Skip to Content

11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் என்று?
    • நினைந்தவர் வாழ்வு உயரத் தவறாது.
  2. இட்ட எழுத்திற்கு மேலேற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
    • கேட்டதைவிட அதிகமாகத் தரும் அன்னை.
  3. புயலுக்குப் பின் அமைதி.
    • புயலையும் அடக்கும் அமைதி.
  4. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
    • ஆத்திரத்தையும் அருளாக மாற்றும் அழைப்பு.
  5. அத்தனையும் செய்தாள், உப்பிட மறந்தாள்.
    • கடமைகளை எல்லாம் செய்து,
      அன்னையை அழைக்க மறந்தான்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆசை, பிராணனின் சக்தி. மனோதிடத்தால் ஆசையை வெல்லலாம். ஆசைக்குரிய வல்லமையுடைய திறனை உடல் பெற்றிருந்தால், உடலும் ஆசையை வெல்லும்.
 
மனம் ஆசையை வெல்வதுபோல் உடலும் வெல்லும்.



book | by Dr. Radut