Skip to Content

1. பணவரவு

பணவரவு

வரவு பெருக செலவு பெருக வேண்டும் - அன்னை

இது ஓர் ஆன்மீக உண்மை, சூட்சும 0.உண்மை. பணத்திற்கு மட்டும் உண்மையன்று. அன்பிற்கும், அனைத்திற்கும் பொதுவான ஆன்மீக சூட்சும உண்மை. அன்பை அளவு கடந்து பெற, அபரிமிதமாக அதைப் பிறருக்குத் தர வேண்டும். ஒரு பொருளாதார நிபுணர், இந்த உண்மையை அறிந்தவர், நடைமுறையில் இதைச் செயல்படுத்த விரும்பினார். உலகப் பொருளாதார நெருக்கடியான சமயம். கடைகளில் விற்பனையில்லை. தொழில்கள் திவாலாகின்றன. 4500 பேருள்ள ஊரில் 1500 பேருக்கு வேலையில்லை. அவ்வூரில் 220 குடும்பங்கள் தர்ம சாப்பாட்டை எதிர்பார்க்கும் வருஷம் - 1933 - அந்த ஊர் பெயர் வோர்கல். பணத்தைப் பெட்டியில் வைத்திருந்தால் பணம் பயன்படாது. அதற்கு மதிப்பில்லை. பணம் நடமாடிக்கொண்டிருந்தால் பெருகும்என அவர் நம்பினார். அவர் அவ்வூர் மேயர். 40,000 ஷில்லிங் பணம் இருந்தது. இதைச் செலவு செய்தால் 40,000 ஷில்லிங் பெறுமான வேலை நடக்கும். அதற்குப் பதிலாக இதை பாங்கில் போட்டு, ரசீது பெற்று பணம் தர வேண்டியவர்க்கு இந்த ரசீதைக் கொடுத்தால் ரசீது பணம் போலாகும். அதை அவர்கள் 1 மாதத்திற்குள் செலவு செய்தால் வருஷத்தில் 12 முறை பணம் புரளும். அதனால் பணம் பெருகும் என நினைத்தார். இவர் திட்டத்தை ரயில்வேயும், போஸ்ட் ஆபீஸூம் தவிர மற்றவர் அனைவரும் ஏற்றனர். அத்துடன் எவருக்கு எந்த நேரம் ரசீதில் நம்பிக்கையில்லைஎன்றாலும் பாங்கில் ரசீதைக் கொடுத்தால் பணம் கொடுத்துவிடுவார்கள். 100க்கு 2 ரூபாய் குறைத்துத் தருவார்கள். திட்டம் அமுலாயிற்று. கடைகளில், ஆபீஸூகளில் ரசீதைத் தடை சொல்லாமல் பணமாகக் கருதி ஏற்றனர். ஊர் சுறுசுறுப்பாயிற்று, கலகலப்பாயிற்று. ரோடுகள் போட முனைந்தனர். புது விளக்கு தெருவில் போட்டனர். வேலையில்லாதவருக்கு வேலை கிடைத்தது. 1500 பேருக்கும் வேலை கிடைத்தது. கடைகளில் வியாபாரம் பெருகியது. கடைகள், தொழில்கள் திவாலாவது நின்றுவிட்டது. வழக்கத்திற்கு மாறாக கார்ப்பரேஷனில் வரி வசூலாகியது. முன்கூட்டியும் வசூலாகியது. வீடுகளை மக்கள் புதுப்பித்தனர். வறுமை நிறைந்த ஊரில் வளம் பெருகியது. எவரும் ரசீதை 1 மாதத்திற்கு மேல் சேமித்து வைக்காததால் 1 வருஷத்தில் 14 மடங்கு பணம் செலவாகியது. அதனால் 14 மடங்கு பணம் பெருகியது. உலகமே வறுமையில் அழுந்திய நேரம், இவ்வூர் வறுமையினின்று எழுந்து வெளிவந்து சுபிட்சமாயிற்று. ரிஸர்வ் பேங்க் இதை ஆமோதிக்கவில்லை; தடை செய்தது. அவரவர் தங்கள் ரசீதைக் கொடுத்துப் பணம் பெற்றனர். மீண்டும் 1500 பேருக்கு வேலையில்லை. ரோடு போடுவது, வீடு கட்டுவது, கடை வருமானம் நின்றது. மீண்டும் தொழில்கள், கடைகள் திவாலாயின. பிரெஞ்சு பிரதமர் வந்து பார்வையிட்டு தாம் இதைப் பின்பற்ற விரும்பினார். அருகில் உள்ள 30 ஊர்கள் இதைப் பின்பற்ற முடிவு செய்தன.

  • பாங்க் அனைத்தையும் தடை செய்தது.
  • இந்த அனுபவம் அன்னை கொள்கையின் உண்மையை எடுத்துக் கூறுகிறது.
  • இந்த மேயர் ஆகஸ்ட் 15இல் பிறந்தவர்.
  • இவர் 1884இல் பிறந்தவர். பகவான் பிறந்த 12 ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர். பகவானும் அன்னையும் பிறந்தபின் உலகம் எதிர்காலத்தில் அவர்கள் கூறப்போகும் கொள்கைகளைச் சுட்டிக்காட்டும் வகையில் செயல்பட ஆரம்பித்ததை சரித்திரம் கூறுகிறது. அதில் இதுவும் ஒரு செய்தி.
  • மக்களுக்கு எவ்வளவு பெரிய நன்மை ஏற்பட்டாலும் சமூகம் அதை அனுமதிக்காது என்பதும் இதனால் தெரிகிறது.
  • சமூகத்தில் இருளும் பொய்யும் ஆட்சி செய்கின்றன. அவை மெய் வந்து தம்மை அழிக்க இடம் தாரா.
  • 14 மடங்கு பணம் 13 மாதத்தில் பெருகி பெருநன்மைகளைக் கண்ட பின்னும் பாங்க் இத்திட்டத்தை ரத்து செய்தது பழையது புதியதை அனுமதிக்காது, மாமியார் மருமகளை ஏற்கமாட்டாள், இன்று மருமகள் மாமியாரை ஏற்கமாட்டாள் எனக் கூறுகிறது.

*****



book | by Dr. Radut