Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப்பற்றி ஸ்ரீ அரவிந்தர் எதுவுமே எழுதவில்லை. அவருக்கு சில குறிப்பான எண்ணங்களுண்டு. ஆனால் அவற்றை வெளிப்படுத்த பகவான் ஆர்வம் கொள்ளவில்லை என்கிறார் அன்னை.

அண்ணன் - இந்தத் துறையை ஸ்ரீ அரவிந்தருடைய சிஷ்யர்கள் நாடியதாகத் தெரியவில்லை.

தம்பி - பகவான் எழுதிய ஒரு விஷயம் எனக்குத் தெரியும். மேல்நாட்டவருக்கு yogic force யோக சக்தியை அனுப்பினால் சோர்ந்திருந்த மனிதன் எழுந்து வேலை செய்து பலன் பெறுகிறான். அதே சக்தியை இந்தியருக்குக் கொடுத்தால் மயக்கம் தெளிந்து எழுந்து கொஞ்சநேரம் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் மயக்கமுறுகிறான். யோகசக்தி மேல் நாட்டவரிடம் வேலை செய்கிறது. நம்மவரிடம் பலன் தருவதில்லை என்கிறார். யோகசக்தி இந்தியரிடம் அதிகம் பலன் தரும் என நான் எதிர்பார்த்தேன். பகவான் கூறுவது தலைகீழாக இருக்கிறது.

அண்ணன் - மேல்நாட்டார் ஜடத்தில் பிரம்மத்தைக் கண்டவர்கள். நாம் ஆன்மாவில் பிரம்மத்தைக் கண்டோம். அவர்கள் கடின உழைப்பாளிகள். காரணமான உழைப்பு ஏராளமான பலனைத் தருகிறது. உழைப்பின் பலனை வீடு, ஊர், கட்டிடம், ஸ்தாபனம், வேலை, பொருள்கள் என மாற்றி, முறைப்படுத்தி வாழ்வு நிலையை உயர்த்தி அனுபவிக்கிறார்கள். இதை அங்கு சுத்தமாகக் காணலாம். ஊரும், தெருவும் சுத்தமாக இருக்கும். வீடு சுத்தமாக இருக்கும். பொருள்கள் வரிசையாக இருக்கும். ஒழுங்கு, குறித்த நேரம், வரிசை, சுத்தம், அங்கு ஏராளம். பிறரிடம் உதவியை மனிதன் ஏற்கமாட்டான். சுயகௌரவம் அதிகம். பொய் சொல்வதில்லை. விழிப்பாக இருக்கிறான். எதையாவது புதியதாகக் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறான். வாழ்வு வளமாக இருக்கிறது, வளர்ந்தபடியிருக்கிறது. வேலையைச் சுலபமாகச் செய்ய எதைக் கண்டு பிடிக்கலாம் என்ற ஆர்வம் மிகுதி, They are conscious and organised விழிப்போடும், முறையோடும் செயல்படுகின்றனர். அங்கு சக்தி செயல்படக் கருவி, தெளிவான மனிதன் என்ற கருவியுள்ளது. இந்தியாவில் மனிதனேயில்லை, 2 1/2 பேர் உள்ளனர் என ஸ்ரீ அரவிந்தரின் தமையனார் கூறினார். ஸ்ரீ அரவிந்தர் ஒன்று, அவர் தம்பி பரீன் இரண்டு, திலகர் 1/2 ஆக 2 1/2 மனிதர்களே இருப்பதாகச் சொன்னார்.

தம்பி - அப்படி அமையக் காரணம் என்ன? ஸ்ரீ அரவிந்தர் ஏதேனும் கூறியுள்ளாரா?

அண்ணன்- நேரடியாக எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் கூறியவற்றிலிருந்து நாம் யூகமாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா பிரம்மத்தைக் கண்டது. ஆன்மாவில் கண்டுவிட்டது.

வாழ்வு படிப்படியாக அமைந்துள்ளது. முதலில் உடல் - ஜடம் - அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்தது வாழ்வு - சக்தி, vital - உடலைத் தெம்பால் நிரப்புகிறது. உச்சியில் மனம் - அறிவு - வாழ்வையும், உடலையும் வழி நடத்துகிறது. ஆன்மா தலைவனாக அமைகிறது.

தம்பி - மேல் நாட்டு மதம், கிருஸ்துவர், சர்ச் போன்றவை ஆன்மாவில் பிரம்மத்தைக் காணவில்லையா?

அண்ணன் -ஆசியாவில் ஆன்மாவும், ஐரோப்பாவில் வாழ்வும் வளர்ந்ததாகக் கூறுகிறார். இனி இவை இணைய வேண்டும். இந்தியர் உடலில் ஒளியுள்ளதாயும், மேல்நாட்டார் உடல் இருளாகவுமிருப்பதாக அன்னை கூறுகிறார்.

