05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
55. மனச்சாட்சி பொன் விலங்கு - உதவி உபத்திரவமாகிறது.
- மனச்சாட்சியற்றவன் மனிதனிலன்.
- ஊரில் பெரியவன் அநியாயம் செய்கிறான், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- எவரும் அடிபட்டவனுக்குச் சாட்சி சொல்லவோ, ஆதரவு தரவோ, நியாயம் கூறவோ முன் வருவதில்லை.
- என்ன மனிதர்கள், மனச்சாட்சியில்லாதவர்கள் என்கிறோம்.
- பயந்து சொல்லாதவர் பலர், பணக்காரனுக்குப் பரிந்து சொல்லாதவரும் உண்டு.
- எப்படியானாலும் மனச்சாட்சியில்லாதவர்.
- பயம் உள்ளவரை ஒருவன் மனிதனாக முடியாது என்கிறார் அன்னை.
- மனிதன் என்பதற்குத் தைரியம், மனச்சாட்சி, நேர்மை, மனிதத்தன்மை அடையாளம்.
- அன்னையிடம் வந்தபின் உலகில் பெரிய விஷயங்கள் எதிராவது வழக்கம்.
- பிரகலாதனுக்கு அந்த இக்கட்டான நிலை ஏற்பட்டது.
- மனச்சாட்சிக்குப் பணிந்தால் பாவம் செய்யும் நிலையுண்டு.
- சிறுவனைத் துரத்தி வரும் ரௌடியிடம் நம் வீட்டில் அவன் ஒளிந்துள்ளதைக் கூறுவது மெய்யா, பொய்யா என்பது தர்ம சங்கடம்.
- நம்மிடம் பெருந்தொகையை ஒப்படைத்தவர் காலமானார்.
- அவர் மகன் சூதாடி. பணத்தைக் கேட்கிறான். தகப்பனார் கொடுத்தது அவனுக்குத் தெரியாது.
- மகனுடைய பிள்ளைகள் கல்யாணம், படிப்புக்குச் சில ஆண்டுகள் கழித்துப் பயன்படும் பணம் அது.
- உள்ளதை ஒப்புக் கொண்டால் மகன் அதைப் பெற்று சூதில் இழப்பான்.
- அவன் பணம், மறுக்க உரிமையில்லை, நாமென்ன செய்ய முடியும் என்றால் குழந்தைகள் வாழ்வு வீணாகும்.
- மறுப்பது பொய், மனச்சாட்சிக்கு விரோதம்.
- இந்த நிலை அனைவருக்கும் வாராது.
- உயர்ந்தவனுக்கும், தாழ்ந்தவனுக்கும் இந்த இக்கட்டான நிலையில்லை.
- மனச்சாட்சியைக் கடந்து தெய்வத்தையடையும் - அன்னையை ஏற்கும் - கட்டத்தில் உள்ளவர்க்கே இது வரும்.
- இந்த நேரம் மனச்சாட்சி பொன் விலங்கு. உடைக்கப்பட வேண்டும்.
- கரண்டில் மாட்டிய நண்பனைக் காக்க முடியாது. நாமும் சேர்ந்து உயிரிழக்கலாம்.
- உதவி செய்தால் உபத்திரவம் வரும். அவனுக்குப் பலனில்லை.
- எல்லையில் உள்ளவர்க்கே எழும் பிரச்சனைகள் இவை.
- எல்லையை எட்டாதவர்க்கும், எல்லையைக் கடந்தவர்க்கும் இல்லை.
- நேருவும், பட்டேலும் உயிர் போனாலும் மகாத்மாவுக்குப் பணிந்தார்கள்.
- மகாத்மா நாட்டைப் பிரிக்கக் கூடாது என்கிறார். பிரிக்காவிட்டால் சுதந்திரமில்லை.
- நேருவுக்கும் பட்டேலுக்கும் மனச்சாட்சி குறுக்கே நின்றது.
- அதை மீறி, மகாத்மாவை மீறினர்.
- எளிய மனிதனுக்கு வரும் பிரச்சனையில்லை.
- அன்னையை ஈடுபாடாக ஏற்கும் வரை இது எழாது.
- ஈடுபாடு அதிகமானால், தவறாது எழும்.
- மனம் அன்னையில் லயித்தால், பிரச்சனை தானே விலகும்.
- பிரச்சனை மனிதனுக்கு.
- பிரச்சனை விஷயத்திற்கில்லை.
- மனம் அளவு கடந்து தெளிவுபடாமல் இக்கட்டத்தைத் தாண்ட முடியாது.
- முன்கூட்டி இது நமக்கு வரக்கூடாது எனப் பிரார்த்திப்பவர்க்கு வாராது.
- வழியில்லை என்பது அன்னையிடம் அறவேயில்லை.
தொடரும்.....
*********
ஸ்ரீ அரவிந்த சுடர் மனித முயற்சியை அருளாக மாற்றுவது சரணாகதி. ******* |
ஸ்ரீ அரவிந்த சுடர் அன்னை அருளின் மந்திரம். ******* |
- Login to post comments