Skip to Content

05.அஜெண்டா

Agenda

Mother needs someone to unite the Ashram

ஆசிரமத்தில் ஒற்றுமையுண்டுபண்ண அன்னைக்கு ஒருவரில்லை

300 வீடுள்ள செட்டியார் வீட்டுப் பெண்ணை வாடகை வீட்டில் குடியிருப்பவருக்குச் சொந்தம் கருதி கொடுத்தனர். வீடு வாடகை வீடானாலும், அண்ணன் தம்பி ஐந்து பேரும் ஒற்றுமையாக இருந்தனர்.

10 வருஷத்தில் ஒற்றுமை குடும்பத்தை உயர்த்தியது.

20 வருஷத்தில் ஊரில் பெரிய பணக்காரர் என்ற பெயர் எடுத்தது.

ஒற்றுமையின் உயர்வை அறியாதவரில்லை.

ஒற்றுமையை அதிகாரத்தால் ஏற்படுத்தலாம். ஹிட்லர் நாட்டை அப்படி ஒற்றுமைப்படுத்தினான். அதிகாரத்தால் ஏற்படும் ஒற்றுமையும், ஒற்றுமை என்பதால் சாதிக்கும். அதிகாரம் என்பதால் சாதித்தபின் அழியும். திருடர்கள் கூட்டமாக இருப்பார்கள். கூட்டம் ஒற்றுமையாய், உண்மையாக இருக்கும். திருடர்களுடைய ஒற்றுமையும் சாதிக்கும்.பெரிய அளவில் சாதிக்கும்.

. சத்தியஜீவியத்தின் அடிப்படை ஒற்றுமை.

. பிணக்கு (vital) உணர்வுக்குரியது.

. மனத்திற்குரியது விட்டுக்கொடுப்பது (compromise).

ஆசிரமத்தில் 2000 பேரும் 40, 50 சிறு கூட்டங்களாக மாறி போட்டியில் இறங்கியதால் சத்தியஜீவிய சக்தி பயன்படாமல், vital உணர்வுக்குரிய போட்டியாகவும், சண்டையாகவும் மாறிற்று. அப்பொழுது அன்னை "ஒற்றுமையுண்டு பண்ண எனக்கு ஒருவரில்லை'' என்று கூறினார்.

இரவில் அன்னை சாதகர்களுடன் சூட்சும உலகிலிருப்பது வழக்கம். அங்கு இக்கூட்டத்தில் போட்டியிடும் இரு தலைவர்களை அன்னை கண்டார். சூட்சும உலகிலும் இருவரும் சண்டையிடுவதைக் கண்டார்.

நம் வீட்டில் சண்டை குறைந்து சுமுகம் ஏற்பட்டால், வீடு களையாக மாறி, சுபீட்சமாக மாறும்.

மனம் அடங்கினால், மனிதர்கள் அடங்குவார்கள்.

. மனம் அடங்குவது என்பது முக்கிய கட்டம். பலரால் முடியாது, சிலரால் முடியும்.

. மனம் வாழ்வு மையம் என்பதால் மனம் அடங்கினால், நம் வாழ்வு நமக்குக் கட்டுப்படும்.

. வாழ்வு கட்டுப்படுவதை நாம் "நினைத்ததெல்லாம் நடக்கிறது" என்போம்.

. நினைப்பதைச் சாதித்தால், செய்வனவெல்லாம் கூடிவரும்.

. செய்வனவெல்லாம் கூடி வந்தால், அதற்கு அதிர்ஷ்டம் எனப் பெயர்.

. நம் மனதில் எண்ணமும், உணர்வும் ஒற்றுமைப்பட்டால் நமக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டது எனப் பொருள்.

****


 


 



book | by Dr. Radut