01. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
N. அசோகன்
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் இதே சட்டப்படி ஒரு காலத்து ஆன்மீகப் பண்புகள் அடுத்த தலைமுறையில் சமூகப் பண்புகளாக மாறுவது சமுதாயத்தின் பண்பின் நிலையைக் காட்டும். பழைய ரிஷி இன்று குடும்பம் நடத்துகிறான். |
ஸ்ரீ அரவிந்த சுடர் பரிணாமம் தோற்றத்திற்குரிய உருவங்களைச் சார்ந்தது. பரிணாமம் ஜீவியத்திலும் நடக்கும். மனிதன் முனைந்து முயல்வது பரிணாமம். மேலிருந்து அருள் செயல்பட்டு, மனித பரிணாம முயற்சியைத் துரிதப்படுத்துகிறது. அருளைச் செயல்பட வைக்கும் பரிணாம முயற்சி இடைவிடாத நிலையில், முயற்சி யோகமாகும். அன்னையின் அவதாரம் முயற்சியைச் சுருக்குகிறது. சரணாகதியடைந்த மனிதனின் முயற்சியை முழுவதும் அழித்து அருள் வெளிப்பாடாக்குகிறது. பரிணாமம் அருளை ஈர்க்கும். அருள் பரிணாமத்தைத் துரிதப்படுத்தும். |
- Login to post comments