06. அஜெண்டா
அஜெண்டா
குரு சிஷ்யனை அவனுடைய ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள உதவுகிறார். சிஷ்யனை சத்புருஷன்வரை (Supreme) அவரால் அழைத்துச் செல்ல முடியும். எல்லாக் குருவாலும் அது முடியாது
(Agenda, Vol.IV, P.217,218)
- சிஷ்யனைப் பொருத்தவரை குருவேயெல்லாம்.
மனிதனைப் பொருத்தவரை ஆத்மாவே அனைத்தும். - விஷ்ணு லீலி பகவானுக்கு மௌனப் பயிற்சியளித்தார். அதன் பின் பகவான் ஆத்ம விழிப்புப் பெற்று (inner voice) அசரீரியால் வழிநடத்தப் பெற்றார். அப்பொழுது பகவானை சந்தித்த விஷ்ணு லீலி பகவானைப் பேய் பிடித்துள்ளது என்றார்.
- சிஷ்யன் எளிய மனிதன். அவன் குருவைமட்டும் கருதுவது நல்லது. குருவை மீறமுயல்வது அகங்காரம். அது அவனுக்கு அழிவைத் தரும்.
மனிதன் பெரிய ஆத்மா. அவனுக்கு ஆத்மவிழிப்புவரும்வரை குரு அவசியம். ஆத்மவிழிப்பு பெற்றபின் அவன் குருவை விட்டகலாவிட்டால் அவனுக்கு யோகம் பலிக்காது.தன் நிலையை உண்மையாக அறிந்தவனுக்குத் தவறு வாராது.
- Paul Brunton பால் பிரண்டன் என்ற ஆங்கிலப் பத்திரிகை நிருபர் குருவைத் தேடி இமாலயம் முழுவதும் பிரயாணம் செய்தார். அவர் கண்ட குருமார்கள்,
- ஏதோ ஒரு வகை சித்தி பெற்று, அதையே முடிவாகக் கருதுபவர்கள்.
- சித்தியில் ஒரு நிலையடைந்தாலும், மனவளர்ச்சியற்றவர்கள்.
- சித்தி என்பதின் வகைகள் ஏராளம். நிலைகள் 20 அல்லது 30 ஆகும்.
வரிசைக்கிரமமாகக் கூறினால்
மௌனம்பெற்ற முனி அல்லது தவசி,
திருஷ்டி பெற்ற ரிஷி,
ஞானம் பெற்ற யோகி.
ஒவ்வொன்றிலும் 10 அல்லது 50 நிலைகள் உள்ளன. - யோகத்தை அடையும் மார்க்கத்தைப் பொறுத்து சித்தி பலிக்கும்.
கர்மம், பக்தி, ஞானம், லயம், மந்திரம், தந்திரம் போன்ற எண்ணற்ற மார்க்கங்களுண்டு. - தம் குரு பெற்ற சித்தியைப் பெற்றவருண்டு.
- குருவைப் பொறுத்து, சிஷ்யனைப் பொறுத்து, யோக லோகத்தைப் பொறுத்து குரு சிஷ்யனுக்கு உதவ முடியும்.
திறமையுள்ளவனுக்கு குரு பெரிய உதவி செய்ய முடியும்.
அவன் தன் திறமையை நம்பாவிட்டால், தன்னைக் கடந்து உயரும் உதவியையும் செய்ய முடியும்.தமிழ்நாட்டு அரசியலில் 1967 வரை ஆயிரம் பெரிய மனிதர் வந்தனர். இராஜாஜி, காமராஜ், வெங்கட்ராமன், சுப்ரமணியம் வரை டெல்லியில் வந்து சிறப்பெய்தினர். மற்றவர் சென்னையோடு அரசியலை முடித்துக்கொண்டனர். காந்திஜீ நேருவை தம்மைக் கடந்த உயர்வை எட்ட உதவினார். அதே உதவியை அவரால் மற்றவர்கட்குச் செய்ய முடியவில்லை. இராஜாஜியைத் தம் வாரிசு என்றார். 10 ஆண்டில் அது மாறியது. பட்டேலை அவர் பிரதமராக்கப் பிரியப்படவில்லை. சுபாஷ் சந்திர போஸை காந்திஜீ எதிர்த்தார். காமராஜை காந்திஜீ ஏற்கவில்லை.
குருவுக்கு சிஷ்யன் அமைவதும், சிஷ்யனுக்கு குரு அமைவதும் திருமணம்போல் பூர்வஜென்மப் பலன். அன்னையை உண்மையாக ஏற்றால் அதுவும் மாறி அன்னை பலன் வரும்.
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் எண்ணத்தைச் சமர்ப்பித்தால் எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும். ஜீவியம் செயல்படும் சமர்ப்பணம். |
ஸ்ரீ அரவிந்த சுடர் உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால் அதன் பின்னணியில் உள்ள ஜீவியம் தானேசெயல்படும். செயலைச் சமர்ப்பணம் செய்தால் உடலின் ஜீவியம் செயல்படும். உடலின் ஜீவியம் செயல்படும் விதம். |
- Login to post comments