Skip to Content

12. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - உலகில் புதிய வசதிகள் வருகின்றன. பலர் பயன்படுத்திப் பலன் பெறுகின்றனர். சிலர் முன்வருவதில்லை. சில விஷயங்களைப் பலரும் புறக்கணிக்கிறார்கள். சில விஷயங்களை – T.V. போன்றவற்றை - எவரும் புறக்கணிப்பதில்லை. இவற்றையெல்லாம் கடந்த நிலையில் அன்னை ஆன்மீக வசதியைக் கொண்டு வந்துள்ளார். அது இவற்றையெல்லாம் உட்கொண்டது. கடந்தது மாறும். அனைவருக்கும் உரியது அது. அதைப் பெற வேண்டும், அனைவரும் பெறவேண்டும் என்பது பல்வேறு வழியாகக் கூறுகிறேன்.

தம்பி - உலகத்தில் வந்துள்ள புதிய வசதிகள் கண்ணுக்குத் தெரிகின்றன. அன்னை அளிப்பது புரியவில்லை. பழைய காலத்து மனிதனுக்கு இக்காலத்து வசதி போன்றது இக்காலத்து மனிதனுக்கு அன்னை அளிப்பது.

அண்ணன் - கால்நடையாகப் போனவன் காரில் போவதுபோன்ற மாற்றம் இன்று அன்னை காரில் போகும் மனிதனுக்கு அளிப்பது. பக்தர்கட்கே புரியவில்லை என்றால் மற்றவர்கட்கு எப்படிப் புரியும்? நாம் பேசுவது மனம், வாழ்வைப் பொருத்தது என்பதால் 1 to 9 என்ற அளவீட்டில் 3 to 6 எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

 
மனம்
1
2
3
தத்துவ ஞானி
கவிஞர்
திறம்பட வாழ்பவர்
 
உணர்வு
4
5
6
மனிதர்களைப் புரிந்து கொள்பவர்
தலைவன்
தொண்டன்
 
உடல்
7
8
9
கைவேலை செய்பவன்
கூலிவேலை செய்பவன்
ஜடம்

பொதுவாகச் சொன்னால் மனிதரை 9 கட்டங்களில் கணிக்கலாம். அவர்களை மேற்கண்டவாறு இங்கு குறிப்பிட்டுள்ளேன். நாம் வாழ்வை மட்டும் கருதுவதால் 3 முதல் 6 வரை உள்ள நிலைகளையே முக்கியமாகக் கருத வேண்டும். அவை 4 கட்டங்கள். ஒவ்வொன்றையும் இரு பகுதிகளாகக் கருதினால் 8 கட்டங்களாகும். அன்னையை அழைக்கும்போது இந்த எட்டு கட்டங்களை வரிசையாகக் கருதினால் அழைப்பின் ஆழம் அதிகமானால் பலன் அதிகரிக்கும். எந்தக் கட்டத்தில் நம் பிரார்த்தனை பலிக்கிறதோ அதற்கு உட்பட்ட எல்லாப் பிரார்த்தனைகளும் நமக்குப் பலிக்கும் தகுதியுண்டு என்று நாம் அறியலாம். 9ஆம் கட்டம் உடல், ஜடம் என்றேன். டாக்டர் கைவிட்ட பிரார்த்தனை பலித்தால் நம் பிரார்த்தனை 9ஆம் கட்டத்தில் பலிக்கிறது. உலகில் ஒரு மருந்தில்லை என்ற வியாதி பிரார்த்தனையால் தீருகிறது எனப் பொருள். 9ஆம் கட்டத்தை மேற்பகுதி, கீழ்ப்பகுதி எனப் பிரித்தால் ஜாதகம் கைவிட்ட நிலை கீழ்ப் பகுதியாகும். அப்படி ஒரு பிரார்த்தனை பலித்தால் அவருக்குப் பலிக்காத பிரார்த்தனையேயில்லை என்று புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் 9ஆம் கட்டம் ஜாதகம் என்பதைக் கடந்த நிலை உலகில் இல்லை. அதேபோல் 3, 4, 5, 6 நிலைகளை மேற்பகுதி (consciousness), கீழ்ப்பகுதி (substance) எனப் பிரித்து அவற்றிற்குரிய பிரார்த்தனைகளைக் கருதுவோம்.

