Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - அன்னையை அறிந்த புதிதில் நடப்பவை பிறகு நடப்பதில்லை.ஏன் என்று தெரியுமா?

தம்பி - எனக்கு வெகு நாட்களாக அது புரியவில்லை.சமீபத்தில் ஒருவர் அதை எனக்கு எடுத்துச் சொன்னார்.

அண்ணன் - எனக்குப் புரியுமாறு சொல்ல முடியுமா?

தம்பி - Personality, organised personality இரண்டும் புரிந்தால் விளங்கும்.

அண்ணன் - பார்வைக்குக் கம்பீரமானவரை நல்ல personality என்கிறோம்.

தம்பி - அதை ஆங்கிலத்தில் person என்பார்கள். Personality என்பது character ஐ விடப் பெரியது.

அண்ணன் - நடத்தையைத்தானே சொல்கிறாய்?

தம்பி - சுபாவம் என நாம் கூறுவது character எனப்படும். சுபாவம் மாறாதது.திறமை, நாணயம், பொறுமை, நிதானம், (பழக்கம் நடத்தையுள்பட) சேர்ந்தது character.

அண்ணன் - Personality யும் character உம் வேறா?ஒன்றா?

தம்பி - தெரிந்ததைத் திறமையாகச் செய்வது character. தெரியாததைத் தெரிந்ததன் மூலம் சொந்தமாக, புதியதாகச் செய்யும் திறன் personality.ஒரு வியாபாரம் செய்பவன், அதையே வேறிடத்தில் பெரியதாகச் செய்வது character.வியாபாரத்திலிருந்து அரசியலுக்குப் போனால் எல்லாராலும் சமாளிக்க முடியாது.திறமை இரண்டிற்கும் ஒன்றன்றோ?வியாபாரத்தில் பெற்ற திறமையைக் கொண்டு அரசியலை நடத்த முடிவது personality. 

அண்ணன் - அன்னைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

தம்பி - அவர் எனக்குச் சொன்னதை நான் திரும்பச் சொல்கிறேன்.Character, personality என்பனவெல்லாம் நம் ஜீவனை ஒருவழியாக நிர்ணயித்து விடுகின்றன. அது organised personality ஆகும்.அது fixed மாறாது. அன்னை சக்தி அது வழியாகச் செயல்படாது, படமுடியாது.

அண்ணன் - அன்னை fresh விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறாரே?ஒரு line க்கு போய்விட்டால் அது மாற முடியாதல்லவா?எப்படி அங்கு அன்னை செயல்பட முடியும்?

தம்பி - நம் ஜீவனில் பெரும்பகுதி இதுபோல் இறுகிப் போகிறது. மீதியுள்ளது unorganised portion.அன்னையிடம் வந்தவுடன் அன்னை இதன் மூலமாகச் செயல் படுகிறார்கள்.பெரும் பலன் வருகிறது.

அண்ணன் - இந்த unorganised portion முடிந்தபின் நாமே முயன்று மாறினால் மட்டுமே அன்னை செயல்படமுடியும். நம்மால் மாற முடிவதில்லை.ஓஹோ, அதனால்தான் மனமாற்றம் வரும்பொழுது பலன் ஏராளமாக இருக்கிறதா?இதுதான் ரகஸ்யமா?

தம்பி - இது புரிந்தவுடன் அன்னை கேட்காமல் கொடுக்கிறார் என்று புரிந்தது.நம் unorganised ஜீவனுக்குக் கேட்கத் தெரியாது.ஆனால் ஆசைப்படத் தெரியும்.அதன் மூலம் அன்னை செயல்படுகிறார்.பழைய ஆசைகள் பூர்த்தியாகும் முறை இதுதான் என அவர் எனக்கு விளக்குகிறார்.

அண்ணன் - நம்மால் அதிகபட்சம் பெற முடிவதை இந்த organised portion நிர்ணயிக்கிறது என்பது இப்படித்தானா?

தம்பி - எந்த அளவுக்கு நாம் இயல்பாக நல்லவராக இருக்கிறோமோ அந்த அளவு அன்னை பலிக்கிறார். 

அதனால் கெட்டதிலிருந்து நல்லதிற்கு மாறுவதே முதல் வேலை. கெட்டதேயில்லை என்றும் பகவான் கூறுகிறாரே?

அண்ணன் - பாஸிட்டிவ், நெகட்டிவ், நல்லது, கெட்டது என்பதை வேண்டியது, வேண்டாதது என்று கொண்டு, தீமை விலக்கப்பட வேண்டும் என்கிறோம்.பகவான் தீமை விலக்கப்பட வேண்டியதில்லை, மாற்றப்பட வேண்டியது என்கிறார்.

