Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • "நானோ அதற்கு நாயகமே"
    • நாயனார் பாடுகிறார். "நான் உன்னை அன்றே சரணடைந்து விட்டேன். இனி நான் செய்யும் காரியங்களுக்கு நான் பொறுப்பில்லை. நானே நீயானபின் நான் செய்யும் காரியங்களுக்கு நீயே பொறுப்பல்லவா?''

      சரணாகதி தத்துவம் பூர்த்தியாகுமிடம் இது.

    • கிருஷ்ண பரமாத்மா மனிதனில்லை, அவதாரம்.
      கர்மம் அவரைத் தொடர்ந்து காலில் அம்பாக வந்து குத்தி அவருக்கு மரணத்தைத் தந்தது.
    • கணவனை விட்டு அடுத்தவனுடன் போனவள் கணவன் இறக்கும் வரை தாலியை எடுப்பதில்லை.
    • அதே போல் தாழ்ந்த ஜாதியில் திருமணம் செய்த பின்னும் தன் ஜாதிப் பழக்கங்களை விடுவதில்லை.
    • எதிர்ப்பை மீறி ஜெயிக்கலாம், எதிர்ப்பு அடங்கும், ஆனால் திருவுருமாறாது. நமக்குத் துரோகம் செய்து பிறகு நிலைமை மாறி நம்முடன் வந்து சேர்ந்தாலும், பழைய மனப்பான்மை நிச்சயமாக இருக்கும். தன் துரோகத்தை உணர்ந்து மனம் மாறுவது திருவுருமாற்றம். அப்படி மாறியவர் பெரிய உதவி செய்வார். அப்படி மாறாதவரால் என்றும் தொந்தரவு வரும். சரணாகதி எளிதில் பூர்த்தியாகாது.
      பெருங்காயம் போன பின் டப்பியில் அதன் வாசனையிருக்கும்.
      நல்லதை வெறுத்தாலும், கெட்டதை விரும்பினாலும், உண்மை தெரிந்து உலகம் மாறி 50, 60 வருஷமான பின்னும் ஆரம்ப காலத்து "வாசனை''க்கு உயிரிருக்கும்.
    • அன்னை முன் ஜென்மத்தில் ஜோன் ஆஃப் ஆர்க்காக இருந்து பிரான்ஸை தலைமை தாங்கி நடத்தினார். ஜோனைக் கொளுத்திவிட்டனர். இந்த ஜென்மத்தில் அனல் உடல் மீது பட்டால் அன்னைக்குத் தாங்காது. அது போன ஜென்ம அனுபவம் தொடர்வது என்கிறார்.
    • காந்தீஜீ இங்கிலாந்தில் படித்தவர். கோட்டு, சூட் போயிற்று. இங்கிலாந்திற்குப் பரம எதிரியானார். கதர் உடுத்தினார். வைஸ்ராயை எதிர்த்தார். அவர் King George-Vயைப் பார்க்கவும் கோட்டு, சூட் போட மறுத்தார். ஆனால் அவர் வைஸ்ராயிக்கு எழுதும் கடிதங்கள் அப்பழைய பாணியிலேயே அமைந்தன.
    • ஒரு தலைவரிடமிருந்து பலர் பிரிந்தனர். தலைவர் பிரிந்தவர் உயிரை எடுக்க பெருமுயற்சி செய்தார். பாதிக்கப்பட்டவர் அருளால் தப்பித்து, 3 வருஷம் பெரும் உபாதைகளை அனுபவித்தார். (அத்தொந்தரவுகள் 30 வருஷம் தொடர்ந்தன). அவரை விட்டு வந்து 1 வருஷமான பின் பழைய கையெழுத்து விட்டுப் போனதை வாங்க மூவர் சென்றனர். பழைய தலைவர் வெட்கமின்றி மறுத்துவிட்டார். 1 மணி நேரம் விரசமாக வாதம் நடந்தும் பயனற்றுப் போயிற்று. வரும்பொழுது ஒருவர் அவரை நமஸ்காரம் செய்துவிட்டு வந்தார்.
    • எட்மெண்ட் 19 வயது கப்பல் கேப்டன். மெர்சடெஸ் அழகி, அனாதைப் பெண். அவள் (cousin) ஒன்றுவிட்ட தம்பி பெர்னாண்ட் அவளைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். அவர்கள் நாட்டில் சித்தப்பா பெண்ணை மணப்பார்கள். அவள் மறுத்து, எட்மெண்ட்டை விரும்புகிறாள். அவள் திருமண நாளன்று பெர்னாண்ட் போலீஸுக்குப் பொய் கடிதம் எழுதி எட்மெண்டைக் கைது செய்து, அவளிடம் "ஜெயிலில் எட்மெண்ட் இறந்துவிட்டான்'' எனக் கூறி, அவளை மணக்கிறான். பாரிசிலும், துருக்கியிலும் ராணுவத்தில் வேலை செய்து, ராஜத் துரோகம் செய்து, ஏராளமாகச் சம்பாதித்து, பாரிஸுக்கு வந்து மந்திரியாகிவிட்டான். எட்மெண்ட் ஜெயிலிலிருந்து வந்து விஷயம் தெரிந்து பெர்னாண்டை அம்பலப்படுத்திவிட்டான். பெர்னாண்ட் தற்கொலை செய்து கொண்டான். அவன் மகன் ஆல்பர்ட் விஷயமறியாமல் எட்மெண்டை (duel) துப்பாக்கி சவால் விடுகிறான். மெர்சடெஸ் மகன் உயிரைக் காப்பாற்ற எட்மெண்டை சந்திக்கிறாள். அவர்கள் நாட்டில் நெருங்கியவரே பெயரிட்டு அழைப்பர். மெர்சடெஸ் தான் செய்ததை அறியாமல் - எட்மெண்டுக்குத் துரோகம் செய்தது, அயோக்கியனுக்கு மனைவியானது - மகனைக் காப்பாற்றுவதற்காக எட்மெண்டை விட்டுக்கொடுக்க கேட்கிறாள். விட்டுக்கொடுத்தால் ஆல்பர்ட்க்குப் பதிலாக எட்மெண்ட் இறப்பான்.