3 மேற்பகுதி - 3 என்பது மனம். செயலைத் திறனாகச் செய்யும் மனம். முடிவு எடுப்பது. நாம் ஒருவரிடம் போய் அவருடைய முடிவை மாற்றிச் செயல்படச் சொல்வது எளிதன்று. அதுவும் மேலதிகாரி, நமக்குப் பெரியவர், பணம் உள்ளவர், ஊரில் முக்கியஸ்தர், பதவியிலுள்ளவர் முடிவு, முடிவானதே. அது பிரார்த்தனைக்கு மாறுகிறது எனில் நம் வாழ்வில் எவர் முடிவும் நமக்கு நிகரில்லை. நம் முடிவே, முடிவு. அதாவது அன்னை சட்டப்படி நாம் எடுக்கும் முடிவுக்கு நம் வாழ்வில் எதிர் இல்லை எனப் பொருள்.

3 கீழ்ப்பகுதி - மேற் பகுதியை decision என்றால் கீழ்ப்பகுதியை determination எனலாம். ஆழ்ந்த முடிவு எனலாம். 3 வருஷத்திற்கு முன் டிரான்ஸ்பர் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி நமக்கு முதல் வருஷம் டிரான்ஸ்பர் போடுவது இம்முடிவு பிரார்த்தனையாக மாறுவது. மேற்பகுதியை விட கீழ்ப்பகுதி வலுவானது.

4 மேற்பகுதி - 4 என்பது vital mind உணர்வுக்குரிய மனம். பொதுவாக வக்கிரமாக இருக்கும். பிறரை எளிதில் அறியும் திறனுடையது. உதாரணமாக ஒருவர் எவரையுமே பாராட்டாதவர், நம்மை சதா மட்டம் தட்டிப் பேசுபவர் எனில் அவர் வாயால் நம்மைப் பாராட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் அருள் வக்கிரத்தை மாற்றிவிட்டது எனப் பொருள்.

4 கீழ்ப்பகுதி - இதுவும் vital mind. ஆனால் வலிமையுள்ளது. அடாவடியாகவே பணம் சம்பாதிப்பவனுடைய நிலையிது. விவரம் தெரியாமல் அவனிடம் நாம் பணம் கொடுத்துவிட்டால் ஊரில் அனைவரும் இனி அது வாராது என்பார்கள். அவர்கள் கூறுவது உண்மை. அது பிரார்த்தனையால் வந்தால் அடாவடிக்காரனும் அருளுக்குக் கட்டுப்படுகிறான் எனப் பொருள்.

5 மேற்பகுதி - இதுவும் vital. ஆனால் உணர்வு மையம். இங்குள்ளவர் எவருக்கும் தாமே கட்டுப்படமாட்டார்கள். தெளிவாக இருப்பார்கள். அவர்கட்குச் சுதந்திரம் உள்ள இடத்தில், நியாயம், நல்லது, பரிதாபத்திற்கு இணங்கமாட்டார்கள். நீ கெட்டுப் போக ஒருவர் வேலை செய்தால், கெட்டுப் போன பின் கைதட்டிச் சிரிக்கலாம் என இருந்தால், பிரார்த்தனையால் அவரே உனக்கு உதவ முற்பட்டால், அது பெரிய விஷயம்.

5 கீழ்ப்பகுதி - மேற்பட்டவர்கள் தீர்மானமாக இருக்கக் கூடிய இடம் இது. "மனிதன் என்றால் வேலை செய்யக்கூடாது" என்ற லட்சியத்தை மேற்கொண்டவர் ஒருவர். தாம் வேலை செய்யுமிடத்தில் இதைக் கடைப்பிடித்து வருகிறார். இவர் வேறு வேலையை ஏற்று தாமாகவே முன் வந்து எவரும் உழைக்காததைப் போல் தான் உழைத்து 100 பேரை அதுபோல் வேலை வாங்கினார். அது அருளின் செயல்.

