Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. குறை குடம் கூத்தாடும்.

    குறை நிறைவாகும்.

  2. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்.
    பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.

    ஆடிக் கறக்கின்ற மாடு ஆடாமல் கறக்கும்.

  3. முதற் கோணல் முற்றும் கோணல்.

    முதற்கண் வெற்றி, முடிவான முழுமையான வெற்றி.

  4. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

    அன்பர் மனம் அருள், அடுத்தவர் மனம் இருள்.

  5. கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்.

    அருள் வரும்பொழுது, அனைத்துத் தடைகளையும் மீறி வரும்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சில்லறை ஆசைகள் உயர்ந்த இலட்சியமாக, மறுக்க முடியாதவையாக எழுவதுண்டு. நம்மில் ஒரு பகுதி - எவ்வளவு சிறியதானாலும் - சில்லறையாக இருந்தால் அப்படியிருக்கும்.
 

********



book | by Dr. Radut