      எட்மெண்ட் டான்டேயை மெர்சடெஸ் வந்து சந்திக்கிறாள். அவள் அவனை டான்டே எனவும், எட்மெண்ட் எனவும் கூப்பிடுகிறாள். அவன் அவள் பட்டத்தைச் சொல்லி கூப்பிடுகிறான். "ஏன் என்னை நீ மெர்சடெஸ் எனக் கூப்பிட மறுக்கிறாய்?'' எனக் கேட்கிறாள்.

      அவன் கண் கலங்கி, " Mercedes, மெர்சடெஸ், ஆம், இன்னும் அப்பெயர் இனிமை sweetஆக இருக்கிறது'' என்கிறான்.

    • இறைவனுக்கு நாயன்மார் சரணடைந்த பின்னும் அவர் செயல் அவர் substance செய்யும் செயலில் குறை எழுகிறது. Consciousness சரணடைந்தாலும் substanceக்குப் பழைய உயிரிருக்கும்.
    • தானாடாவிட்டாலும், தன் தசையாடும் என்பது பழமொழி.
    • திருவுருமாற்றம் உலகுக்குப் புதியது. அதில் அக்குறை வாராது.
    • இராமனாக இருந்து எய்த அம்பு குருடர் பையனைக் கொன்ற பாவம், கிருஷ்ணனாக இருந்த பொழுது வேடன் எய்திய அம்பாக வந்து கிருஷ்ணன் காலில், உள்ளங்காலில் குத்தி உயிர் பிரிந்தது. துர்வாசர் கிருஷ்ணனுக்கு "உன் உடலில் எங்கும் காயம் படாது'' என்று வரம் கொடுத்திருந்தார். அந்த வரம் உள்ளங்காலைக் காப்பாற்றவில்லை.
    • "இன்னும் red coatயைப் பார்த்தால் எனக்கு ஆசை வருகிறது'' என்றாள் Mrs. Bennet.
    • சிறு வயதுப் பழக்கம் வயதான பின் ஏதோ ஒரு ரூபத்தில் மாறித் தொடரும்.
    • ரைட்டர் பண்புள்ளவர், பண்பாகப் பேசுவார். 2 வருஷம் அட்டெண்டர் வேலை செய்தார். ஒரு ஆசிரியரை ஆபாசமான பாஷையில் திட்டினார். அட்டெண்டர் வேலைக்குரிய பாஷை அடியில் இருக்கும்.
    • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
    • ஹைகோர்ட்டில் வக்கீலான பின் சக்கரை மிட்டாய் சாப்பிட ஒருவர் ஆசைப்பட்டார்.
    • 3000 வருஷமாக பிச்சை எடுத்து வாழ்ந்தவனுக்கு பிச்சைக்கார புத்தி, வெட்கம் கெட்ட பழக்கம், தயக்கமில்லாமல் கேட்பது, கேட்க வெட்கப்படாதது எல்லாம் உண்டு.
    • பெரிசு பெரிசுதான், சின்னது சின்னதுதான்.
    • சோழன் மந்திரி தேடிய பொழுது மூன்று முன் தலைமுறைகளில் இரு புறமும் நாணயமானவரைத் தேடி, குன்றத்தூரில் சேக்கிழாரைக் கண்டுபிடித்தான்.
  • இராமலிங்க சுவாமிகளுக்கு (attained Supermind), சத்தியஜீவியம் உள்ளே சித்தித்தது.
    • வடலூர் கடலூர் ஆகும் என்றார், ஆயிற்று.
    • Supermind வேத ரிஷிகட்குத் தெரியும். ஆனால், இதுவரை அதை அடைய ரிஷிகள் முயலவில்லை. ஸ்ரீ அரவிந்தரே அங்கு சுவாமி விவேகாநந்தரால் போனார். இஸ்ரேலில் தக்காளி 240 டன் எடுக்கும் பொழுது இந்தியாவில் 8 டன் ஏக்கரில் பயிராகிறது. அது தெரியும். அது போல் ஆயிரம் தெரியும். நாம் அதை அடைய முயல்வதில்லை. ரிஷிகள் சத்தியஜீவியத்தை Supermind அடைய முயலவில்லை.
    • அதிலும் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று அகம்; அடுத்தது புறம். அகத்தில் சித்தி பெற்றவருக்கு அவருக்கு மட்டும் பலிக்கும். அது போல் அநேகர் பெற்றுள்ளனர். அவர்களில் இராமலிங்க சுவாமி ஒருவர். புறம் உலகுக்குப் பயன் தரும். அதை எவரும் இதுவரைக் கருதவில்லை. பகவானே முதலில் எடுத்துக் கொண்டார்.
    • இராமலிங்க சுவாமி உடல் கற்பூரமாயிற்று. போட்டோ எடுத்தால் விழாது. நடந்தால் நிழல் விழாது என்பது வழக்கு (legend). ஜோதியானார் என்றனர். பகவான் தமிழ்நாடு வந்ததற்கு அது போன்றவை காரணமாக இருக்கலாம் என நினைக்கலாம்.
    • நான் இராமபுரம் வண்டியில் போகும்பொழுது தூரத்தில் ஆகாயத்தில் பெரிய உருவமாக பகவானும், அன்னையும் தெரியும். ஒரு நாளிரவு நான் 9 மணிவரை தோப்பில் இருந்தேன். தூரத்தில் பெரிய வெளிச்சம் தெரிந்தது. அதுவே நெய்வேலி என்றார்கள். உருவங்கள் தெரிந்தது நெய்வேலிக்கு மேல் எனப் புரிந்தது.
    • ஆசிரமம் போல் உலகில் ஓரிடமில்லை என்றார் அன்னை. பகவான் திலீப்குமாரைத் தம்பியாகவும், நீரோத்பரனை மகனாகவும் நடத்தினார். திலீப்குமார் ஒரு நடிகருடைய மகன். இந்த நடிகர் நேருவின் நண்பர். நேரு பாண்டி வந்த பொழுது திலீப்குமாரைச் சந்திக்கப் பிரியப்பட்டார். பகவான் மறுத்துவிட்டார்.

      திலீப்குமாருக்கு அன்னை Mother பிடிக்காது.