6 மேற்பகுதி - அடாவடிக்காரன் ஒருவனிடம் பிரார்த்தனை பலிப்பதைப்போல் பலரிடமும் (ஒருவர் தவறாமல்) ஒரு ஸ்தாபனத்தில் ஒருவருக்குப் பலித்தது. அடாவடித்தனம் வணங்குகிறது.

6 கீழ்ப்பகுதி - உலகில் நல்லது செய்பவனுக்கு விருதுண்டு. தவறு செய்பவனுக்கில்லை. தவறு செய்பவனின் தவறு உலகப் பிரசித்தியான பின், அதுவும் எழுத்தில் வந்து வெளியான பின் (gone on record) அவருக்கு உலகப் பரிசு பிரார்த்தனையால் வருகிறது எனில், அருளின் சக்திக்கு உட்படாததே இல்லை எனப்படும்.

3 முதல் 6 வரை மனம், உணர்வுள்ள பகுதிகள். வாழ்வு இதற்குட்பட்டது, இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் காணாத அன்பரில்லை. இவற்றிற்கு மீறிய வாழ்க்கைப் பிரச்சினையில்லை. நான் முன்னே கூறிய முன்னேற்றங்கள் இந்த 3 - 6 நிலைகளுக்குட்பட்டவை என்பதால் அதுபோன்ற முன்னேற்றங்களை பிரார்த்தனையால் பெறலாம், பெற முடியவில்லை எனில் முயற்சி சரியில்லை, போதாது எனப்படும்.

நல்லதும், கெட்டதும் :

தம்பி - நல்லதிலிருந்து கெட்டது வரும். கெட்டதிலிருந்து நல்லது வரும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதற்கு விளக்கம் தரவேண்டும்.

அண்ணன்- இவை தத்துவார்த்தமான கருத்துகள். அன்றாட வாழ்வில் பயன்படக் கூடியவற்றைக் கருதுதல் நல்லது. பொதுவாக, போர் கெட்டது. எல்லா ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதும் போருக்காக. போர் முடிந்தவுடன் அவை வெளிவந்து ஒரு புரட்சியை ஏற்படுத்திவிடுகின்றன. 1950க்குப் பின் உலகம் அளவு கடந்து முன்னேறியதற்கு இரண்டாம் உலகப் போரே காரணமாகும். இன்று உலகை ஆட்டி வைக்கும் கம்ப்யூட்டர் போரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கெட்டதிலிருந்து நல்லது வந்ததற்கு உதாரணம் இது. 1848இல் காரல்மார்க்ஸ் கம்யூனிசத் தத்துவத்தை உலகுக்கு அறிவித்தார். அதன் முக்கிய கருத்துகள்,

  1. நாட்டில் சர்க்கார் (state must wither away) தானே மறைய வேண்டும்.
  2. உழைப்புக்குத் தகுந்த ஊதியம் முதலிலும், தேவைக்குத் தகுந்த ஊதியம் முடிவிலும் சர்க்கார் மக்களுக்கு அளிக்க வேண்டும்.

"இன்று உலகை ஆளும் இரு கொள்கைகள் கத்தோலிக்க மதம், கம்யூனிசம்'' என அன்று அன்னை கூறினார். 1917இல் லெனின் கம்யூனிசக் கொள்கையை ஏற்று புரட்சி செய்து ஜார் மன்னனைக் கவிழ்த்தார். 70 ஆண்டுகட்குப் பின் ரஷ்யா கண்டதென்ன?

  1. நாட்டில் சர்க்கார் (police govt.)போலீஸ் ராஜ்யம் நடத்துகிறது.
  2. தொழிலாளிகட்காக ஏற்பட்ட சர்க்காரும், நாடும் முதலாளித்துவ நாட்டு தொழிலாளிகளுக்குள்ள சம்பளம் கொடுக்க முடியவில்லை.

