Skip to Content

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - குழந்தையின் பெற்றோர்கள் பெரிய நேரம் வருவதை கவனமாகப் பார்க்க வேண்டும் அன்றோ?

அண்ணன் - விஷயம், இரகஸ்யம், கரு, முக்கியம் எல்லாம் உள்ள இடம் அதுதான்.

தம்பி - புதிய தொழில்product பொருள், முறை organisation எனப் புதியதாக வருவதை ஏற்பவர் அடுத்த தலைமுறையில் முதன்மையாக இருக்கிறார்கள்.

அண்ணன் - 1900இல் பாங்க் நமக்குப் புதியது. 1900இல் நெசவாலை புதியது. பாங்க் ஆரம்பித்த செட்டியார்கள், பஞ்சாலை ஆரம்பித்த நாயுடுமார்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள்.

தம்பி - சிறு அளவில் பார்த்தாலும் 1950இல் பஸ்ரூட், தியேட்டர், ஹோட்டல் பிரபலமாயின. இன்று எந்த ஊருக்குப் போனாலும் பெரும் பணக்காரர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களே.

அண்ணன் - இப்புதிய தொழில்கள் கூலிக்காரனை முதலாளி ஆக்கியது அதிகம்.

தம்பி - ஆம், அது என்ன விஷயம்?

அண்ணன் - புதியது வந்தால் பணக்காரர்கள் அதை நாடுகிறார்கள். அவர்கள் தொழிலைப் பாராட்டுவதைவிட தாங்கள் ஜபர்தஸ்தைப் பாராட்டுவார்கள். கூலிக்காரன் அடியிலிருந்து வருவதால் தொழிலின் நுணுக்கத்தை அறிவான். பஸ் டிரைவர், கிளீனர், கண்டக்டர்கள் பஸ் முதலாளியானது அதிகம்.

தம்பி - உலகப் பெரு முதலாளி Ford போர்ட், இன்று உலகிலேயே பெரிய பணக்காரர் Bill Gates பில் கேட்ஸ், இவர்கள், அவர்கள் காலத்து product பொருளை ஒட்டி உயர்ந்தவர்கள். Rockfeller ராக்பெல்லரும் அப்படித்தான்.

அண்ணன் - புதியதை ஏற்றுப் பாராட்டுபவர் உலகில் முதன்மையாக வரும் வாய்ப்பு அதிகம்.

தம்பி - இன்று அப்படி முதன்மையானது எது?

அண்ணன் - ஆயிரம் விஷயங்களைச் சொல்லலாம். Product பொருள் எனில் கம்ப்யூட்டரையும், Internet இன்டர் நெட்டையும் கூறலாம். விஷயம் எனில் கல்வியைக் கூறலாம். அரசியல் எனில் ஜனநாயகத்தைக் கூறலாம். எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது அன்னை ஜீவியம்.

தம்பி - இக்குழந்தை விஷயத்தில் நீங்கள் சொல்வதுபோல் முன்னோடி விஷயமான படிப்பும், அன்னையும் சேர்ந்து வருவதால் நிச்சயம் இது உலகப் பிரசித்தி பெறும்.

அண்ணன் - குழந்தை Internetஇல் படிப்பைத் தொடர்ந்தால் நல்லது.

தம்பி - அன்னையல்லவா முக்கியம்.

அண்ணன் - அன்னையில்லை எனில் ஒன்றும் இல்லை.

தம்பி - எனக்கு இக்குழந்தை உலகப் பிரசித்தி பெற வேண்டும் என்று அவா.

அண்ணன் - அவா இருந்தால் பலிக்காது.

தம்பி - பின்னே, என்ன இருக்க வேண்டும்?

அண்ணன் - ஆர்வமிருக்க வேண்டும்.

தம்பி - சரி, இக்குழந்தை விஷயத்தைப் பூர்த்தி செய்ய நான் என்ன செய்யலாம்?

அண்ணன் - நீ எதுவும் செய்யக்கூடாது. உனக்குரியது silent will மட்டும்தான். செய்ய வேண்டியது எல்லாம் பெற்றோர்தாம்.

தம்பி - பெற்றோர் இதைப் பூர்த்தி செய்ய நான் என்ன செய்ய முடியும்?

அண்ணன் - Silent gratitude மௌனமாக நன்றியைச் செலுத்தினால் போதும்.

தம்பி - செயல் என்ன செய்யலாம்?

அண்ணன் - உன்னுடைய காரியத்தில் அன்னையைக் கண்டால் நல்லது.

தம்பி - என் கம்பனியைப் பெரியதாக்க வேண்டுமா?

அண்ணன் - உன் கம்பனியை முதன்மையாகச் செய்தால் உன் நல்லெண்ணம் குழந்தையை முதன்மையாக்கும்.

தம்பி - பெற்றோரிடம் நான் எதுவுமே சொல்லக் கூடாதா?

