமாக இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சங்கரருடைய அத்துவைதமும் மாயாவாதமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆன்மிகத்தில் அத்துவைதமும் மாயாவாதமும் தான் என்றைக்கும் நிலையான உண்மைகள் என்றில்லை. மாயாவாதத்தைத் தாண்டி படைப்பும் தெய்வீகமானது தான், அதனுள் மறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிக்கொண்டு வருவது தான் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்றும், இதற்கு உதவியாகச் செயல்படப் போவது சத்திய ஜீவியமென்றும், பகவானும் அன்னையும் அறிவித்து உலகத்தின் ஆன்மிக முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

இப்படி அவர்கள் நமக்குக் காட்டிவிட்ட பிறகு வந்துள்ள புதிய ஆன்மிகத்தை ஆதரிக்கும் வகையில் நாம் செய்வனவற்றையெல்லாம் அன்னை வரவேற்பார்கள். வந்துள்ள புதியதை ஏற்காமல் பழைய மாயாவாதத்தையே பிடித்துக் கொண்டிருப்பவர்களை அன்னை கருதப் போவதில்லை. புதிய ஆன்மிகத்திற்கு உள்ளுறை விஷயம்தான் முக்கியமே தவிர தோற்றமும் மற்றும் முறைகளும் முக்கியமில்லை. இதனால் தான் பூரண யோகத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் அன்னை aspiration, consecration and surrender (இறையார்வம், சமர்ப்பணம், சரணாகதி) என்ற உள்ளுறை விஷயங்களை வலியுறுத்துகிறாரேயொழிய, தியானம், விரதம், யோகாசனம், புஷ்பாஞ்சலி, வழிபாடு போன்ற வெளித்தோற்றங்களுக்கும், முறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் பழைய ஆன்மிகத்திற்குத் தோற்றமும், முறைகளும் மிகவும் முக்கியம். காவியுடை, ஜபமாலை, தாடி, ஜடாமுடி, கமண்டலம், நிஷ்டை, யோகாசனம், ஸதோத்திரம் போன்ற வெளித்தோற்றங்களையும்,முறைகளையும் பழைய ஆன்மிகம் மிகவும் வலியுறுத்துவதால், உள்ளிருக்கும் சாரம் போய்விடுகிறது.

தோற்றத்திற்கும் சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தோற்றமிருந்தால் சாரமிருக்கிறதென்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். தோற்றமில்லாத பொழுது சாரமில்லை என்றும் முடிவு செய்கிறார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய பல பேர் ஆசிரமத்திற்கு வந்தபொழுது, இந்த இடம் ஒரு ஆசிரமம் மாதிரியே இல்லையே! இங்கே இருப்பவர்கள் யோகம் செய்கிறார்கள் என்று எப்படி நம்புவது என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். உள்ளுறை விஷயங்களையும் சாரத்தையும் காப்பாற்றிக் கொள்வது தான் conservative மனப்பான்மையின் நோக்கமென்றால் அது தவறில்லை. ஆனால் நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும், நடைமுறையில் சாரத்தைக் காப்பாற்ற முடியாமல் தோற்றத்தைத்தான் காப்பாற்ற முடிகிறதென்றாகிறது. வெறுந்தோற்றத்தைக் காப்பாற்றுவதென்பது வருங்கால முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதால் தான் அன்னை கன்சர்வேட்டிவ் மனப்பான்மையையும் செயல்பாடுகளையும் ஆதரிப்பதில்லை.

ஆன்மிகமென்பது மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உள்ள ஆன்மிக உறவைப் பலப்படுத்துவதற்காக உண்டானது. ஆரம்பத்தில் இந்தப் புனிதமான நோக்கமிருந்தாலும், நாளடைவில் சடங்கு சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் அதிகரித்தன. இதன் விளைவாக உயர்ந்த ஆன்மிகமாகத் துவங்கியது, மதவழிபாடாக மாறி இன்று பூஜை புனஸ்காரங்கள் தான் மிஞ்சி நிற்கின்றன. ஆக ஆன்மிக முன்னேற்றம் என்ற சாரம் போய் மதங்களிடையே இன்று வெற்று வழிபாடு என்ற பழக்கந்தான் நிலைத்து நிற்கிறது.