ரஷ்யா கம்யூனிசத்திலிருந்து மீண்டது. நல்லதிலிருந்து கெட்டது புறப்படுவதற்கு இது உதாரணம்.

உலகப் பிரசித்தி பெற்ற நாவல் ஒன்றில் ஒரு டிராமா வருகிறது. 200 ஆண்டுகட்குமுன் எழுதியதால் அன்று பெண்கள் நடிப்பதில்லை. ஆண்கள் பெண் வேடம் தாங்கி நடிப்பார்கள். பெண்கள் நடித்தால் கணவனுடன் நடிப்பார்கள். அந்த நாடகத்தில் கணவன், கதாநாயகியின் காதலனாக வருகிறான்.

கதையில் அவள் அவனைக் கத்தியால் குத்திக் கொன்று விடுகிறாள். டிராமாவில் குத்துவதாக நடிப்பது வழக்கம். ஒரு நாள் கதாநாயகி உண்மையாகவே அவனைக் குத்திவிடுகிறாள். அவன் (கணவன்) இறந்து விடுகிறான். கேஸ் கோர்ட்டுக்குப் போயிற்று. கால் இடறியதால் தவறி குத்திவிட்டேன் என்றாள் நடிகை. அவள் விடுதலை செய்யப்பட்டாள். அவள் சிறந்த அழகி. மீண்டும் நாடகத்தில் நடித்தாள். அவள் குத்திய அன்று அவளுக்கு சிகிச்சை செய்த டாக்டர் அவளை மணக்க விரும்பி வருகிறான். அவள் முன் மண்டியிட்டு "என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா?'' எனக் கேட்கிறான். அவனுக்கு பதில் சொல்லாமல் அவள் கத்திக் குத்து நிகழ்ந்த நாளைப் பற்றிப் பேசுகிறாள். "நான் கைதவறி என் கணவனை குத்தவில்லை. வேண்டுமென்றே குத்திக் கொன்றேன்'' என்று கூறுகிறாள். மணக்க வந்த டாக்டர் பேச்சிழந்தான். திகைத்திருந்தபொழுது மேலும் கூறுகிறாள், "என் கணவருக்கு என் மீது அளவு கடந்த பிரியம். அது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு கணவன் என்ற கருத்தே ஒவ்வாது'' என்றாள்.

மனைவி மீது அளவுகடந்த பாசம் நல்லது. அதன் விளைவு உயிர் போயிற்று. இது தத்துவ சாரம். நல்லதிலிருந்து கெட்டது எழுகிறது.

சிறியதும், பெரியதும் :

(Finite & Infinite)

தம்பி - நீங்கள் சொல்வனவெல்லாம் சுருக்கமாக "நாம் அன்னை அன்பர் என்பதை அறியவில்லை'' எனக் கூறலாம்.

அண்ணன் - பெட்டிக்கடை வியாபாரி, கண்டக்டர், தெரு மூலையில் பஜ்ஜிக்கு பேர் போன அய்யர், ஆபீஸ் பியூன், வீட்டு வேலை செய்பவர் பிள்ளைகள், இன்று படித்து பட்டம் பெற்று, பேராசிரியர், கலெக்டர், துணைவேந்தர், பாங்க் ஏஜெண்ட், ங.க.ஆ., ஙட, மந்திரி, ஒஆந ஆபீசராக வருவதைக் காண்கிறோம். இந்தப் புதுப் பதவி வந்த பிறகு அவர்கள் பழைய நிலை மாறி பெருஞ் செல்வாக்கு வருகிறது. அதை அறியாதவருண்டா? அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளாதவருண்டா? அன்னையை ஏற்பது இத்தனையையும் கடந்த நிலை என்று அறிபவருண்டா? அதற்கேற்றாற்போல் குணத்தை மாற்றிக் கொள்பவருண்டா?

தம்பி - அன்னையை ஏற்பது எனில் என்ன என்ற கேள்வி எழுகிறது?