அண்ணன் - பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லலாம். ஒரு முறைக்கு மேல் வலியுறுத்திச் சொல்லக் கூடாது.

தம்பி - நல்லெண்ணத்திற்கு அந்த சக்தியுண்டா?

அண்ணன் - நல்லெண்ணம் உயிரைக் காப்பாற்றும். கெட்ட எண்ணம் உயிரை எடுக்கும்.

தம்பி - ஓர் அன்பருக்கு 1 வருஷமாக உடல் நலம் குன்றியது. பிறகு உடல் நலம் தேறியது. அவருடைய ஆதரவில் வாழ்பவர் ஒருவருக்குக் கெட்ட எண்ணம் ஏற்பட்டது.  அன்பர் சூழலில் ஆபத்துத் தோன்றியது. சுமார் 3, 4 மாதம் சூழல் கறுத்திருந்தது. நிலைமை மோசமானபின் வழக்கமாக அவர் சோதனை செய்யும் முறைகளைக் கையாண்டார். இரண்டு அறிகுறிகள் சூழல் உணர்த்துவதை வலியுறுத்தி ஆமோதித்தன. அப்படியானால் அதிக நாள் தாங்காது என அன்பருக்குப்பட்டது. ஒரே நாளில் கெட்ட எண்ணம் உள்ளவரை விலக்கி நல்லெண்ணம் உள்ளவரின் ஆதரவை நாடினார். சூழல் மறுநாள் காலையில் பளிச்சென்று மாறியது. ஆபத்து விலகியது.

அண்ணன் - நம்முடைய குடும்பங்களில் உள்ள பெரிய பிரச்சினையில் உறவுக்காகக் கெட்ட எண்ணத்தை ஏற்கிறோம். அப்பிரச்சினை தீராது. பையனுக்குப் பெரிய உத்தியோகம் வந்தால் தகப்பனாருக்குப் பொறாமை. பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்தால் அக்காளுக்குப் பொறாமை, அம்மாவுக்கும் பிடிப்பதில்லை.

தம்பி - நல்லெண்ணம் உள்ளவர் கண்ணில் படுவதில்லை. அதனால் அப்பிரச்சினை எழாது!

அண்ணன் - நல்லெண்ணம் உள்ள அன்பர் என நாம் அறிய வேண்டுமானால், அவர் அன்னையிடம் வந்தபின் வானுயர வளர்ந்திருப்பார்.

தம்பி - கெட்ட எண்ணக்காரரும் அப்படி வளர்ந்துள்ளாரே? நல்ல எண்ணம் இல்லாதவரும் அளவுகடந்து வளர்ந்திருப்பதைக் காண்கிறோமே?

அண்ணன் - மனிதனைப் புரிந்து கொள்வது கடினம். இந்தப் பெற்றோர் சேவை உணர்வுள்ளவரானதால் அப்பிரச்சினை இங்கு எழாது.

அண்ணன் - அன்பரொருவர் சில ஆண்டுகளில் நல்லெண்ணத்தின் அன்புப் பரிசாகக் கொஞ்சம் கொஞ்சமாக 29 லட்சம் இனாம் பெற்றார். அன்னையைப் பற்றிப் பேசும்பொழுது இதைப் பெற்ற அன்பர் "என் வாழ்வில் எதுவுமே நடக்கவில்லையே'' என்றார். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விஷயம் தெரியாது. கொடுத்தவரும் கேட்டுக் கொண்டிருந்தார்! அதுதான் நல்லெண்ணம்!

தம்பி - ஓர் அன்பருடைய நல்லெண்ணம், மற்றொருவருக்கு உலகில் பிரபலம் கொடுத்ததையும் நாம் அறிவோம்.

அண்ணன் - பெற்றுக் கொண்டவருக்கு அன்பருடைய அக்கறையைப் பற்றித் தெரியாது.

தம்பி - நல்லெண்ணத்திற்கு சக்தியுண்டு என்பது புதியது. நாம் இன்று நம் காரியங்களை வெற்றிகரமாக முடிக்க எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று இக்குழந்தை மூலம் சொல்ல முடியுமா?

அண்ணன் - சொல்லலாம். சற்று நுணுக்கமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். செயல்படும்பொழுது மயிரிழை தவறாமல் நடக்க வேண்டும். நான் தத்துவத்தில் ஆரம்பித்து,நடைமுறைவரை சொல்கிறேன்.


 

தொடரும்.....

****


 

Comments

09.பிரார்த்தனை பலிக்க

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்
 
Para   9      -  Line  1   -   எர்ழ்க்           -    Ford
Para   9      -  Line  1   -   Gatesபில்      -    Gates பில்
Para 33      -  Line  5   -   வயுறுத்தி    -     வலியுறுத்தி
Para 42      - Please remove remove extra blank line from this paragraph
 
 
 
motnir



book | by Dr. Radut