அன்னை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது நாமே இறைவனாக மாறுவதற்கான முயற்சி. ஆனால் மதவழிபாடு என்பது பக்தனை என்றுமே துதிபாடும் பக்திமான் என்ற நிலையிலேயே வைத்திருப்பது. இதனால் தான் அன்னை மதவழிபாடு என்ற பழைய பழக்கத்திலிருந்து விடுபட்டு இறைமயமான சத்தியஜீவிய மனிதனாக மாறுவதற்கு உதவி செய்யும் புதிய ஆன்மிகத்திற்கு நம்மை வரும்படி அழைக்கிறார்.

சாரம் வேறு, தோற்றம் வேறு என்பது ஆன்மிகத்தில் மட்டுமில்லை. வாழ்க்கையிலும் பல துறைகளிலும் நாமிதைக் காணலாம். படிப்பு வேறு, பட்டம் வேறு, கேரக்டர் வேறு, behaviour வேறு. Educational standards உயர்வாக இருந்தபொழுது படித்தவர்களெல்லாம் அறிவாளிகளாக விளங்கினார்கள். ஆனால் இன்று standards எல்லாம் குறைந்துவிட்டன. அதனால் மேலோட்டமாகப் படித்துப் பட்டம் வாங்கியவர்களையெல்லாம் இன்று அறிவாளிகளென்று நாம் முடிவு செய்தால் நம் முடிவு தவறாகவுமிருக்கலாம். படிப்பென்பது உள்ளுறை விஷயம். பட்டமென்பது வெளித்தோற்றம். பட்டமிருந்தால் தான் வேலை கிடைக்கும் என்று degreeக்கும் வேலைக்கும் சமூகத்தில் இன்றொரு தொடர்பு வந்துவிட்டதால், அறிவு வளர்ச்சிக்காகப் படிப்பதென்ற நோக்கமே போய், பட்டம் வாங்குவதற்காகப் படிப்பதென்பதாகிவிட்டது. இதனால் படிப்பிருந்த depth மற்றும் scholarship என்பவை போய் degree எடுக்குமளவிற்குப் படித்தால் போதுமென்றாகி இன்று படிப்பு மேலோட்டமாகிவிட்டது. இப்படி படிப்பும் பட்டமும் வேறுவேறாகிவிட்டதால், பட்டத்தின் மேல் மக்களுக்கு வந்துள்ள மோகத்தைக் கண்டிக்கும் வகையிலும் அதே சமயத்தில் சீரியஸான படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் அன்னை ஆசிரமத்தில், தாம் நிறுவிய பள்ளியிலும் higher courseஎன்ற college-level உயர்கல்வி ஸ்தாபனத்திலும், certificate மற்றும் degree என்றெதுவும் வழங்குவதில்லை. பட்டத்தை விட்டுவிட்டு உண்மையாக நாம் படிப்பை நாடும்பொழுது நம்மறிவு அபாரமாக வளர்கிறது. நம்கையில் பட்டமில்லாவிட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சி நமக்கு வாழ்க்கையில் நிச்சயம் கைகொடுக்குமென்று அன்னை வழியில் கற்பவர்கள் நம்பலாம்.

இப்படிப் பட்டத்தை விட்டுவிட்டு உண்மையான படிப்பை நாடு என்று அன்னை சொல்வது conservative மனப்பான்மை உள்ளவர்களுக்கு அதிர்ச்சியாகவிருக்கிறது. அவர்களுக்குப் பட்டத்தைக் கைவிட்டால் படிப்பையே கைவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இப்படி, பட்டந்தான் படிப்பென்று நினைப்பவர்களை அன்னை கருதுவதில்லை. பட்டத்தை நாடாமல் ஆசிரமப் பள்ளியில் சேர்ந்து உண்மையாகப் படிப்பை நாடுபவர்களுக்கு அன்னை எல்லாவகைகளிலும் துணை செய்கிறார். அன்னையினுடைய creative சக்திக்கு ஒத்துழைக்கும் வகையில் நாம் செயல்பட விரும்பினால் உயர்ந்த சாரமுள்ள உள்ளுறை விஷயங்களை நம் வாழ்க்கையில் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அதே சமயத்தில் காலவோட்டத்திற்கு ஏற்றாற்போல் வெளித்தோற்றத்திலும் நாம் செயல்படும் முறைகளிலும் வரக்கூடிய மாற்றங்களையும் நாமனுமதிக்க முன்வரவேண்டும்.

