04. சாவித்ரி
சாவித்ரி
P.114 Its clear technique of firm and rounded lives
தெளிந்த திறமையின் முழுமை பெற்ற வாழ்வு
- உயிரில்லாத உருவங்களின் பெருமைநிறை மக்கள்
- மூச்சுவிடும் முழுமை பெற்ற நம்போன்ற உடல்
- ஆச்சரியத்தில் மூழ்கிப் புல்லரித்த புலன்கள்
- தெய்வீகலோக சஞ்சாரம் உறவென உணர்த்தும்
- அற்புத ரூபத்தை அளவுகடந்து பாராட்டி அருகணைத்து
- தெய்வம் விளையாடும் கருவியாகச் சிறந்து
- அழிவின் அம்சம் அழியா அமரத்துவம் பெற்றது
- குறுகிய மூலைகள், ஒதுங்கி நிற்கும் ஓரம்
- சிறியதன் உயர்வு உச்சத்தை எட்டும் அரியாசனம்
- எதிர்காலம் கனவுலகையும் கடந்து நின்றது
- எல்லையில்மட்டும் எழும் பூரணத்தின் முழுமை
- தனக்குமட்டும் உரிய தகுதியைக் கடந்த உயர்வு
- எப்பரப்புமற்ற எதுவும் அழிந்த நிலை
- அளவிறந்ததின் சாயலுக்கும் இடமற்ற மாநிலம்
- எடுத்துரைக்க முடியாதவனின் எக்காளம் எடுபடாத நேரம்
- சொந்த அழகின் பூரிப்பில் இழந்த தன்வயம்
- மந்திரம் வளையும் மாயக்கட்டின் மறுபுறம்
- ஆத்மா ஒதுங்கி ஒளிந்து பெற்ற ஒருமை
- எல்லையின் கீறல் எடுபடும் மிடுக்கு
- நீலவானம் நிமிர்த்தியமைத்த ஆன்மா
- ஜோதிமயமான கருவூலம் கட்டுப்படுத்தும் எண்ணம்
- புற இலட்சியம் ஆழமற்ற நீச்சல் குளம்
- வேலியுள் வாழும் வாழ்வின் தளர்நடை தன்னையேற்று
- உடலின் செயல்தரும் சிறுதுளி மகிழ்வு
- மனமெனும் மூலைக்குரிய சக்தியென முத்திரையிட்டு
- வேகமற்ற பாதுகாப்பு வேண்டும்எனக் கொண்டு
- ஆடிஓடி தூங்கும் அவள் குறுகிய உலகம்
- பெரிய வேலையைப் பெற மறுத்து
- சூறாவளிச் சூழலான பரந்த ஆசைகள் மறந்து
- கிருஷ்ணன்போய் குசேலன் வந்ததை அறிய முடியாமல்
- ஒளிமயமான பாதையில் அவள் ஒழுங்கு நடை ஓய்ந்தது
- ஆத்மா அமைதியுறும் அழகின் உடல்
- இனிய ஒளிச்சோலையில் சிரிக்கும் பண்பு
- பொன்மயமான தூளியில் பொறுமையாக அசையும்
- பெருவெளியின் குரல் அவள் மந்திரமயன் மாடத்தை அடைந்தது
P.115 She had no wings for wide and dangerous flight
பரந்து விரியும் ஆபத்தை அனுபவிக்க அவளில்லை
- வானமோ பாதாளமோ ஆபத்தை விளைவிக்கவில்லை
- பெரிய கனவு இல்லை, பெரிய ராஜபாட்டை தோன்றவில்லை
- இழந்த பெரிய அனந்தத்தை மீண்டும்பெற விழையவில்லை
- சிறப்பான சித்திரம் சிறப்பான சட்டத்துள்ளிருக்கிறது
- அவள் மனம் இக்கற்பனை லோகங்கட்குக் கட்டுப்படவில்லை
- க்ஷணச் சுதந்திரம் ஆனந்தமாக நிம்மதி
- சிறிய அளவு ஆனந்தம் தற்செயலாய் வந்த ஒரு மணி நேரம்
- மேல்மனம் ஆத்மாவுக்குச் சலிப்பூட்டுகிறது
- ரூபத்தின் அழகைக் கடந்து நின்ற கடவுள்அம்சம்
- ஆழ்ந்த நிலைகளும், மறந்த சக்திகளும் அழைக்கின்றன
- பெரிய ஜோதியைக் கடந்தது அவன் பார்வை
- மலை ஏறிய ஆத்மா கடந்ததை மறந்தது
- பெருநாட்களின் பெருவாழ்வை ஏற்ற அரசவை
- செல்வம் நிறை அச்சொர்க்கத்தை விட்டகன்றான்
- பெருவெளியின் அகன்ற வீச்சைக் கடந்தது அவன் கதி
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மனம் பிரம்மத்தைத் தொட முடியும் என்கிறார் பகவான். மனமே பிரம்மத்தாலானது என்பதால் அதனால் முடியும். மனத்தில் பிரம்மமுள்ள இடத்தைத் தொட்டால் அதன் மூலம் பிரம்மத்தைத் தொடலாம். தானே பிரம்மம் என்பதால் மனம் பிரம்மத்தைத் தொடும். |
*****
- Login to post comments