Skip to Content

05.சிறு குறிப்புகள்

சிறு குறிப்புகள்”

காரியம் கூடிவருவது’                    (Decision -making)

     ஒருவர் செய்யும் காரியங்களெல்லாம் கூடிவந்தால் அவர் வெகுநாள் நம்முடனிருக்கமாட்டார். வாழ்வின் உச்சியை எட்டிவிடுவார் என அறிகிறோம். இதன் இரகஸ்யத்தை எட்ட அனைவரும் முயல்கிறோம். முடிவதில்லை. இதனுள் உள்ளது ஒரு இரகஸ்யம்.

அந்த இரகஸ்யம் நாம் அனைவரும் அறிந்தது.

       சொல்வதற்கு எளிமையானது. அதை நாம் அன்றாட வாழ்வில் தவறாது பின்பற்றுகிறோம். அதன் அம்சங்கள் இரண்டு.

1. வேலைக்குரிய பொருள்கள் ஒன்றும் குறையாமலிருக்க வேண்டும்.

2. வேலையைச் செய்ய மனத்தில் எந்தக் குறைவும் இருக்கக் கூடாது. மனம் நிறைவாக இருக்க வேண்டும்.

       இந்த இரு நிபந்தனைகளும் பூர்த்தியானால் காரியம் தவறாது கூடிவரும் என்பது நமது அனுபவம். இந்த உண்மை அனைவரும் அறிந்தது, எவரும் மறுக்க முன்வர மாட்டார்கள். விளக்கம் தேவைப்படாது. இது உண்மையானால் ஏன் நமக்கெல்லாம் ஏராளமான காரியங்கள் கூடிவருவதில்லை? அதற்குரிய ஒரே காரணம்,

இந்த எளிய சட்டத்தைப் புறக்கணித்து வேலை செய்வதால் காரியம் கூடிவருவதில்லை.

       காரியம் கூடிவரவில்லை என்றவுடன் மனிதன் செய்யும் முதற் காரியம் ஜோஸ்யம் பார்ப்பது, அடுத்தாற்போல் சுவாமிக்குப் பிரார்த்தனை செய்வது, விரதமிருப்பது, நோன்பு கொண்டாடுவது, குலதெய்வத்திற்குக் காணிக்கை செலுத்துவது, சீட்டு கட்டுவது, சிபார்சு தேடுவது, லஞ்சம் கொடுக்க முன்வருவது, பிறரைக் குறை கூறுவது, தலைவிதியை நொந்துகொள்வது, ஜெயித்தவனைக் கண்டு பொறாமைப்படுவது, பிறரழிய முனைவது, வம்பு பேசி மனதைத் திருப்தி செய்வது போன்ற சுபாவத்தின் வெளிப்பாடுகள் அனைத்தும் வரிசையாய் எழும். சிறிது யோசனை செய்தால் காரியங்கள் எப்படி நடக்கின்றன என்றால்,

1. சர்க்கார் சட்டப்படியும்,

2. சமூக நியாயப்படியும்,

3. வாழ்க்கையின் வலுவைப் பொருத்தும்,

4. மனச்சாட்சியின் தர்மப்படியும் காரியங்கள் நடக்கின்றன.

       இவை அடுத்த நிலைகள். மனிதன் ஒவ்வொரு கட்டமாக முன்னேறுகிறான். முன்னே போனவன் பின்னே வரமுயன்றால் முடியாது, நஷ்டம் வரும். இவற்றைக் கடந்தது அன்னையின் அருள். எந்த நிலையில் நாமிருந்தாலும் அந்த நிலையில் முதலில் சொன்ன இரு நிபந்தனைகள் - தேவை, மனநிறைவு - பூர்த்தி செய்யப்பட்டால், காரியம் தவறாது கூடிவரும். நமக்குத் தெரிந்து கூடிவந்த காரியங்களில் இந்த நிபந்தனைகள் பூர்த்தியானதும், பூர்த்தியாகாத இடங்களில் கூடிவரவில்லை எனவும் தெளிவாகக் காணலாம். இனி நாம் மேற்கொள்ள இருக்கும் முக்கியக் காரியம் கூடிவர வேண்டுமானால்,