நிலையாக இருக்க வேண்டியவை

மாறக்கூடியவை

1. வேலை செய்வதும் சம்பாதிப்பதும்

உத்யோகமும், வேலை செய்யும் பாணியும் (employment or self-enterprise)

2.படிப்பும், கல்வியும்

course  மற்றும் subject

3. சின்சியாரிட்டி, அன்பு, நாணயம் தைரியம், courtesy, அடக்கம், தன்மானம், நன்றியறிதல் போன்ற உயர்ந்த வேல்யுக்கள்

உடை, உணவு வகைகள், பேசும் பாஷை greeting முறைகள்

4. இறையார்வம், சமர்ப்பணம் சரணாகதி

தியான நேரம், மந்திரம், ஆன்மிகப் புத்தகங்களைப் படிப்பதன் வரிசை கிரமம், பூஜையறை அமைத்தல்

இப்படி அடிப்படை விஷயங்களில் உறுதியாகவிருந்து கொண்டு மேலோட்டமான விஷயங்களில் flexible ஆகவிருக்க முன்வருபவர்கள் அன்னையின் creative சக்திக்கு ஒத்துழைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்றாகிறது. இப்படியில்லாமல் method of functioning மற்றும் பழக்க வழக்கங்களில் பிடிவாதத்தை வெளிப்படுத்துகின்றவர்கள் அன்னையோடு ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் என்றாகிறது. ஓர் அன்னை பக்தரான இளைஞர் திறமைசாலியாகவும் கடின உழைப்பாளியாகவுமிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று சொந்தமாகத் தொழில் செய்வது. இரண்டாவது சம்பளத்திற்கு employment சேர்வது. அவர் துணிச்சலாகச் செயல்பட்டுச் சொந்தமாகத் தொழில் ஆரம்பித்தால் நிறைய சம்பாதிப்பாரென்று அன்னைக்குத் தெரிந்தால் அன்னை அவரதைச்செய்வதைத்தான் ஆதரிப்பார். இளைஞர் தாமாக ஒரு முடிவிற்கு வாராமல் விஷயத்தை அன்னையிடம் சமர்ப்பித்து அன்னை காட்டும் வழியில் செயல்படுவதாக அன்னையிடம் சொன்னாரென்றால், சொந்தத் தொழில் செய்வது தான் அவருக்கு நல்லதென்பதை உணர்த்தும் வகையில் அன்னை அவருக்கு அறிகுறிகள் தருவார்.

இப்படி முடிவை அன்னையிடம் விடாமல் பல தலைமுறைகளாக அவருடைய குடும்பம் employmentஐத்தான் நாடியிருக்கிறது என்பதால், அந்தப் பாணியிலேயே automatic ஆகத் தானும் செயல்பட அவர் முடிவு செய்து விடுகிறாரென்றால், அன்னை பக்தராகவிருந்தாலும் flexibility இல்லையென்பதன் காரணமாக அன்னையின் கிரியேட்டிவ் சக்தியோடு ஒத்துழைக்காமல் போகிறார்.