அண்ணன்- மகாத்மா காந்திஜியை சபர்மதி ஆசிரமத்தில் தரிசித்தவர் பலர். அவருள் ஒரு சிலர் வீட்டுக்கு வந்து மனம் மாறி தம்மையும், தம் வாழ்வையும் காங்கிரஸுக்கே சமர்ப்பணம் செய்தனர். அப்படி எழுந்ததே காங்கிரஸ் தலைமை. அன்னையை அது போல் ஏற்பதே ஏற்பது. அது சிறியது பெரியதாக உதவும் (finite to infinite).

அன்னையை முதலில் தரிசித்தாலும், சமாதி தரிசனம் செய்தாலும், அவர் படத்தைக் கண்டாலும், அவரைப் பற்றிய புத்தகத்தைப் படித்தாலும்,

நம்முள் பேரமைதி தோன்றி, ஜீவன்

முழுவதும் பரவி இனி நாம்

அன்னைக்கேயுரியவன்

என்ற உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வைப் போற்றி சிதறாமல் மனதால் வளர்ப்பது அன்னையை ஏற்பதாகும். அப்படி ஏற்றால் finite man சிறிய மனிதன் infinite soul அனந்தமான ஆத்மாவாகிறான். அவனால் அதன்பின் அன்னைக்கு ஒவ்வாதவற்றைச் செய்ய முடியாது.

தம்பி - அது பக்தி, நம்பிக்கை. அவனால் IAS ஆபீசர், பாங்க் ஏஜெண்ட், MLA செய்ய முடியாததைச் செய்ய முடியும்.

அண்ணன் - அன்னை அந்நிலையை அனைவருக்கும் தருகிறார். அதை நீடித்துப் பெற்றவர் குறைவு. அந்த பக்தர் நாட்டில் எலக்ஷன் போக்கை மாற்றுவார். வானிலை அறிக்கைக்கு மாறாக மழை பொழிவதையோ, புயலைத் தடுப்பதையோ அவரால் செய்ய முடியும். நாட்டுச் சட்டங்கள் அவர் மனநிலைக்கேற்ப மாறும். சின்ன புத்தி எழுந்தால் அந்த சக்தி விலகி மீண்டும் அவர் சிறிய மனிதனாகி விடுவார்.

தம்பி - சின்ன புத்தியுள்ளவரை ஆதரித்தாலும் அன்னை சக்தி போகும்.

அண்ணன் - அவர் குடும்பம் தொடர்ந்து உயரும். நாட்டில் முதன்மை பெறும். இது தவறாது எல்லா அன்பர்கட்கும் அன்னை அளிப்பது. பெறுபவர், நீடித்துப் போற்றுபவர் குறைவு.

தம்பி - இல்லை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே.

அண்ணன் - மந்திரி, MP, IAS ஆபீசர், பெருந்தொழில் அதிபர் எதையும் சாதிக்கலாம். அவர்களை மீறியது உண்டு. ஆயிரம் உண்டு. அன்பர்கள் அவர்கள் கைவிட்டதைச் சாதிப்பார்கள். அவர்கள் செய்வதையும் தேவைப்படும் பொழுது, அவர்களால் முடியும் என்ற உண்மை இன்று பலரும் அறியாதது.

தம்பி - அருளாலும், அதைப் பெறும் நல்லெண்ணத்தாலும் இந்த மாற்றம் எழுகிறதா?

அண்ணன் - நல்லெண்ணம் முக்கியம். அன்பன் எண்ணத்தையே கடந்து வரவேண்டும். என்றாலும் உபரி நல்லெண்ணமில்லாமல் உண்மை அன்பனாக ஆக முடியாது.

தம்பி - இவற்றையெல்லாம் கதையாக எழுதினால் தான் புரியும். கட்டுரை விளங்காது.

அண்ணன் - இது போன்ற கதை எழுதும் திறனுள்ள அன்பரில்லையே.

தம்பி - சேவை, அரசியல், பொது வாழ்வில் உள்ள அன்பர்கட்குச் சொல்லக் கூடியது ஏதேனும் உண்டா?

அண்ணன் - அது போன்ற அன்பர்கள் அனுபவம் நமக்குத் தெரிந்தவற்றை யோசனை செய்து பார்த்தால், நாம் சொல்லக்கூடிய சட்டங்கள் விளங்கும்.