தம்பி - விலக்கிவிட்டால், மாற்றவேண்டிய அவசியமில்லையே.

அண்ணன் - நாம் தீமையை வேண்டாதது என்கிறோம்.தீமை அவசியமான பகுதி, நன்மை பயன்படுத்தக்கூடிய பகுதி. தீமை உடனே பயன்படாது.ஆனால் மாற்றினால் பயன்படும் என்கிறார்.அவர் கூறுபவை,

  • நன்மை ஒரு பகுதி.
  • தீமையை விலக்கினால் மற்றொரு பகுதியை இழந்துவிடுகிறோம் என்பதன்று.தீமை நன்மையுடன் மறைவாகக் கலந்திருப்பதால் தீமையை விலக்கினால் நன்மையும் விலகும் என்கிறார்.
  • தீமை பணம் போன்றது; நன்மை பொருள்கள்போன்றன.
  • பணத்தை மாற்றினால் பயன்படும், நேரடியாகப் பயன்படாது.
  • தீமை நன்மையை விடப் பெரியது.

தம்பி - நன்மையும் தீமையும் எப்படிக் கலந்துள்ளன?

அண்ணன் - தீமை சமையலறைபோன்றது, நன்மை சமையல் போன்றது, சமையல் வேண்டும், சமையலறை வேண்டாம் என்று கூறமுடியாது.நன்மையால் வெளிப்படுத்த முடியாதவற்றைத் தீமை வெளிப்படுத்துகிறது என்கிறார்.வீட்டிலுள்ள பொருள்கள் 50 ஆயிரம், லட்சம் பெறும்.அப்பொருள்களால் 2 கோடியை வெளிப்படுத்த முடியாதல்லவா?அது பணமாக இருக்கிறது.நாம் அதை விலக்க முயல்கிறோம்.

தம்பி - தீமை பணம்போன்றது என்பது நம்பமுடியாத ஒன்று.

அண்ணன் - பகவான் சொற்களில் நம்பமுடியாதவை என்பதில் உயர்வுள்ளது.ஆமாம், அறியாமை அறிவைவிட உயர்ந்தது என்கிறார்.

தம்பி - உலகிலேயே முதலில் தீமையைப்பற்றிப் பேசியவரே பகவான்தானே.தீமை என்பது தீமையில்லை.உலகில் தீமையேயில்லை என்பதைக் கூறியவரே ஸ்ரீ அரவிந்தரல்லரோ?அதனுள் உள்ள நன்மையைப் பெறும் மார்க்கத்தையும் கூறுகிறாரே.

அண்ணன் - இவ்வளவு இருக்கும்பொழுது நமக்குத் தொந்தரவை எத்தனை பேர் கொண்டு வருகிறார்கள்?எப்படி முடிகிறது?

தம்பி - தவற்றைச் செய்தால் நஷ்டமும், கஷ்டமும் நமக்கு என்றவரை பிறர் செய்கிறார்கள்.கஷ்டம் அவருக்கே வந்தால் செய்யமாட்டார்கள்.பிறகு அவர்கட்கு பெரிய கஷ்டம் வரும் என்று தெரியாதவரை செய்வார்கள்.

அண்ணன் - அதுபோல் எனக்கு அந்தப் புரொபசர் செய்தார்.என் நஷ்டம் ஆயிரம், பத்தாயிரம்.பிறகு அவருக்கே அது வந்தபொழுது பல இலட்சம் நஷ்டமாயிற்று.இப்பொழுது என்ன செய்கிறார்?

தம்பி - தீமையேயில்லை என்றால் இதை எப்படிப் புரிந்து கொள்வது?

அண்ணன் - இருவகையாகப் புரியும்.ஒன்று இலாபத்தில் நஷ்டம் என அறியலாம்.அதாவது இப்படி ஏற்படும் நஷ்டமெல்லாம் பெரிய இலாபத்தைச் சிறிய இலாபமாக்குகிறது.அடுத்தது தீமை இவ்வழியாக நன்மையாக மாறுகிறது எனலாம். 

தம்பி - அறிவால் மாறினால் சிரமமிருக்காது.வாழ்வு நம்மை மாற்றும்பொழுது சிரமமேற்படுகிறது.அதுவும் நல்லது தானே.

அண்ணன் - தத்துவம் எதுவானாலும் நான் அன்னையிடம் வந்தபின் அறிந்தது.