Dynamic ஆகச் செயல்படுகின்ற அன்னை பக்தர் ஒருவருக்கு அவருடைய தகப்பனார் தாம் proprietary concernஆக நடத்தி வந்த நிறுவனத்தைச் சொத்தாக விட்டுவிட்டு போகிறாரென்று வைத்துக் கொள்வோம். தம்முடைய நிறுவனத்தின் வியாபார அபிவிருத்திக்காக இவ்விளைஞர் ஒரு வங்கியை அணுகி மேனேஜரிடம் கடனுதவி கேட்கும்போது, அந்த மேனேஜர் proprietary concernஆக வைத்திருக்காமல் Pvt.Ltd concern ஆக மாற்றினீர்கள் என்றால், நீங்கள் கேட்கும் கடனுதவியை எங்களால் கொடுக்க முடியும் என்று யோசனை தெரிவித்தாரென்றால் அந்த மேனேஜர் மூலம் அன்னைதான் இந்த யோசனையை வழங்குகிறாரென்று பக்தர் புரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் proprietary concernஐவிட Ltd concern என்பது வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் தரக்கூடியது. Ltd concernஇல் கணக்கையெல்லாம் ஒழுங்காக எழுத வேண்டும். Income tax, Sales tax எல்லாம் ஒழுங்காகக் கட்ட வேண்டும், accounts audit செய்ய வேண்டும். ஆனால் proprietary concernஇல் இவற்றிற்கெல்லாம் அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. இதனால் தான் கடனுதவி தரவிரும்பும் வங்கிகள் Pvt. Ltd கம்பெனிகளை அதிகமாக ஆதரிக்கின்றன.

Proprietary concern வைத்திருக்குமிளைஞர் வியாபாரம் பெருகவேண்டுமென்று அன்னையிடம் பிரார்த்திக்கும் பொழுது அன்னையின் சக்தி creativeஆகச் செயல்பட்டு Ltd concernஆக மாற்றிக்கொண்டால் வியாபார அபிவிருத்திக்கு வழி பிறக்குமென்று Bank Manager மூலம் பக்தருக்கு வழி காட்டுகிறது. அதைப் புரிந்து கொண்டு அவர் தம் நிறுவனத்தை Ltd concernஆக மாற்றினாரென்றால், அன்னையின் creative சக்தியோடு ஒத்துழைக்கின்றார். இப்படிச் செய்யாமல் தகப்பனார் proprietary concernஆக நடத்தியதால் தானும் அவ்வாறே நடத்துவதாகப் பிடிவாதம் செய்தாரென்றால், அவருடைய conservative மனப்பான்மை அன்னையின் அருள் அவர் வாழ்க்கையில் creative ஆகச் செயல்படுவதைத் தடுக்கிறதென்றாகிறது.

பொதுவாக நம்மிடம் எந்த உயர்ந்த அம்சம் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வரத்தான் அன்னையின் அருள் செயல்படுமே தவிர நாமிருக்கின்ற நிலையிலேயே தொடர்ந்து இருப்பதை அருள் ஆதரிக்காது. சாதாரண பக்தராகவிருக்கின்ற ஒருவருக்கு பூரணயோகத்தைச் செய்யக்கூடிய சாதகனாக மாறக்கூடிய அம்சமிருப்பதாக வைத்துக்கொள்வோம். அம்சமிருந்தாலும் அவருக்கு ஆர்வம் அத்திசையில் இல்லாமல் சாதாரணக் குடும்ப வாழ்க்கை மற்றும் social lifeஇல் இருக்கிறதென்றால், அன்னை அதிலிருந்து அவரை மீட்டு அவருடைய உயர்ந்த அம்சத்தை அவர் மதித்து நடப்பதற்கான சூழலை உண்டு பண்ணுவார்.

பிள்ளைகளின் மேல் பாசமிருப்பதாகவிருந்தால் பிள்ளைகளை அப்பால் போகச் செய்வார். பணம், status, அதிகாரம், உற்றார் உறவினரின் ஆதரவு என்றிவற்றைப் பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தாரென்றால், ஒரு பெரிய சிரமம் வரும் பொழுது இவை எதுவுமே உதவாமல் தம்முடைய அருள் மட்டுந்தான் அவரைக் காப்பாற்றுகின்றது என்பதை அவருக்குப் புரிய வைப்பார். தம்முடைய திறமை உழைப்பு பணபலம் செல்வாக்கு இவற்றை நம்பிச் செயல்படும்பொழுது அவருக்குக் காரியம் கூடி வாராமல், நம்பிக்கை, சமர்ப்பணம், சரணாகதி போன்ற அணுகு முறைகளைக் கடைப்பிடிக்கும்பொழுதுதான் காரியம் கூடிவரும்படிச் செய்வார். தியானம் செய்யும்பொழுது peace, silence, joy போன்ற உயர்ந்த ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கச் செய்து இதன் மூலம் தம்முடைய உயர்ந்த அம்சத்தைப் பற்றிய விழிப்புணர்வு வரும்படிச் செய்வார்.