இவ்விரு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

நம் அன்றாட வாழ்வில் இதுபோல் ஏராளமான காரியங்கள் நாம் செய்வதையும், இனி செய்ய வேண்டிய காரியத்திற்கும் அதுவே சட்டம் என்பதையும் நாம் ஏற்பதில்லை. நமக்கு ஒரு முக்கியப் பொறுப்பு வந்தவுடன், நாம் நம் மனப்போக்குப்படி - கோயில் சீட்டு, ஜோஸ்யம் பார்ப்பது போன்றவை - நடப்பதற்குப் பதிலாக மேலே சொன்ன இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முனைவது சரி.

       புது ஊருக்கு வந்திருக்கிறோம், ரேஷன் கார்டு வேண்டும், நம்மூரிலிருந்து phone இவ்வூருக்கு மாற்றவேண்டும் என்பவை எளிய வேலைகள். நான் மனை வாங்கியுள்ளேன். வீடு கட்ட வேண்டும், என் மகன் 8 வருஷமாக இன்ஜினியராக இருக்கிறான், சொந்தமாகத் தொழிலாரம்பிக்க வேண்டும் என்பவை பெரிய வேலைகள். இவற்றுள் பலர் அனுபவம் நம்முன் உள்ளன.

1. பணம் கொடுத்து கார்டு பெற்றவர் ஒருவர்.

2. சிபார்சால் கார்டு பெற்றவர் மற்றவர்.

3. பணம் கொடுத்தும் கிடைக்காதவர், சிபார்சிருந்தும் சிரமப்படுபவர் எனச் சிலர்.

4. எதுவுமில்லாமல் நேரே போய் பல நடை நடந்து கார்டு, போன் பெற்றவர்கள் பிறர். நடக்காமலும் பெற்றவர் சிலர்.

5. வீடு கட்டப் படாதபாடுபட்டவர், எளிதாகக் கட்டியவர், அதிகச் செலவு செய்து சீக்கிரம் முடித்து, கடைசி வேலைக்கு அலைந்தவர், இனி வீடு வாங்கலாம், கட்ட முயலக் கூடாது என முடிவு செய்தவர் எனப் பல அனுபவங்கள்

6. தொழிலாரம்பித்து சீக்கிரம் கூடி வந்து கோடீஸ்வரனானவர்.

7. திவாலானவர்.

8. ‘தொழில் என ஆரம்பிப்பது பைத்தியக்காரத்தனம்’ என முடிவு செய்தவர்.

9. ஊழல் அதிகாரிகளிடமும், தொழிலாளிகளிடமும் போராடி B.P., sugar வந்ததுதான் மிச்சம் என்பவர்.

10. நிறைய சம்பாதித்து நிறைய பிரச்சினைகளுடன் வாழ்பவர். உலகத்து அனுபவங்கள் பல. ரேஷன் கார்டு, phone, வீடு கட்டுவது, தொழிலாரம்பிப்பது ஆகியவற்றிற்குத் தேவையான பணம், ரிக்கார்ட், நிபந்தனை, முயற்சி என உண்டு. இவற்றைக் குறைவற ஒருவர் பூர்த்தி செய்திருந்தால் அவர் மனத்தில் பல வகையான மாற்று உணர்ச்சிகளிருக்க வாய்ப்புண்டு.

  • பணம் கொடுக்காமல் கார்டு வாராது.

  • Phone நமக்கு வந்தால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து இனாமாகப் பேசுவார்.

  • வீடு என் பெயரில் இருக்க வேண்டும், பிள்ளைகள் சம்மதிக்க மாட்டார்கள்.

  • காண்ட்ராக்டர் திருடுவதை நான் என்ன செய்ய முடியும்?

  • பணம் கொடுத்தால் காண்ட்ராக்டர் கட்டுகிறான், இதில் என்ன அதிசயமிருக்கிறது?

  • சர்க்காருக்கு ரேஷன் கார்டு தர வேண்டிய கடமை உண்டன்றோ?

