Skip to Content

06. அஜெண்டா - ஐக்கிய ஞானம்

அஜெண்டா

ஐக்கிய ஞானம்

Volume IV, page 414

  • ஞானம் நால்வகை; அஞ்ஞானம் ஏழுவகை.
  • ஆதியான பிரம்மத்தை ஆத்மா அறிவது ஐக்கிய ஞானம்.
  • மேல்மன நினைவு கடந்தகால நினைவை ஞானம் எனக் கருதுவது ஞானம் பிரிந்த நிலை.
  • அடிமனம் பிரபஞ்சத்தை அறிவது நேரடியான பிரபஞ்ச ஞானம்.
  • யோகி மனம் மௌனம் திருஷ்டியைக் கடந்து நேரடியாக பிரம்மத்தை அறிவது நேரடி ஞானம் (intuition).
  • ஆதியை மறப்பது ஆதியின் அஞ்ஞானம்.
  • பிரபஞ்ச பிரம்மத்தை மறப்பது பிரபஞ்ச அஞ்ஞானம்.
  • உலகை அகந்தையெனக் கருதுவது அகந்தையின் அஞ்ஞானம்.
  • நாம் காலத்துள் ஒரு துளியாக இருப்பதை அறிவது காலத்தைக் கடந்ததையும் மூன்றாம் நிலைக்காலத்தையும் அறியாத அஞ்ஞானம்.
  • ஜீவன் பல பகுதிகளாகப் - மேல்மன ஜீவன், உள்மன ஜீவன், அடிமன ஜீவன், ஆழ்மன ஜீவன், ஜட இருளின் ஜீவன், பகுதிகளை இணைக்கும் ஜீவன், முழுமையான ஜீவன் - பிரிந்ததை அறியாதது ஜீவனுடைய அஞ்ஞானம்.
  • மனம், உடல், உயிர் என்பவை ஒன்றாக இல்லாமல் பிரிந்து நிற்பதை அறியாதது அமைப்பின் அஞ்ஞானம்.
  • இந்த நேரம் எதைச் செய்வது என அறியாதது நடைமுறை அஞ்ஞானம்.
  • மற்ற ஆறு அஞ்ஞானமும் அழிந்த பின்னரே நடைமுறை அஞ்ஞானம் அழியும்.
  • 10 வருஷமாக வராத கடன் கொடுத்த பணம், 34 வயதில் மணமாகாத பெண், 42-இல் வரனே வராத மகன், Ph.D. ஆய்வு முடிந்தபின் 17 ஆண்டாக எழுத முடியாத ஆய்வுக் கட்டுரை, வரவேண்டிய எளிய முதல் நிலை பிரமோஷன் வராது என 12 ஆண்டுகள் கழித்து கைவிட்டது, கால் வீக்கம் 51 வருஷமாக இருப்பது தீர்க்க முடியாது என மறந்தது போன்ற நெடுநாளைய பிரச்Oஉனைகள் பலர் வாழ்வில் உண்டு. MBBS படிக்க மனமில்லாத மாணவனுக்கு அட்மிஷனுக்குரிய மார்க்கில் பாதியும் இல்லாத நேரம் அட்மிஷன் கிடைத்து ஸ்காலர்ஷிப் கிடைப்பது போல் நெடுநாளைய பிரச்சினை விழித்து தீர்வது ஐக்கிய ஞானம் க்ஷணம் பலித்ததைக் காட்டும்.
  • பலித்தது பலிக்கும். நன்றிப் பெருக்கால் ஆத்மா விரிந்தால் நீடிக்கும்.
  • ஐக்கிய ஞானம் சத்திய ஜீவிய ஞானம்.
  • ஐக்கியம், பரஸ்பரம், சுமுகம் என்ற மூன்று நிலைகளால் சுமுகத்தில் ஆரம்பித்து ஐக்கியத்தில் முடியும் அந்த ஞானம் அவதார புருஷர்கட்கு அனுதினமும் உரியது.
  • அன்பர்கட்கு அவை தோன்றுவது பூரணயோக வாயில்.
  • நாம் உயிருடனிருக்கிறோம் என்ற ஞானம் ஐக்கிய ஞானம்.
  • அது மட்டுமே நாம் ஐக்கிய ஞானத்தால் அறிவது.
  • பூரண யோக அடிப்படையான முதல் சித்திக்கு மூன்று பாகங்கள் உண்டு.
  • அவை ஆத்மாவில் எழும் நேரம் ஐக்கிய ஞானம் மின்னலாக எழும்.

*********



book | by Dr. Radut