பக்தர்களாகவிருப்பவர்களின் யோகம்சத்தை வெளிக்கொண்டு வந்து அவர்களின் தரத்தை உயர்த்துவதோடில்லாமல் பொதுவாகவே எல்லோரையும் அவர்களிருக்கின்ற நிலையிருந்து அடுத்த உயர்நிலைக்கு உயர்த்தும் வகையில் அவருடைய அருள் செயல்பட்டு கொண்டேவிருக்கும். Physical levelஇல் இருப்பவர்களை அடுத்த உயர்ந்த நிலையான உணர்வு நிலைக்கு உயர்த்துவார். உணர்வு நிலையில் இருப்பவர்களை அடுத்த உயர்நிலையான அறிவு நிலைக்கு உயர்த்துவார்.

சண்டை போட்டே காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்களை சண்டையில் தோல்வியைத் தழுவச் செய்து சமரசத்தை நாடும்படிச் செய்வார். கிராக்கி செய்யும் பழக்கம் கொண்டவர்களை விட்டுக் கொடுத்து பழகக்கூடிய சூழலுக்கு ஆட்படுத்துவார். சுயநலம், ஆணவம், பொறாமை, சோம்பல், அவசரம், பயம் போன்ற வேண்டாத குணங்களுக்கு அடிமையானவர்களை இதற்கு எதிர்மாறான குணங்களை வளர்த்துக் கொள்ளும்படியான சூழல்களைச் சந்திக்க வைப்பார்.

இப்படி அன்னையினுடைய அருட்சக்தி எந்நேரமும் அன்பர்களின் மனநிலையை உயர்த்தும் வகையிலேயே செயல்கொண்டிருப்பதால், அவரிடம் வருகின்ற எவருமே தம்முடைய தற்போதைய நிலையிலேயே திருப்திப்பட்டுக் கொண்டு அதைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. இருப்பதைவிட அடுத்த உயர்நிலைக்குப் போவதற்கு அவர்களே முன்வந்து, அன்னையின் அருளோடு ஒத்துழைத்தார்களென்றால், அன்னையின் creativepower அவர்களுடைய வாழ்க்கையில் மேலும் விரைவாக செயல்பட்டு நல்ல பலன்கள் கொடுக்கும்.

....

ஸ்ரீ அரவிந்த சுடர் 

அன்பு தெய்வீக அன்பாக மாறும்பொழுது, அனந்தனின் இரகஸ்யம் வேணுகானமாக வெளிப்படும்

Comments

10. அன்பர் உரை (Contd.) After

10. அன்பர் உரை (Contd.)

 After the para 9 - from இது to படைப்புத்திறன் - 9 bullet points are there. But the bullets are missing. 1st two points are clubbed together.

point 1, line 4, - இது - "இது 

from எதிரி to வகை. - 1st bullet point.

from பக்தன் to வகை. - 2nd bullet point.

para 10, line 3 - Conservative - conservative

para 13,after line 4 - extra space.

para 14, line 5 - ஆன்மிகத்திற்குஉள்ளுறை - ஆன்மிகத்திற்கு உள்ளுறை

  do.       do. 8 - வலியுறுத்துகிறாரே யொழிய - வலியுறுத்துகிறாரேயொழிய

   do. 15, do. 4 - மாதிரியேஇல்லையே - மாதிரியே இல்லையே

    do. 17, do. 4 - பழக்கத்திருந்து - பழக்கத்திலிருந்து

    do.  18, do. 11 - படிப்பிருந்த - படிப்பிலிருந்த

     do.       do. 16 - courseஎன்ற - course என்ற

     do.       do.  19 - நம்கையில்பட்டமில்லாவிட்டாலும் -

                              நம் கையில் பட்டமில்லாவிட்டாலும்

      do.      do.   13 - from  இப்படி to நம்பலாம்.- separate para.