தம்பி - ஆன்மாவில் பிரம்மத்தைக் கண்ட இந்தியர் வாழ்வைப் புறக்கணித்து வாழ்வு சூன்யமாக இருப்பதாக அன்னை கூறும்பொழுது, வாழ்வைத் தாண்டி உடலில் ஒளியிருப்பதாகக் கூறினால் எப்படிப் புரியும்?

அண்ணன் -உடலும், வாழ்வும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் ஆன்மாவிலுள்ள அபரிமிதமான ஒளி உடல்வரை ஊடுருவுகிறது. இந்தியர் வாழ்வையும், உடலையும் கவனித்தால் இந்தியா வீறுகொண்டு எழும்.

தம்பி - உடல் என்பது நாடு, பூமி என்பதால் 56 தேசங்களாக - 350 சிறுராஜ்யங்கள், 500 குறுநில மன்னர் எனச் சரித்திரம் கூறுகிறது - இருந்ததாகக் கதைகள் கூறும். இந்தியா ஒன்றுபட வேண்டும் என்பதே அடிப்படை. அதைச் சாதிக்க முடியவில்லை என்பதால் Nature இயற்கை அன்னியப் படை எடுப்பை மேற்கொண்டது எனவும் பகவான் கூறுகிறார். 800 ஆண்டுகளாக முஸ்லீம் ஆட்சியும், 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர் ஆட்சியும் நாட்டை ஒற்றுமைப்படுத்தின. 1947இல் அது 3 ஆகப் பிரிந்தது. அடுத்தது என்ன?

அண்ணன் - மேல் நாட்டார் வாழ்வில் கண்ட பிரம்மத்தை ஆன்மாவில் காணவேண்டும். இந்தியர் வாழ்வில் பிரம்மத்தைக் காணவேண்டும்.

தம்பி - அதற்கு இன்னும் 500 வருஷமாகுமா? அல்லது நவீன சாதனங்களால் 50 ஆண்டில் சாதிக்க முடியுமா?

அண்ணன் - சட்டங்களை ஸ்ரீ அரவிந்தர் கூறியதிலிருந்து நாம் கீழ்க்கண்டபடி புரிந்து கொள்கிறோம்.

  1. அன்னைக்கு உலகை ஒரே நாளில் Supramentalise சத்திய ஜீவிய வாழ்வாக மாற்றமுடியும்.
  2. மேல்நாட்டார் 500 ஆண்டுகளில் சாதித்ததை நாம் சாதிக்க 500 ஆண்டு போதாது.
  3. நவீன டெக்னாலஜியிருப்பதால் 500 என்பதை 50இல் சாதிக்கலாம். ஆனால் கடந்த 50 ஆண்டில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
  4. அதற்கு மேல் சொல்ல psychic being சைத்திய புருஷனை விவரிக்க வேண்டும்.

தொடரும்.

இம்மாதத்தில் வரும் தரிசன நாள் 

பிப்ரவரி 21 அன்னையின் ஜென்மதினம்

ஸ்ரீ அரவிந்த சுடர்

உள்ளிருந்து எழும் அக்னி மனசாட்சி, அவமானம், சொரணை ஆகியவற்றை எரித்துப் பொசுக்குவது ஒன்றே வழி.

அக்னி அவமானத்தை எரிக்கும்.

One man's perfection ... 

One man's perfection can save the World என்பது ஸ்ரீ அரவிந்தர் சொல். ஒருவருடைய சிறப்பு உலகை உய்விக்கும் என்கிறார் பகவான். 10 பேர் சேர்ந்து செய்த காரியம் பலரும் செய்த தவறுகளால் கெட்டுவிட்டால், அத்தனை பேரும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டால் அக்காரியம் கூடிவர வாய்ப்புள்ளது என்பது அனுபவம்.

அப் பத்துப் பேரில் அன்னை அன்பன் ஒருவனிருந்தால், அவன் தன் தவற்றை அறிந்து திருந்திக் கொண்டால், அது மட்டுமே காரியம் கூடி வரப் போதும் என்பது அன்பர் அனுபவம்.

இது எப்படி எனப் புரியவில்லையே என நினைக்கலாம்.

அன்பர் உள்ளம் அனைவர் உள்ளத்தையும் முற்றும் பிரதிபலிப்பது. அவருள்ளம் மாறினால் அனைவர் உள்ளங்களும் தானே மாறும். காரியம் கூடிவரும். (மற்றவர் தவறுகளை அன்பர் மனம் மாற்றவல்லது. மற்றவர் துரோக மனப்பான்மையுடையவரானால், அன்னைக்குத் துரோகம் செய்தவர்களானால், அன்பர் மனமாற்றம் அதை மாற்ற முடியாது. துரோகிகளை விட்டு விலகுவது அவசியம்)