           நடைமுறையை மனம் ஏற்பதும், பிணக்கான எண்ணம் தோன்றுவதும், நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை மனம் நம்புவதும் நம்மிடம் காணப்படுபவை. மனம் தவறான, குறையான எண்ணங்களை ஏற்கக் கூடாது, நம்பக்கூடாது என்பது நிபந்தனை. வேலையிருக்கிறது. செய்ய வேண்டும். முறையோடு செய்ய வேண்டும். இல்லாததை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்று மனம் உறுதியாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால் இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகின்றன. காரியம் முயற்சிக்குக் கூடிவரும்.

நம் அனுபவங்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.

1.உள்ளும் புறமும் சரியாக இருந்து காரியம் கூடிவருவது.

2. புறம் சரியாக இருந்து, மனம் குறையாக இருப்பதால் ஆரம்பிக்கச் சிரமப்பட்டு ஆரம்பித்து, பிறகு வேலை சரியாக முடிவது.

3. அகமோ, புறமோ சரியாக இல்லாததால் ஆரம்பிக்கவே முடியாத நிலை.

4. மனம் நிறைவாக இருந்து புறம் சரியாக இல்லாததால், எளிதாக ஆரம்பித்துக் குறையாக நிற்பது.

நிறைவை + எனவும், குறைவை - என்றும் எழுதினால்,

கோட்டிற்கு மேல்புறம், அகம் எனவும், கோட்டிற்கு வலப்புறம்,

புறம் எனவும் கொண்டால், மேற்கூறிய நான்கு மனநிலைகளை

இப்படத்தால் விவரிக்கலாம்.

படம் I

 

2                                                           1

    - +                                                     ++

------------------------------------------------------------

3                                                         4

- -                                                    + -

_______________________________________________________________________________________________________

நம் காரியம் . 1கட்டத்திலிருந்தால் தடையில்லாமல் கூடிவரும். முறையாக ஆரம்பித்து முறையாக நடந்து, எதிர்பார்த்த பலன் தரும்.

இந்த விதிக்கு விலக்கில்லை.

இது விலக்கில்லாத விதி.

2,3,4 கட்டங்களில் நம் திட்டமிருந்தால், அக்குறையை நீக்கி நாம் முதற்கட்டத்திற்கு வரமுடியுமானால், காரியம் பூர்த்தியாகும்.

       கம்ப்யூட்டர் poetry செய்யுள் எழுதுகிறது, spellings திருத்துகிறது, ஆங்கில இலக்கணம் பயின்று, கட்டுரையைத் திருத்துகிறது, மெஷின்களை ஓட்டுகிறது, விமானத்தை ஓட்டுகிறது. இவற்றிற்கெல்லாம் தேவையான திறன் பெரியது. இந்த decision-making process4 கட்டங்களிலும் விவரிக்கலாம். கடந்த காலத்தில் நடந்து வெற்றி பெற்றது, 60% முடிந்தது போன்ற திட்டங்களை இந்த software programmeஇல் கணக்குப் பார்த்தால் துல்யமாகச் சரியாக இருக்கும். இதுபோன்ற software programme உலகுக்கு உதவும்.

       அன்னை அன்பர்கட்குப் பொதுவான சூழல் எந்தக் குறையையும் ஓரளவு நிறைவு செய்யக் கூடியது. அவர்கட்குக் காரியம் கூடிவருவது இயல்பு. இந்த programme அவர்கட்குச் செய்யும் காரியத்தைப் பலமடங்கு சிறப்புடன் உயர்த்தப் பயன்படும். .1ஆம் கட்டத்தில் காரியம் கூடிவரும். புதியதாக கடை வியாபாரம் ஆரம்பித்தவர் இந்தச் சட்டப்படி வெற்றியடைந்து மாதம் 20,000ரூ. சம்பாதித்தால், அவரே அன்பரானால் 40,000ரூபாயாக வரும். மேலும் முதற்கட்டத்தையே அடிப்படையான முடிவாகக் கொண்டு அதையே 4 பாகமாகப் பிரித்தால், 40,000 ரூபாயை 4 லட்சமாக உயர்த்தப் பயன்படும்.