      சத்தியஜீவியம் Supermind வருவதானாலும் விளையாட்டு மைதானம் playground போகமாட்டேன் என்றார். சத்தியஜீவியம் விளையாட்டு மைதானத்தில் வந்தால் என்ன செய்வது, நான் அங்கு போவதில்லையேயென திலீப் பகவானுக்கு எழுதினார்.

      "நானும் அங்கு போவதில்லை''யென பகவான் பதில் எழுதினார்.

      அன்னை சொன்னபடி சத்தியஜீவியம் Supermind விளையாட்டு மைதானத்தில் playgroundஇல் வந்தது - 1956.

      இங்கு ஒருவர் சந்தோஷமாக இல்லாவிட்டால் எங்கும் சந்தோஷமாக இருக்க முடியாது.

      திலீப்குமாருக்குச் சத்தியஜீவியம் Supermind அவர் இருக்குமிடத்தில் வேண்டும். அது குதர்க்கம்.

      சத்தியஜீவியம் Supermind வருமுன் அவர் ஆசிரமத்தை விட்டுப் போய்விட்டார்.

      நமக்குச் சில்லறை விஷயங்கள் முக்கியமாகி, பெரிய காரியத்தைத் தடுத்துவிடும்.

      இதுவரை வேண்டாம் என அடுத்தவர் கூறியதை மீறிச் செய்ததே நான் செய்தது.

      முதலில் "வேண்டும்” என ஒருவர் சொல்வாரா என எதிர்பார்க்கிறேன்.

  • அன்னையை அறிவது.
    • குழந்தைக்கு வயிற்றுப் போக்கு.
      தவறான பேச்சு வயிற்றுப் போக்கைத் தருகிறது.
      பேச்சை நிறுத்தினால் போக்கு நிற்கிறது.
      நினைப்பு பலிக்கும்.
      தான் உயர்வு என Life Response காட்ட விரும்பினால் அது காட்டும்.
      எது தானே வரும் Life Response, எது நம் நினைப்பை வாழ்வு Life ஏற்றுத் தருவது எனத் தெரியும்.
      தாயாரின் நினைவு ஆயிரம் காலத்துப் பழக்கம்.
      அது மாறாது; மாறினால் மேலெழுந்தவாரியாக மாறும்.
      திருவுருமாற்றம் முழுவதும் மாற்றும்.
      இந்த அம்சங்களை அறிய இவர் மாதிரி மனிதர்கட்கு வேறு சந்தர்ப்பமில்லை.
      "அதுவே புரியவில்லை என்றால், எதுவும் எதிர்பார்க்கக் கூடாது'' என்பது விவேகம்.
      Life Responseயைக் கவனித்தால்,
      1. அதன் பெருமை தெரியும்; சக்தி power தெரியும்.
      2. நம்மால் Life Response உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரியும்.
        அதற்குத் தொடர்பு correspondence தெரிய வேண்டும். தொடர்பு correspondence தெரிய உண்மை sincerity வேண்டும்.
      3. எது நாம் எழுப்பிய Life Response எனத் தெரியும்.
      4. ஒரு விஷயத்தில் திருவுருமாற்றம் transformation பார்ப்பது பெரியது.
      5. குழந்தை உன்னிடமிருப்பதன் சூட்சுமம் தெரிகிறதா?
      6. குழந்தை பெரிய சின்னம்.
      7. யோசனையைக் கடந்த உலகம் யோகம் தருவது.
