04. சாவித்ரி
சாவித்ரி
P.140 To battle overcome and make one's own
போராடி வென்று, சொந்த உடைமையாக்கி
- சொந்த மகிழ்ச்சியைப் பிறர் சந்தோஷத்தில் கலந்து
- உடைமையாகவும், உடைமையாக்கவும் எண்ணி
- உணர்ந்து, அனுபவித்து, வாழ்வதுடன் தன்னையும் பிறர் அனுபவிக்க விழையும்
- இதுவே அதன் சிறு ஆரம்பமாகும்
- க்ஷண இன்பம் ஆரம்பித்தவுடன் முடிந்தது
- அறியாமையின் முத்திரை அவசரமாக அழியும் சின்னம்
- பழக்கம் பழுதற செல்லிலும் ஊறி
- இருண்ட தீமை ஆவியாக எழுந்தது
- நம் செயலையும் கனவையும் பேயெனத் தொடரும்
- புவியில் வாழ்வு காலூன்றி நிரந்தரமாயிற்று
- அது பழக்கத்தின் பக்குவம், அல்லது உணர்வின் சட்டம்
- அஸ்திவாரமின்றி அசைந்து மாறும் நிலையில் மீண்டு வரும்
- அதன் வேரும் மூலமும் எப்பொழுதும் ஒன்றே
- இந்த வேகம் நம் அமைப்பின் கூறுகளான அம்சம்
- உலகம் விழித்து உடன் எழுப்பிய கூக்குரல்
- நம்மைச் சுற்றி வளைய வந்து தெய்வத்தைக் கட்டிப் போட்டு
- பகுத்தறிவு பிறந்தாலும், ஆத்மா ரூபம் பெற்றாலும்
- விலங்கிலும், ஊர்வனவற்றிலும், சிந்திக்கும் மனிதனிலும்
- அது தொடரும். அது அவர் வாழ்வின் ஊற்று
- வாழ்வும் மூச்சும் நிலைபெற இதுவும் தேவை
- அறியாத சிறு உலகில் ஆத்மா
- சிறைப்பட்ட ஜீவியத்தைக் காப்பாற்ற வேண்டும்
- நடுங்கும் புள்ளியில் விரையும் நீரென
- இருண்ட ஜடத்தின் அனந்தமான வீச்சு
- அளவு பருத்து, ஒளி நிமிர்ந்து நோக்கி
- இயற்கை மூலத்தின் முடிச்சால் வாழ்கிறது
- தாழ்ந்த சக்திகளின் பிடி தளராமல் செயல்படுகிறது
- அறியாத ஆழத்தினின்று உணர்வின் வேகம் உந்தி எழுகிறது
- ஜட சூன்யத்திற்கு அண்டை வீட்டுக்காரனாகி
- அறிவில்லாத உலகம் இதைச் சட்டமாகக் கொண்டது
- இருண்ட பரவெளியின் புரியாத புதிரில்
- அனந்தன் தன்னை இழந்த தீவிரத்தில்
- அனைத்தும் அழியும் சூன்யத்தில் அமிழ்ந்து
- அசத்தின் இருளைக் காப்பாற்றுவதென்பதில்லை
- ஜீவன் இருளில் மூழ்காவிட்டால்
********
ஸ்ரீ அரவிந்த சுடர் பூமியின் ஆன்மா புதுவையிலுறைகிறது. |
*******
- Login to post comments