1971இல் நடந்த projectஇல் 3 லட்ச இலாபம் எதிர்பார்த்தனர். மானேஜர் தாம் செய்வதெல்லாம் தவறாகப் போகிறது என விலகினார். உடனிருந்த இருவர் அழிச்சாட்டியம் செய்தனர். முடிவாக 55,000 வந்தது. முக்கிய ஊழியர் நெறி தவறவில்லை. நம்பிக்கை இழக்கவில்லை. பிறர் குறையைத் தம் குறையாக ஏற்றார். வந்த நஷ்டம் பெரியது. அடுத்த ஆண்டு அதே projectக்கு 4% லட்சம் அன்பளிப்பாக வந்தது. மானேஜர் தவறலாம், உடனுள்ளவர் ஊர் சுற்றலாம், புயல் அடிக்கலாம், power cut வந்து நஷ்டம் ஏற்படுத்தலாம். துரோகிகள் இல்லாதவரை அன்னை தவறுவதில்லை. நம்பிக்கை வீண் போவதில்லை. துரோகம் செய்பவர் மீது நாம் குறை கூறும் அவசியமில்லை. அவர்களை நாம் நம்புவதோ, சேர்ப்பதோ, நாம் அன்னைக்குச் செய்யும் துரோகமாகும்.

துரோகம் உள்ள இடத்தில் அருள் செயல்படாது.

U.S. அம்பாசிடர்

டெல்லியில் மத்திய மந்திரிகளைப் பார்த்து விடலாம். U.S. தூதுவரைப் பார்ப்பது சிரமம். பார்க்க வேண்டும் என்று ஒருவர் கேட்டால், முடியாது என பதில் வராது. கடிதம் எழுதச் சொல்வார்கள். பதிலாக ஜுனியர் ஆபீசர் ஒருவரைப் பார்க்கச் சொல்வார்கள். இது இந்தியாவில் நம்மவர்க்குரிய நிலையல்ல. அமெரிக்கர்கட்குள்ள நிலை.

U.S. இல் கவர்னராக இருந்தவர், டெல்லியில் அம்பாசிடராக இருக்கிறார். நம் அன்பர் அவரைச் சந்திக்க வேண்டிய நேரம். பாண்டியிலிருந்து இதற்காக டெல்லிக்குப்போய் ஒரு ஜுனியர் ஆபீசரைப் பார்க்க வேண்டும் என்பது ஏமாற்றம் தந்தது. நாம் நம் வேலைக்காகப் போகவில்லை. பொதுச் சேவைக்காகப் போகிறோம். அவர்களைப் பொருத்தவரை இரண்டும் ஒன்றுதான். வாஷிங்டனிலிருந்து ஓய்வு பெற்ற அம்பாசிடர் வந்தார். அவருடன் டெல்லி அம்பாசிடரைக் காண வாஷிங்டனில் ஏற்பாடு. அன்பரும், ஓய்வு பெற்றவரும் டெல்லி அம்பாசிடரைப் பார்த்தனர்.

மத்திய மந்திரிகள் இருவரிடம் பேசியதை வாஷிங்டனில் தொடர வேண்டி அன்பர் மறுமுறை டெல்லி அம்பாசிடரைப் பார்க்க விரும்பினார். முன்போல் ஜுனியர் ஆபீசரையே சந்திக்கச் சொன்னார்கள். அன்பர் என்றாலும் வேலை என வந்தால் அன்னை நினைவு வராத அன்பர். சமீபத்தில் அன்னையை அறிந்தவர், உற்சாகமானவர் அருகிலிருந்தார். எதற்கும் அன்னையை அனுப்புபவர். அன்பர் அவரை நோக்கி "அம்பாசிடருக்கு அன்னையை அனுப்புகிறீர்களா?" என அரைகுறை நம்பிக்கையோடு கேட்டார். காலை மணி 9.00. டெல்லியுடன் பேசி வேண்டுகோள் விடுத்தார்.

மாலை 4-45க்கு அம்பாசிடர் சந்திக்க ஒத்துக் கொண்டார்.

Comments

பிரார்த்தனை பலிக்க

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

para no.5, - after line no.6 - extra space is there

ஸ்ரீ அரவிந்த சுடர்

அக்னி அவமானத்தை எரிக்கும். - it is a separate line and is to be centralised.

One man's perfection ...

para no.2, line no.3 -  இது எப்படி எனப் புரியவில்லையே என நினைக்கலாம். - separae para.

para no.3, line no.1 - பிரதிப-ப்பது. - பிரதிபலிப்பது.

para no.4, line no.3 - 55,000 ந்தது. - 55,000 வந்தது.

para no.4, line no.6 - அன்பüப்பாக - அன்பளிப்பாக

U.S. அம்பாசிடர்

para no.1, line no.3 -  பீசர் - ஆபீசர் 

para no.2, line no.1 - ம.ந. இல் - U.S. இல்

para no.2, line no.6 - வாஷிங்டனிருந்து - வாஷிங்டனிலிருந்து

.



book | by Dr. Radut