  1. அதன் பின் பிரச்சினை வரவில்லை.
  2. நானே வலிய அறியாமையால் உற்பத்தி செய்ததே பிரச்சினை.
  3. எனக்குத் தொந்தரவு செய்த நண்பர்கள், உறவினர்கள், அவர்களுக்கு என் மீதுள்ள கெட்ட எண்ணத்தால் சிக்கலில் மாட்டியதை விலக்கப்போய் அவர்கள் எனக்கு ஏற்படுத்திய ஆபத்தைத்தவிர வேறே எதுவும் எனக்கு வரவில்லை.

தம்பி - ஆமாம், அதுதான் உண்மை.அது மட்டுமே உண்மை. கெட்ட எண்ணக்காரர்களை நண்பர்களாகப் பெற்றது மட்டுமே பிரச்சினை.

அண்ணன் - அவர்கள் தாமே விலகும்வரை காத்திருந்தேன்.நானே விலகக் கூடாது என்றிருந்ததால் வந்த வினைதான் நான் அனுபவித்தது, வேறெதுவுமில்லை.

தம்பி - மனிதர்கள்தாம் தொந்தரவுக்கு உற்பத்திஸ்தானம், விஷயமன்று.

அண்ணன் - அவர்கள் மீது நமக்குள்ள பற்று, நமக்குத் தொந்தரவு. யாராக இருந்தாலும், அவர்களை நாம் தொடர்ந்து பாராட்ட அவர்கள் அன்னையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து அன்னையை அதிக அளவில் ஏற்கவேண்டும்.நம்மைவிட அதிகமாக அன்னையை அவர்கள் ஏற்றால் நம்மால் அவர்கட்குத் தொந்தரவு. குறைவாக ஏற்றால் அவர்கட்கு நம்மிடம் தொடர்பு கொள்ளமுடியாது.அவர்களால் நமக்குத் தொந்தரவு. 

தம்பி - இது அன்னை விஷயத்தில் மட்டுமன்று.அந்தஸ்து, பண்பு, படிப்பு, உத்தியோகம், செல்வம் ஆகியவற்றிலும் இதுதானே சட்டம்.பழகப்பழக பாலும் புளிக்கும் என்றே உலகம் கூறுகிறதே!

அண்ணன் - பால் புளிக்கலாம், அன்னை புளிக்கமாட்டார்.Methods முறைகளை வலியுறுத்தினால் ஜீவன் போய்விடும். பிறகு புளிக்கும்.புளிப்பது உண்மை.புளிப்பது அன்னையல்ல.முறைகள் புளிக்கும்.ஜீவனிருந்தால் புளிக்காது.அன்னைக்கு என்றுமே ஜீவனுண்டு. ஜீவனில்லை எனில் அன்னையில்லை.

தம்பி -இந்த விஷயத்திலும் அன்னை விதிவிலக்கு. அன்னைக்கு என்றுமே விதியில்லை.விலக்கே அவர்கள் உரிமை.

- தொடரும்

************

இம்மாதத்தில் வரும் தரிசன நாள்

ஜனவரி 1 வருட சுபிட்ச நாள்

அடுத்த மாதத்தில் வரும் தரிசன நாள்

பிப்ரவரி 21 அன்னையின் ஜென்மதினம் 

செய்யாத பிரார்த்தனை

எந்த வியாதிக்கும் மருந்துண்டு என்ற நிலை ஏற்பட்ட பின் மருந்தும், வைத்தியமும் ஏழைக்கில்லை என்ற நிலை மாறவில்லை.சுமார் 15 அல்லது 20 ஆண்டுகட்கு முன் தினமும் 1ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை செய்பவருக்கு கை, கால் வீக்கம் அதிகமாயிற்று.வயிறு உப்பிவிட்டது. ஆஸ்பத்திரிக்குப் போனபொழுது, இதற்கு இங்கு வைத்தியமில்லை, சென்னைக்குப் போக வேண்டும் என்றார் டாக்டர்.

அந்த வீடு மாறி வேறு இரண்டொரு இடங்களில் வேலை செய்தபின், அன்பர் ஒருவர் வீட்டில் வேலை கிடைத்தது.வேலை செய்பவருக்கு வேலை தெரியும்.வேறெதுவும் தெரியாது.அனைவரும் அன்னையை பற்றிப் பேசுவது காதில் விழுவதுண்டு.மனதில் பட்டதில்லை.

காய்கறியறிய காலை மடக்கி உட்கார முடியாது, சிரமம்.இந்த வியாதிக்கு (oedema) எனப் பெயர்.கடைசி கட்டமாக வருவது.இது வந்தபின் பிழைப்பதில்லை.வியாதியஸ்தருக்கு அந்த விவரமும் தெரியாது.நாளா வட்டத்தில் வீக்கம், வயிறு உப்பல், வாடி உடல் தெம்பாக இருப்பது தெரிந்தது. ஏதோ நல்ல காலம் என மனம் அறிந்தது.தம் முகத்தில் ஒளி சேர்வதையும் அறிய முடியாதவர்.

