Skip to Content

10. பிரார்த்தனையின் கட்டங்கள்

பிரார்த்தனையின் கட்டங்கள்

கர்மயோகி

 

பிரார்த்தனை பலிக்கும், பலன் தரும், கேட்ட பலனைத் தரும், அதிகமாகவும் தரும், கேட்காததையும் தரும். இவை ஆதாயமான பலன்கள். இது நாம் பொதுவாகப் பெறுவது. கல்கத்தாவில் புது காலனியில் 230 வீடுகள் உள்ள இடத்தில் புதியதாகக் குடி வந்தவர், அன்று மாலை, அந்த டவுன்ஷிப்பில் எந்த வீட்டிலும் தண்ணீர் வரவில்லை, அவர்கள் வீட்டில் மட்டும் எப்படி வந்தது என ஆச்சரியமாக அறிந்தார். அவர் பிரார்த்தனை செய்யாமல் பெற்ற பலனிது. இதுபோன்ற அனுபவம் ஏற்படும்பொழுது நாம் சந்தோஷப்படுகிறோம். அன்னையை அதிகமாகப் புரிந்து ஏற்றுக் கொள்கிறோம். இதற்குமேல் நாம் செய்யக் கூடியவை பல உண்டு. அவை,

1. பிரார்த்தனையை
சமர்ப்பணமாக மாற்றுவது,
1. பிரார்த்தனை பலித்தால் பலன் வரும். சமர்ப்பணமானால், அதுவே
பிரார்த்தனையின்றிப் பலிக்கும் திறன் எழும், மௌனம் எழும்.
2.பிரார்த்தனை செய்யும் மனநிலையை சமர்ப்பணம் செய்வது,
2. இது கீதை கூறுவது. பலித்தால் மோட்சம் கிட்டும். மோட்சத்தை ஏற்காவிட்டால், மோட்சத்தைப் பெறும் தகுதி திருவுருமாறும். மோட்சம் பலித்த மௌனம் வரும்.
3. அம்மனநிலையின் அடிப்படையைச்
சமர்ப்பணம் செய்வது,
3. இது பூரண யோகத்தின் ஞான யோகப் பகுதி
சித்திப்பது, பகவான் 1914இல் அன்னைக்களித்த மௌனம் பெறும் பெரிய ஆன்மீக நிலை.
4. அவ்வடிப்படையைத் திருவுருமாற்றப்
பிரார்த்திப்பது,
4. பெறும் ஆன்மீகத் திறன் தரும் ஆன்மீக சித்தியாகும், அன்னை பெற்றார், பகவான் கொடுத்தார்.
5. அப்பிரார்த்தனையைச் சமர்ப்பணம் செய்வது,
5. சமர்ப்பணம் மனத்தில் அபிப்பிராயமாகவும், நெஞ்சில் நோக்கமாகவுமுள்ளது. இதைச் செய்தால் சமர்ப்பணம் நெஞ்சின் நிரந்தர நோக்கமாகும். (attitude)
6. பிரார்த்தனை, சமர்ப்பணம், திருவுருமாற்றம் ஆகியவை பலித்து ஆன்மீகப் பலன் தரும் நேரம் அவற்றைச் செய்ய மறுப்பது,
6. இது சமர்ப்பணத்தை சரணாகதியாக்கி, ஜீவனின் நோக்கமாகச் (motive) செய்யும்.
7. மறுக்க முடியும் கட்டத்தில் “அன்னையின் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பமல்ல” என்று கூறுவது,
7. அன்னைக்கு அந்நிலையில் கருவியாகும்.
8. அதையும் சொல்ல மறுத்து மௌனம் சந்திப்பது,
8. இந்நிலை மௌனத்தின் பின்னுள்ள மௌனம் (Silence beyond Silence) தரும்.
9. அன்னை தானாகத் தருவதை ஏற்கும் மனநிலையை நாடி ஏற்பது,
9. பெற்ற சித்தி பிரபஞ்ச சித்தியாகும்.
10. ஒரு விஷயத்தில் பலிக்கும் பிரார்த்தனை, சமர்ப்பணம் மனத்தின் முழுமைக்குப் பலிக்க விரும்புவது,
10. பிரபஞ்ச சித்தி நிலையாகும்.
11. அதுவே மனத்திற்கும், நெஞ்சிற்கும் பலிப்பது,
11, 12. பூரண யோகம் அடுத்தடுத்த கட்டங்களில் பலிப்பது.
12. அது ஜீவனுடைய முழுமையில் பலிப்பது,
நிரந்தரமாவது,
 
13. காலத்தில் பலிப்பது காலத்தைக் கடந்து பலிக்க வேண்டுவது,
13. கிருஷ்ண பரமாத்மா நிலையில் அந்த சித்தி
பூரண யோக சித்தியாவது.
14. அதுவே மூன்றாம் நிலைக் காலத்தில் பலிக்க ஜீவன் ஆர்வம் கொள்வது,
14. இது சத்திய ஜீவிய சித்தியாவது.
15. பக்தனுக்குப் பலிப்பது, புருஷனுக்குப் பலிக்க விரும்புவது,
15. ஒருவர் யோகம் அடுத்தவருக்குப் பலன் தரும் பிரபஞ்ச நிலை.
16. அதுவே ஈஸ்வரனில் சித்திப்பது,
16. வாழ்வு அற்புதமாகும்.

