06. சாவித்ரி
"சாவித்ரி"
P.96 The Thousandfold expression of the One
ஆயிரம் முகம் கொண்ட ஆண்டவன் அவன்
- உலகனைத்தும் சேர்ந்து ஒரே பார்வையில் தெரிந்தது.
- பரந்த ஞானதிருஷ்டிக்குத் தப்பிப்பது என்பதில்லை.
- அவனை நாடி வாராததில்லை, வந்ததில் உறவில்லாததில்லை.
- பிரம்மாண்டம் அவனோடு உயிரில் உறவு கொண்டாடிற்று.
- தெய்வம் ஜீவியமாகி, உருவங்களாக அவன் முன் எழுந்தது.
- பிறப்பற்றவன், அழிவற்றவன் உடலை ஏற்றான்.
- பிரம்மம் பிரபஞ்சத்தில் தன்னை திருஷ்டியாக அமைத்தது.
- அனாதியான புருஷஸ்பர்சம் ஜீவனளித்தது.
- ஆத்மாவின் சிந்தனைகள் எண்ணத்தால் கட்டுப்பட்டு அவன்முன் நின்றன.
- சொல்லைக் கடந்த சலனத்தின் சொரூபம்.
- உலகத்தின் எல்லை, ஜீவனின் அம்சமான ரூபம்,
- எழிலுருவமான இறைவனின் திருமுகம் தெரியும் வாயில்.
- அனுதினமும் ஏற்கும் அற்புதக் காட்சி,
- ஆத்ம சத்தியம் அடையாளமாக எழுந்தது.
- உடலற்றவனின் உயிருள்ள உடல்கள்,
- அவனை நாடி ஆதரவுதர முன்வந்தன.
- உறங்காத மனம் எழுப்பிய தீராத பார்வை,
- புலப்படாதது, எழுத்தாக மாறிய தொடர்பு.
- எண்ணிறந்த அடையாளம் எடுத்துக்காட்டும் சூழல்,
- வாழ்வின் ஆயிரம்அரங்கம் எழுப்பிய குரல்கள்,
- அவளது வலுவான அழைப்பைச் சேவையாகக் கொணர்ந்தது.
- புவி வாழ்வின் சொர்க்க நுணுக்கம் எடுத்த படையெடுப்பு,
- இருண்ட கற்பனை கண்ட நரகத்தின் கனவு,
- கனவு நனவாகும் பூவுலக அனுபவம்.
- மந்தமான திறமை உணர மறுக்கும் செய்தி,
- அழியும் உடல் தாங்க முடியாத அனுபவம்,
- புனித செயலின் புலப்படும் அமைப்பு.
- சுயமான ஜனனம் வாழும் சூழல்,
- சொந்தமான சக்தியின் மூடியற்ற முகம்.
- ஆத்மவலு தரும் அழுத்தமான வரவு.
- ஜீவியம் என்ற புலனில் ஆழ்ந்து அகன்ற பள்ளம்.
- வேகத்தின் தீவிரம் தூய்மையாகப் பரவியது,
- ஒரு குரல் எழுப்பிய மூலத்தின் பிரம்மம்.
- வன்மையான காவியம் சுதந்திரமான இனிமை பெற்றது,
- ஆனந்தம் பயங்கரமாகிப் பெற்ற அழகு.
******
ஸ்ரீ அரவிந்த சுடர் சிந்தனைக்கு உரிமையில்லாத நேரம், மனம் ஓய்தல் ஒழிதலில்லாமல் எதிர்பார்க்கிறது. வெளிவர முயலும் எண்ணம் உணர்வால் உந்தப்படும்பொழுது மனம் எதிர்பார்க்கும். உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும். |
****
- Login to post comments