ஒரு சமயம் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் இவரைப் பார்த்து, யார் என விசாரித்தனர்.கல்யாணமாகிவிட்டதா எனக் கேட்டனர்.எப்படி முகம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றனர், வயது 40க்கு மேல், பல குழந்தைகளுண்டு என்று பதில் கேட்டவருக்கு விளங்கவில்லை.

  • அன்னைக்குச் செய்யாத பிரார்த்தனை வியாதியைக் குணப்படுத்தி, முகத்தில் தெளிவு ஏற்படுத்தியது.
  • இது சூழலுக்குரிய சக்தி.
  • அன்னையிடமே அடைக்கலமானவர்கள் பலர் 78, 80 வயதில் சுறுசுறுப்பாக 55வயது மதிக்கும்படி இருப்பதுண்டு.

 எறும்பு, கொசு

ஒரே வீட்டில் இரு பகுதிகள்.ஒரு பகுதியில் அன்பரும், அடுத்ததில் அன்னையைப் பிடிக்காதவர்களும் இருக்கின்றனர்.அன்பர் அடுத்த பகுதிக்குப் போனார், உட்கார முடியவில்லை.ஒரே கொசு.நாற்காலியில் சற்று உட்கார்ந்தால் எறும்பு கடிக்கிறது.வீட்டுக்காரர், "இந்த ஊரே கொசுவுக்குப் பேர் போன ஊர்.முனிசிபாலிட்டியில் எதுவும் செய்யமாட்டார்கள்.இவ்வளவு கொசு கடித்தால், மலேரியாதான் வரும். யானைக்காலும் வரும்'' என்றார்.அன்பர் மேஜை மீது கை வைத்தார். ஒரே தூசி.ஒட்டடை அதிகமாக இல்லை என்றாலும் ஒட்டடை இருக்கிறது. T.V. மீது காப்பி டம்ளர் வைத்த வட்டமான அடையாளங்கள் பல.வீடு குப்பையும் கூளமுமாகவுமிருக்கிறது.வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று எப்படி அன்பர் அவரிடம் கூறுவது?அன்பர் வீடு வெகு சுத்தமாக இல்லாவிட்டாலும், பேரளவு சுத்தமாக இருக்கும். ஒட்டடை, தூசு இருக்காது.இருப்பது வீட்டில் 3 பேர்.மதர் சம்பந்தமான விஷயம் தவிர பேசவோ, நினைக்கவோ எதுவுமில்லை, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பலப் பல இடங்களில் உண்டு.சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கும். ஊதுவத்தி காலையில் மட்டும் கொளுத்துவார்கள்.மனம் சில்லரையாக, ஆர்ப்பாட்டமாக, ஆவேசமாக உள்ளவர் எவரும் இல்லை. பேரமைதியில்லை என்றாலும் கூப்பாடில்லை.அன்பர் தம் பகுதியில், கொசுவைப் பார்த்ததேயில்லை.வீடு சுத்தமாக இருந்தால் புறச்சூழல் சுத்தம்.மனம் நிதானமாக இருந்தால் அகத்தூய்மையுண்டு.அகமும் புறமும் தூய்மையானால், ஊரும், தெருவும் எப்படியிருந்தாலும், கொசுவும், எறும்பும் வருவதில்லை.

கொசுவும், எறும்பும் வீட்டிலில்லை.நம் மனநிலையிலுள்ளன.

Comments

para no. 39, line no.1

para no. 39, line no.1 - புüக்கலாம் - புளிக்கலாம், ஙங்ற்ட்ர்க்ள் - methods

      do.             do.   2 -வ-யுறுத்தினால் - வலியுறுத்தினால்

      do.             do.    2 - புüக்கும். புüப்பது - புளிக்கும்.புளிப்பது

      do.             do.     3   புüக்கும் - புளிக்கும் 

      do.             do.      4 - புüக்காது - புளிக்காது

 

பிரார்த்தனை பலிக்க

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

after para no.10 - extra space

para no.18, after line no.2 - extra space.

para no.23 , after line no.5 - extra space.

 para no.26 , line no.3 -ஸ்ரீ அரவிந்த ரல்லரோ? - ஸ்ரீ அரவிந்தரல்லரோ?

after para no.31 - extra space.

after para no.37 - extra space.

 



book | by Dr. Radut