இக்கட்டங்களையெட்ட நாம் உள்ளே போக வேண்டும். உள்ளே போவது பலிக்கும் நிலை மௌனத்தால் மனம் பெறும் அமைதியால், தானே தியானம் வரும் தகுதியால், பெரு ஆன்மீக நிலை சிதறாமல் நீடிக்கும் நேரத்தால், எரிச்சல் எழாததால், எரிச்சல் வரவேண்டிய நேரம் இனிமை எழுவதால், கடந்த கால துரோகங்களின் உறுத்தல் குறைந்து மறைவதால், மன்னிக்கக் கூடிய குற்றங்கள் அளவிலும் தரத்திலும் பெருகுவதால், இடைவிடாத அன்னை நினைவு தானே எழுந்து, ஆழ்ந்து, இனித்து, நீடிப்பதால் தெரியும்.

இவ்வளவு முறைகளுள்ளபொழுது, ஏன் எவரும் எதுவும் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால், அது எவராலும் முடியாததோ என்று தோன்றுகிறது.

இரண்டுமில்லை, இதுவே மனித சுபாவம்

என்பதே பதில். மனிதன் தன்னால் முடிந்ததைச் செய்ய மாட்டான். குறைந்த பட்சம் போதும் என்ற அளவிலேயே செய்வான் என்பதால் பகவான்

இடையில் முயற்சியைக் கைவிடாதே  

என்றார். நம் அனுபவத்தில் கண்டதே முடிவு என்று மனம் நினைக்கும்; அறிவு அதைக் கடந்து சந்திக்கும் எனத் தோன்றாது. பிரார்த்தனை பலித்தபின் செய்வதற்கு என்ன உண்டு என்பது பொதுவான கொள்கை. இந்த 16 கட்டங்களும் பிரார்த்தனை பலித்த பிறகே செய்யக் கூடியவை. எடுத்துச் சொல்லும்பொழுது, இப்படியெல்லாம் முடியும் என நான் கருதவில்லை என்பார்கள். மற்றவர்கள், தெரியாததில்லை, செய்வதில்லை என்பார்கள். வேறு சிலர், செய்து பலனைக் கண்டபின், இப்படிப் பலிக்கும் எனக் கருதியதில்லை என்பர். புதிய முறையை ஏற்றபின் பழைய பாணியில் செயல்பட்டால், பழைய பலனே வரும் என்று அறிவதில்லை. புதிய முறை என்றவுடன் பலன் பலமடங்கு எதிர்பார்ப்பார்கள். இந்த 16 கட்டங்களும் அடுத்தடுத்த கட்டங்களில்லை, அடுத்தடுத்த லோகங்கள். சம்பளம் பெறுபவன் சுயதொழில் ஆரம்பித்தால் பலன் அதிகம் எனக் கூற முடியாது. ஒன்றை மற்றதுடன் ஒப்பிட முடியாது. அதிகாரி அரசியல்வாதியாவது புதிய பாதை திறப்பது. பூஜை, நிஷ்டை ஆத்மாவுக்குச் செய்வது. அவை வாழ்வில் பலிப்பது அவசியம் என்று உணருவதில்லை. ஒன்று படிக்காதவன் வாழ்வு, அடுத்தது படிப்பை முழுவதும் முடித்தவன் வாழ்வு. நம்மூரில் பட்டம் பெறுவதும், அதே பட்டத்தை அமெரிக்காவில் பெறுவதற்கும் உள்ள வித்தியாசம் சில இடங்களில் உண்டு. ஒரு கட்டத்தில் யோகம் உடல் மாற வேண்டும் எனக் கூறுகிறது. அதுபோல் இம்முறைகளில் சில கட்டங்களில் கடைசிக் கட்ட ஊழியனுக்குத் தலைமை அதிகாரியின் படிப்பும், அனுபவமும் தேவைப்படுவது போலிருக்கும். கட்டங்களைக் கடக்கும்பொழுது, மாட்டு வண்டியிலிருந்து ரயிலுக்கும், அங்கிருந்து விமானத்திற்கும் மாறும் நிலை உள்ளது என அறிவோம்.

எலிசபெத், விக்காமை மணக்க முயன்று தவறிவிட்டாள். முடிவில் டார்சியை மணந்தாள். விக்காம் வருமானம் £300. அவன் நிலையில்லாதவன், தறுதலை, சூதாடி, கடன்காரன். டார்சி உயர்ந்த குணமுள்ளவன். £10,000 வருமானமுள்ளவன். ஒரு முறைக்கும், அடுத்த முறைக்கும் அந்த அளவு வேறுபாடுண்டு. உள்ளூர் ஹோட்டலுக்கும், 5 நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள வித்தியாசம் மற்ற இடங்களில் உண்டு. புதுக்கோட்டை மகாராஜாவுக்கும், மைசூர் மகாராஜாவுக்கும் உள்ள வித்தியாசமுள்ள நிலைகள் பல. பங்களாதேஷ் ஐ. நா. வில் உறுப்பினர். பிரான்சும் உறுப்பினர். ஆனால் வேற்றுமை அதிகம். ஜப்பான் பெரிய நாடு. அதன் பணம் யென் (Yen) எனப்படும். அமெரிக்காவின் பணம் டாலர். ஒரு டாலருக்கு 110 Yen சமம். இரண்டும் பணமாகும். பஞ்சந்யத்து தலைவருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ள வேறுபாடு மற்ற இடங்களிலுண்டு.

  • நாம் அறியாதவை ஏராளம்.
  • நாம் அறிந்து செய்யாதவை ஏராளம்.
  • இக்கட்டங்கள் என்ன என்பதைச் செய்து பலன் பெறும் வரை அறிய முடியாது.
  • செய்து, பலன் பெற்றுப் பாராட்டிய பின்னும் தொடர்ந்து செய்யத் தோன்றாது.
  • அன்னையின் அருளை முழுமையாக அறிவது இயலாது.

********

 



book | by Dr. Radut