11. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
48. பணமும், அதிகாரமும் நம்மை நாடி வருவது - வலிமை சேர்வது.
- நாடி வருவது நானிலம் பணிவது.
- மனிதன் ஜடம்.
- பணம் ஜீவனுள்ளது. அடுத்த கட்டத்திற்குரியது.
- நம் லோக சக்திகளை நாம் தேடினால் அவை பலிக்கும்.
- அடுத்த உயர்ந்த லோக சக்திகளை - பணத்தை - முயன்று பெற வேண்டும்.
- அது பெரு முயற்சி.
- அதனால் பணமுடையவனுக்கு மரியாதை.
- அப்படியிருக்க எப்படி ஒருவனைப் பணம் நாடி வரும்?
- பதவி அதைவிட சற்று உயர்ந்தது.
- பணமோ, பதவியோ ஒருவரை நாடி வருவது எப்படி, ஏன்?
- வலிமை அதற்குரியதைக் கவர்ந்து ஈர்க்கும்.
- வலிமை என்பது என்ன?
- செய்த வேலைக்குரிய பலனுக்கு மேல் உபரி எழுந்து சேர்வது வலிமை.
- வலிமை திறமையிலிருந்து எழுவது.
- திறமை பல வகைப்படும்.
- ஒவ்வொரு திறமைக்கும் உள்ள உபரிக்கு வலிமையுண்டு.
- பல நூறு திறமைகளால், அவற்றின் உபரியால் சேர்ந்தது வலிமை.
- அந்த வலிமை அடுத்த லோகத்திற்குரியது. ஜட உலகிலுள்ள மனிதனுக்கு உயிரில் வலிமை சேரும்.
- அவ்வலிமைக்குப் பணம், பதவி பணியும்.
- வலிமை எல்லா லோகங்கட்கும் உரியது, ஜடம், உயிர், மனம், ஆன்மா.
- ஆன்மீக வலிமை அரிது.
- இருந்தால் வெளியில் தெரியாது.
- தனக்கே தெரியாமலிருக்கும்.
- பணமோ, பதவியோ நாடி வந்தால் ஆன்மீக வலிமையிருப்ப- தாகப் பொருள்.
- சீசர், அலெக்ஸாண்டர் 20ஆம் வயதில் தலைமைக்கு வந்தனர்.
- நெப்போலியன் 29இல் வந்தான்.
- தலைமை வயதிற்குரியதல்ல, வலிமைக்குரியது.
- வெளிநாட்டுப் பட்டம் பெற்றவருக்குத் தலைமை வீட்டில், ஆபீசில், கட்சியில் அதுபோல் வருவதுண்டு.
- தேடிப் போய் கிடைப்பதே பண விஷயத்தில் அரிது.
அது நாடி வருவது அரியதில் பெரியது. - அரியதில் பெரியது ஆன்மா.
ஆன்மாவை அவை தேடி வருவது யோகம் பலிப்பதாகும். - 1950இல் மத்திய மந்திரி புதுவை பெரியவர்களைக் கூட்டி, சர்க்கரை ஆலை ஆரம்பிக்க அழைத்தார். எவரும் முன் வரவில்லை.
- 1980இல் ஒரிஸாவில் 5 இலட்சம் பணமுள்ளவரில்லை.
- பணம் அரிது.
- அரிதான பணம், அபூர்வமான பதவி ஒருவரைத் தேடி வருவது வாழ்வில் காணக் கிடைக்காதது.
- அது நடந்தால் அவருக்கு ஆன்மீக விழிப்புண்டு எனப் பொருள்.
- அவ்விழிப்பிற்கு யோகம் பலிக்கும்.
- பலிக்கும் வாய்ப்பு அரிது.
- அது இருந்து நடைமுறையில் பலிப்பது அதனினும் அரிது.
- நான் அதை பூரணயோக வாயில் என்றேன்.
- எனக்கு வரும் கடிதங்களில் ஏதோ சிலவற்றுள் அந்த அம்சமிருப்பதை நான் காண்கிறேன்.
தொடரும்.....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் சிப்பந்தியின் நாணயம் அதிகாரியின் அதிகாரத்தைப் பொறுத்தது. |
********
ஸ்ரீ அரவிந்த சுடர் அதிகாரியின் அதிகாரமில்லாத நேரமுள்ள நாணயம் நாட்டின் வழக்கிலுள்ள நாணயம். தனிப்பட்டவனுடைய சுபாவமான நாணயம். அதிகாரமில்லாத இடத்து நாணயமே நாணயம். |
*******
- Login to post comments