      8. தாயார் ஏற்றுக் கொண்டால், செய்தால், பெரியது நடக்கும்.
  • வம்புப் பேச்சு.
    • பெரியவர் எப்பொழுதும் வம்புப் பேச்சு பேசமாட்டார்.
      அவர் மூலம் அன்னை பெரும் பணம் பெற்றார்.
      என் குரு ஸ்தானத்திலிருந்தவர்தாம் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார்.
      பெரியவர் பிறகு குரு ஸ்தானத்திலிருந்தவரிடமிருந்து பாதுகாக்கப் பயன்பட்டார்.
      ராகு காலத்தில் நிலம் பெற்றேன்.
      அதன் குணம் பல வகையில் வெளிப்பட்டது.
      அதை மீறி முழு நிலமும் நமக்கு வந்தது.
      அன்னைக்கு வந்த பெரும் பணமெல்லாம் பெரியவர் மூலம் வந்தது.
      அதைவிடப் பெரும் பணம் சேவைக்கு என் மூலம் வந்தது.
      பெரும் செல்வம் காத்திருக்கிறது!
      1971இல் டிரஸ்டி வந்தது பெரும் தொகை வந்ததாகும்.
      அவர் படிக்காத மனிதன்.
      அன்னை அவர் பிறந்த நாள் கார்டில், "For a long long long life”, "நீண்ட காலம், வெகு நீண்ட காலம் ஆயுள் உண்டு'' என எழுதினார்.
      அவர் 96 வயது வரை இருந்தார்.
      காஷ்மீரிலிருந்து 3000/- ரூபாய்க்குக் கம்பளம் கொண்டு வந்தார் அன்பர்.
      பகவான் ரூமுக்கு அதைக் கொண்டு போய்க் கொடுத்தேன்.
      பெரியவருக்குக் கோபம்.
      பணம் அழியுது என்றார்.
      Tapestry – கம்பளத்தை வெளி வராண்டாவில் மாடத்தில் மாட்டினர்.
      மிக அழகாக இருந்தது.
      பலரும் வந்து நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.
      பெரியவர் படுக்கையாகப் படுத்துவிட்டார்.
      நான் பார்க்கவில்லை.
      விக்கல் வந்துவிட்டது. அது முடிவு.
      பெரிய க்யூ ரூம் முன்னால் நிற்கிறது.
      நம்மால் அவர் உயிர் போகக்கூடாது என நான் போய்ப் பார்த்தேன்.
      5 நிமிஷம் அருகில் நின்றேன்.
      அன்னையை அழைத்தேன்.
      மறுநாள் விக்கல் நின்றது.
      இரண்டு நாளில் நடந்து வந்தார்.
      இது போன்ற நிகழ்ச்சிகள் ஆராய்ச்சிக்குரியவை.
      அதே போல் அன்னை பகவானை நெருங்கியவர் பேசினார்.
      ஸ்ரீ அரவிந்தர் அறையை விட்டே போனார்.
      எனக்குக் கையால் அவர் காட்டியதை மற்றொருவர் காலால் அவருக்குக் காட்டினார்.
      எட்டி உதைக்க வந்தார்.
      பாண்டிச்சேரியை விட்டே போய்விட்டார்.
      எல்லோரும் இங்கு வந்து உயிர் விட வருகின்றனர்.
      இவர் சொந்த ஊரில் போய் உயிரை விட்டார்.
  • போலண்ட் பிரபு (Marquis).
    • போலண்ட் கதையொன்று:

      ஒரு பிரபு ஒரு பெண்ணை விரும்புகிறார். அவள் சிறிய பிரபுவின் மகள். அவள் மறுத்துவிடுகிறாள். அந்த ஊரில் நடந்த ஒரு போர்க்களத்தில் அவள் சிக்கியபொழுது மயக்கமுற்று விழுகிறாள். இந்தப் பிரபு அவளைக் காப்பாற்றுகிறார். எப்படியாவது அவளை மணக்க தீராக் காதல் கொண்ட அவர், அவர் சுபாவத்திலில்லாத காரியத்தைச் செய்ய முன் வந்து செய்கிறார். அவள் கருத்தரிக்கிறாள். தகப்பனார் மகளை வீட்டை விட்டு விலக்குகிறார். நாட்டில் புரளி ஏற்படுகிறது. எவரும் பிரபுவை சந்தேகப்படவில்லை. யார் அதைச் செய்திருந்தாலும் அவரைத் தான் மணக்க சம்மதித்து விளம்பரம் செய்கிறாள். பிரபு வந்து தான் செய்ததை ஏற்றுக் கொள்கிறார். எவரும் நம்பவில்லை. அவளே நம்பவில்லை.

      அவரே ஏற்ற பின்னும் உலகம் நம்பாத அளவுக்கு அந்த நாட்டில் பிரபுக்களுக்கு நேர்மையுண்டு. நம் நாட்டில் அது போல் நடக்குமா?

