05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
54. பூர்வ ஜென்ம ஞானம்
- ஞாபகம் பிறப்புக்கு முன் இல்லை.
- இறப்புடன் ஞாபகம் முடிகிறது.
- மனித வாழ்வு பிறப்பில் ஆரம்பித்து, இறப்பில் முடிகிறது.
- நினைவு இவ்வெல்லைக்குள் செயல்படும்.
- மனத்தின் நினைவுக்கு இவை எல்லைகள்.
- அடிமனம் பிரபஞ்சத்தின் அளவு பரந்தது.
- அதற்கு நினைவு என ஒன்றில்லை.
- அடிமனம் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் காண வல்லது.
- அதனால் அதற்கு நினைவு என ஒன்று தனியாகத் தேவையில்லை.
- சைத்திய புருஷன் அடிமனத்தில் உறைகிறான்.
- பூரணயோகம் சமர்ப்பணத்தால் மேல்மனத்தினின்று அடிமனம் செல்ல வல்லது.
- அடிமனம் சென்றடைந்தவுடன் எல்லா முற்பிறப்புகளும், எல்லா வருங்காலப் பிறப்புகளும் தெரியும்.
- மேல்மனத்திற்கும், அடிமனத்திற்கும் இடையே உள்மனம் உண்டு.
- உள்மனத்தில் சாட்சி புருஷன் உறைகிறான்.
- இது ஆன்மீக லோகமல்ல, சூட்சும லோகம்.
- சூட்சும லோகம் என்பதால், பூர்வ ஜென்மத்தை அறியும் திறனுண்டு.
- கர்ணனுக்குத் தாயார் யார் எனத் தெரிந்துகொள்ளும் ஆசை அவனை அரித்தெடுக்கிறது.
- வெகுநாள் கழித்து அதைக் கிருஷ்ணன் மூலம் தெரிந்து கொள்கிறான்.
- அதன்பின் துரோணரைப் பார்க்க ஒரு சமயம் போன பொழுது, "வா, குந்தி புத்ரா'' என்றார்.
- அவருக்குத் தன் பிறப்புத் தெரியும் என்பது கர்ணனுக்கு ஆச்சரியம்.
- துரோணர் ரிஷியில்லை, ஆச்சாரியன்.
- அவருக்குச் சூட்சுமம் தெரியும்.
- பிறப்பில் தவறுதலாகப் போன ஜென்ம நினைவு சிறிது வரலாம்.
- அவர்கட்கு இப்பிழையால் போன ஜென்ம விவரங்கள் சில தெரியும்.
- தவம் செய்பவர்க்கு இத்திறமை தவறாது எழும்.
- அன்னைக்கு இத்திறமையுண்டு.
- போன ஜென்மத்தில் சில சாதகர்களுடைய பிறப்பை அவர் ஒரு சமயம் கூறியுள்ளார்.
- அந்த நாளில் ஆசிரமத்திற்கு அன்னை தரிசனத்திற்காக வருபவர்களை அன்னை முதல் நாள் பால்கனி தரிசனத்திற்கு வரச் சொல்லுவார்.
- அப்படி ஒரு சாதகர் அவர் உறவினரை அழைத்து வந்தார்.
- பால்கனியில் அன்னை அவரைக் கண்டார்.
- பிறகு அந்தச் சாதகரிடம், "உன் நண்பரைக் கண்டேன், உயரமாக தாடியுடனிருந்தார்'' என்றார்.
- சாதகர், "என் நண்பர் குள்ளமானவர், தாடியில்லை'' என்றார்.
- மறுநாளும் பால்கனிக்கு அழைத்து வரச் சொன்னார்.
- அன்றும் அவரை உயரமாக, தாடியுடன் கண்டார்.
- அந்தச் சாதகரிடம், "நான் கண்டது உன் நண்பரின் பூர்வ ஜென்ம உருவம்'' என்றார்.
- யோகம் முதிர்ந்து பூர்வ ஜென்மம் ஒருவருக்குத் தெரியுமானால், அது அவருக்குப் பெரிய சித்தி.
- அன்பருக்குத் தியானத்தில் பூர்வ ஜென்மம் தட்டுப்பட்டால், அவருக்கு யோகம் பலிக்கும் எனப் பொருள்.
- நமக்கு நண்பர் உறவினர்களில் போன ஜென்ம தொடர்புள்ளவரிருப்பதுண்டு.
- ஜாதகம் அதைக் கூறும்.
- சில அன்பர்கள் பூர்வ ஜென்மத்தை அறியும் ஆவலுடையவர்கள்.
- அவர்கள் பிரார்த்தனையால் அதைப் பெறுவதுண்டு.
தொடரும்.....
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
|
******
- Login to post comments