  படம் II

 _____________________________________________________________________________________________________

2                                                                                                                                     1

                                                                                          - +                                    + +

                                                                                         2,00,000     ----------           4,00,000

                                                                                             - -                                   + -

                                                                                        ரூ40,000                          2,00,000

-----------------------------------------------------------------------------------------------------------------------

3                                                                                                                                     4

____________________________________________________________________________________________________

       படம் I இல் வெற்றி, தோல்வி என்பவற்றை 4 நிலைகளாகப் பிரித்தோம். IIஆம் படத்தில் ரூ. 20,000 இலாபம் அடிப்படையில் உண்டு. அதுவே அன்பர்க்கு ரூ. 40,000 என உண்டு. இந்த ரூ.40,000 கிடைப்பதை IIஆம் படத்தில் முழுத் தோல்வியான 3ம் நிலைக்கும், 4 லட்சம் வருமானத்தை 1ஆம் நிலைக்குமாக வைத்து Decision Making முடிவை எடுக்கலாம்.

       IIஆம் படத்தில் 1ஆம் கட்டத்தை மேலும் 4 பாகங்களாகப் பிரித்து தொடர்ந்த முன்னேற்றம் பெறலாம். முன்னேற்றத்திற்கு முடிவில்லை, தோல்விக்கு வழியில்லை.

       நாம் உலகம் அன்னையை ஏற்கவில்லை என வருத்தப் படுகிறோம். எப்படி அன்னையை உலகுக்கு அளிக்க முடியும் என இரவு பகலாக விரும்பும் அன்பர்கள் ஏராளம். ஒருவர் தாமே உலகுக்கு அன்னையை அளிக்க விரும்பினால்,

  • அவர் அன்னையை மேலும் மேலும் உண்மையாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

  • அவர் ஏற்றுக் கொண்டது உண்மையானால் கீழ்க்கண்டவை நடக்கும்.

  • அனைவரும் அவரை அழிக்க முயல்வர்.

  • மயிரிழை அலட்சியமாக இருந்தால் உலகம் அவரை அழித்து விடும்.

  • அப்படி அழிவிலிருந்து தப்பினால் அவர் வாழ்வில் உள்ளும் புறமும் அன்னை பொங்கி வழிவார்.

  • புறத்தில் செய்வது அவர் வாழ்வில் பலிக்கும்.

  • அகத்தில் சித்தித்தது, அகிலத்தில் பலிக்கும்.

Decision Making முடிவு, தீர்மானம் என்பது வாழ்வில் நுட்பமான பகுதி. அம்மையத்தில் அன்னையை ஏற்றால், மேற்கண்ட முறை அதிகமாகப் பலிக்கும்.

 

  • எந்த ஒரு காரியமும், சிறியதோ பெரியதோ தவறாமல் கூடிவருவது அன்னையை ஏற்றதற்கு அடையாளம்.

  • இந்த programmeமைப் பயன்படுத்தினால் அதே பலன் உண்டு.

  • அன்னை அன்பர் இதைப் பயன்படுத்தினால் அதிகப் பலன் உண்டு.

நான்கு கட்டங்களில் முதற் கட்டத்தை மேலும் மேலும் பிரித்து உயர்ந்த பலனை அடைவதை அன்னை முறைப்படி உள்ளே செய்யலாம். அன்னை முறை என்பது சத்தியம் பேசுவது. வாயால் உண்மை பேசுவது முதற்கட்டம். மனதால் பொய்யை மறுப்பது அடுத்த உயர்ந்த கட்டம். கடந்த காலப் பொய்யை சமர்ப்பணத்தால் மெய்யாக மாற்றுவது அதனினும் உயர்ந்த மூன்றாம் கட்டம். அன்னையின் மூன்றாம் கட்டம் programmeஇல் முப்பதாம் கட்டத்திற்குச் சமம்.

 

****

 

 

 

 

_________________________________________________________________________________________



book | by Dr. Radut