      நம் நாட்டில் அது போன்ற நிலை இன்றில்லை.

      என்றாவது இருந்ததா எனத் தெரிய வேண்டும்.

      அன்பர்கள் குடும்பம், அந்தப் பெயர் பெற வேண்டும்.

      90%, 95% நல்ல பெயர் எடுக்கலாம்.

      100% எடுக்க ஒருவரும் கெட்ட எண்ணக்காரராக இருக்கக் கூடாது.

      நாம் பெறும் நல்ல பெயர் நம் உலகில் கெட்டவரிருக்காமல் செய்ய வேண்டும்.

      ஐரோப்பா, இங்கிலாந்து கதைகளிலும் இது போன்ற நிகழ்ச்சி அரிது.

      சத்தியஜீவியம் வந்துவிட்டால் கெட்ட எண்ணம் இராது.

      எல்லா அன்பர்கட்கும் இந்த நல்ல பெயரெடுக்கும் வாய்ப்புண்டு.

      அனைவர் குடும்பமும் அதைப் பெறலாம்; முழுவதும் அதைப் பெறலாம்.

      It is something GOOD, not good. அது உயர்ந்த நல்லது.

    • எதுவும் எல்லையைக் கடந்து உயரும்.

      ஒரு விஷயத்திலாவது அப்படி உயராமல் அன்னையின் ஸ்பர்சம் அனந்தமாகப் படாது.

      எல்லா விஷயத்திலும் அப்படியிருக்க முயன்றால் முடியும்.

      Marquis என்பவர் count, duke, prince வரிசையில் ஒரு கட்டம்.

      அவர்களுக்குப் பெரும் செல்வம் உண்டு.

      மார்க்கி, கௌண்ட், ட்யூக், நைட் என்ற பட்டங்கள் பெற்றவரில் செல்வத்தை இழந்தவரும் உண்டு.

      ஆனால் சுபாவம், பண்பு, உயர்ந்த நடத்தையை character, culture, gentlemanly behaviourஐ இழந்தவர் அவரில் இல்லை.

      கதை உயர்ந்தது.

      அந்த மார்க்கியும் நிலை கடந்து செயல்பட்ட கதையிது.

      கட்டுப்பாட்டை (discipline) மார்க்கி மீறியதும் இக்கதையில் அவர் பெருமையைக் காட்டும்.

      பெருமை, பெருந்தன்மை, பண்பு, பரந்த மனம், பதம், பக்குவம், பவித்திரம் ஆகியவற்றை ஆன்மா Spirit உற்பத்தி செய்யும்.

      அதற்கு உதவுவது ஞானம்.

      நேரடியாக "உலகம்-மோட்சம்-ஸ்ரீ அரவிந்தம்” போன்றவற்றைப் படிப்பது ஞானம் தரும்.

      பண்பால் பெறுவது நேரடியாக, உயர்வாக, நிலையாக வரும்.

      அது அடக்கத்தால் வரும். அடக்கம் என்பது அனைவரும் நம்மைவிட உயர்ந்தவர் என்ற அறிவு.

      அன்பு அடக்கத்தையும் உற்பத்தி செய்யும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சேவை, ஊழியர் என்பவை சேவையில் பெருமைப்படுபவர்க்கே எழும். சேவையின் நோக்கம் மனிதனை உருவாக்குகிறது. சேவை அன்பான ஊழியமானால் மனித நிலை உயரும். நான்கு பகுதிகளுமில்லாவிட்டால் முழு மனிதனில்லை. பிராம்மண, க்ஷத்திரிய, வைஸ்யன் சேவையின்றி, அதுவும் தாம் பெருமைப்படும் அன்பு ஊழியமின்றி முழுமை பெறமாட்டார்கள். கடைசிப் பகுதி என்பதால் இதைத் தயார் செய்வது மிகக் கடினம்.  
  1. ஞானம், வீரம், உற்பத்தி சேவை, ஆகியவற்றுள் சிறந்தது சேவை. அது சிறப்புற அன்பால் அது நிறைய வேண்டும்.
  2. மனிதன் முழுமை பெற சேவை சிறந்து, அன்பால் நிறைய வேண்டும்.  

*****



book | by Dr. Radut