After para 19 - two sub headings are there -

under the heading - மாறக்கூடியவை - line 2 - (employment orself-enterprise) -

                                                                            (employment or self-enterprise)

paragraphs after the above two sub headings - 

para 1, line 11 - அவரதைச்செய்வதைத்தான் - அவரதைச் செய்வதைத்தான் 

para 3, line 2 - concernஆக - concern ஆக 

   do.     do. 5 -  concernஆக - concern ஆக

   do.     do.  9 - Ltd concernஎன்பது - Ltd concern என்பது

   do.      do. 10 - Ltd concernஇல் - Ltd concern இல்

   do.      do.  12 - auditசெய்ய - audit செய்ய

    do.     do.   12 - proprietary concernஇல் - proprietary concern இல்

    do. 4,  do.  3 -  Ltd concernஆகமாற்றிக்கொண்டால் -

                           Ltd concern ஆக மாற்றிக்கொண்டால்

     do.      do.  5 -  Ltd concernஆக - Ltd concern ஆக 

      do.      do.  6 - proprietary concernஆக - proprietary concern ஆக

     do. 5,    do.  6 - social lifeஇல்  - social life-இல்

      do.        do. 7 - அதிருந்து - அதிலிருந்து

       do. 7,   do.  3 - நிலையிருந்து - நிலையிலிருந்து

       do.       do.   4 - Physical levelஇல் -  Physical level இல்

       do. 9,   do.   6 - creativepower - creative power

ஸ்ரீ அரவிந்த சுடர்

to be justified.

line 2 - வெüப்படும் - வெளிப்படும்

 

 

11. Consultancy

Between the main heading and sub-heading - extra space.

After para 1 -

அந்த அருளுக்கும் உபரியுண்டு. - to be centred & bold letters.

After the two bullet points -

for line 1 & 2 - first quotations are missing

para 5 - After line 4 - extra space.

do.   6 -    do.      3 -      do.

After para 6 - 4 bullet points are there.- bullets are missing

In the 2nd point, 3rd point is also clubbed.

from அடுத்த to வாங்கினர். - 3rd point

Last point - line 1 - தொழில் - தொழிலில்

 

 

 

 

 

 

10. அன்பர் உரைpara 1, line 7

10. அன்பர் உரை

para 1, line 7 :   -வேஷ்டி, குடுமி -பெரியது :   - வேஷ்டி, குடுமி - பெரியது

 do.      do. 9 - creativeஆக - creative ஆக

  do.      do.11 - from வாழ்வையும், to எவை? - separate para

After the above para, for the 9 points - bullets are missing.

1st point - Creative conservative. - creative, conservative.

2nd point - தாழ்வு -சிறியது,  - தாழ்வு - சிறியது,

para 3 -  after line 4 - extra space

para 6, line 1 - Life Divine  - delete

   do.    do.  2 - Life Divine" புரியாது. படிக்கவேண்டாம்." -

                       "Life Divine புரியாது. படிக்கவேண்டாம்." .

 After para 6 - சிறிய உள்ளத்தில் etc. - 1st bullet point. 

       do.        - இதுவரைவாழ்நாளில்லாததுபோல் etc. 2nd bullet point

       do.        2nd bullet point, line 1 - இதுவரைவாழ்நாளில்லாததுபோல் -

                                                       இதுவரை வாழ்நாளிலில்லாததுபோல்

para 7, line 1 - Creativity - creativity 

After para 7 fromசொத்து வாங்கினால், to செலவு.- bullet point.

After the abovebullet point from அந்நிலையில் to தவிர்க்கப்பட்டது.- continuation of para 7

in the above continuation -  அந்நிலையில் : - அந்நிலையில்

 



book | by Dr. Radut