தம்பி - அந்த அனுபவங்களை மனதில் கொண்டுதான் கேட்கிறேன்.

அண்ணன் - சுருக்கமாகச் சில சட்டங்களை - பொதுவான அன்னை சட்டங்களைச் - சொல்லலாம்.

  1. தகுதியும், திறமையுமிருந்தால் மற்றவர்கள் போட்டியிட்டுப் பெறுவது அன்பர்கட்கு போட்டியில்லாமல் கிடைக்கும். தேடியும் வரும்.
  2. அப்படி வரும்பொழுது அன்பர் எதிர்பார்ப்பதைவிட ஓரிரு நிலைகள் உயர்வாக வரும்.
  3. அன்பராகவே தடம் மாறாவிட்டால், தொடர்ந்த உயர்வு தேடி வரும்.

தம்பி - நம் அனுபவங்கள் இதைத்தான் கூறுகின்றன.

  • காவல்காரன் முனிசிபல் கௌன்சிலுக்கு நின்றான்.
  • ஒரு முறையும் முனிசிபல் கௌன்சிலில் நிற்க முடியாதவருக்குக் கௌன்சிலர் பதவி கிடைத்தது.
  • எளிய தொண்டர் மத்திய மந்திரியானார். பிறகு மாநில முதலமைச்சரானார்.
  • MP சீட் கேட்டவருக்கு மந்திரிப் பதவி கிடைத்தது.
  • காரசாரமாகப் பேசிய MPயை மந்திரியாக்கினார் பிரதமர். பிறகு நெடுநாள் கவர்னராக இருந்தார்.
  • புதியதாக ஜில்லா ஸ்தாபனம் அமைத்தபொழுது தற்செயலாகச் சமாதி தரிசனம் செய்து போனவர் ஜுனியரானபோதும் தலைமைப் பதவியை அளித்தனர்.
  • கமிட்டியில் உறுப்பினராகவுமில்லாதவரை செக்ரடரியாக்கினார். அதேபோல் மற்றொருவரை தலைவராக்கினார். அவர் 20 வருஷமாகத் தலைவர் பதவியிலேயேயிருக்கிறார்.
  • ஒரு துறையில் பரிசு இல்லை என்றால், அதைப் புதியதாக உற்பத்தி செய்து கொடுப்பார்கள்.
  • விருது பெற்றவர் எனக்கு இந்த விருதை எப்படிக் கொடுத்தனர் என வியக்கும்படியும் வரும்.
  • சர்வதேச ஸ்தாபனக் கூட்டத்தில் உதவி செய்யப் போன அன்பருக்கு உறுப்பினர் பதவியும் கேளாமல் வந்த நிகழ்ச்சியுண்டு.
  • கடும் போட்டியுள்ள பதவிக்குப் போட்டியிடுபவர் அனைவரும் சேர்ந்து அன்பரைப் போட்டி இல்லாமலும் தேர்ந்தெடுத்தனர்.
  • நாட்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முதன்மையான கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தபொழுது மூன்றாம் நிலையிலுள்ளவர் அன்பர் ஆதரவு பெற்றவர். பெரும் மெஜாரிட்டியுடன் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • புதிய தொண்டர் நேரடியாகத் தலைவராவது அன்பர் அனுபவம்.

 இதுபோல் அன்பர்கள் பெறுவதில் அன்னை அருளை சற்று விளக்க முடியுமா?

- தொடரும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
விஸ்வாசத்தை இரு வகைகளாகச் சொல்லி இரண்டையும் போற்றுகிறோம். ஒன்று ஒருவருக்கு மட்டும், மற்றது அனைவருக்கும் உரியது. எல்லாக் குழந்தைகளிடமும் அன்பு செலுத்துவது ஒரு வகை. மனைவி மீது மட்டும் பிரியமாக இருப்பது அடுத்த வகை.
 
பொதுவான அன்பு பெரியது. குறிப்பான அன்பு சிறப்பானது.



book | by Dr. Radut