Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

 

கர்மயோகி

131. தீராத வியாதி நெடுநாளிருந்து தானே மறைவது.

  • ஓடீமா (கால்வீக்கம்) யானைக்கால், தோல் வறண்டது, நீர் சுருக்கு, மாதாந்திர மயக்கம், கண் பூ போன்றவை அப்படி மறைந்துள்ளன.
  • ‘மனிதன் தன் வியாதி குணமாவதை விரும்பமாட்டான்’ என்ற ஆன்மிக உண்மையை மனம் ஏற்காது.
  • மனமும் ஆன்மாவும் நம் பிரச்சனைகளை ஆழ்ந்து விரும்புகின்றன என்பது பகவான் கூறியது.
  • மனம் ஒரு வியாதியை மறந்தால் அருள் அதை அழிக்க ஆரம்பிக்கும்.
  • அப்படி அது மறைந்தால் அவர் அருளைத் தன்னையறியாமல் பெறுவதால் அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.
  • தத்துவப்படி அனைவருக்கும் உரியது யோகம். சில அடையாளங்கள் அதை எடுத்துக் கூறுகின்றன.
  • வாழ்வில் அனைத்தும் அடையாளமே, அனைவருக்கும் யோகமுண்டு.
  • அரசியலில் ஜனாதிபதி பதவி அனைவருக்கும் உண்டு.
  • Mஃஅ, Mக பதவி நாடி வருவது அவருக்கு அது பலிக்கும் அடையாளங்கள்.
  • சிறுவர்கள் பலர் விளையாடுமிடங்களில் ஒருவன் தலைமை வகிப்பான். அவன் எதிர்காலத் தலைவன்.
  • தலைமை, திறமை, தெளிவு, பணம், கட்டுப்பாடு போன்றவை எதிர்காலத்தில் வரும் ஏற்றத்தை எடுத்துக்காட்டும்.
  • அடக்கம் பெரும் தலைமைக்கு அடையாளம்.
  • பிறந்தவுடன் ஜாதகம் எதிர்காலத்தில் ஜாதகன் வைஸ்ராயாக வருவான் உலகத் தலைவனாவான், பிரதமராவான் எனக் கூறும்.
  • அகால மரணம் அன்பருக்கில்லை. ஜாதகம் கூறினாலும் இல்லை. மரணத்திற்கு எதிரான அன்னை கருத்தை - கர்மம் அழியும் - அன்பர் ஏற்றால், வாழ்வு குறுகிய நிலையிலிருந்து விரிவுபடும் கருத்தை ஏற்றால் அகால மரணம் மறையும். காலமே அன்பருக்கில்லை எனில் அகாலம் அவருக்கில்லை. பெற்றோர், பிள்ளைகள், தம்பதிகளும் அவரைக் காப்பாற்ற முடியும். வழக்கமான அசிரத்தை கர்மத்தை செயல்படச் செய்யும். அதற்கெதிரான அன்புடைய கவனம் அதற்கு மாற்று. அன்பர்கள் தங்கள் வாழ்வையே அப்படிக் கவனிப்பதில்லை. முதல் மார்க் வாங்கக்கூடிய பையன் 60 மார்க்குடன் முடிப்பதை அவனே அறியான். அவன் முயன்று முதல் மார்க் வாங்கினால் ஆயுள் அவனுக்கு நீடிக்கும். 3 முறை பிரம்மாண்ட வாய்ப்பை இழந்து உள்ளதையும் இழந்தவருக்கு மீண்டும் அதை பெற்றுத்தந்த பின்னும் உதவியவருக்கு உபத்திரவம் கொடுப்பது மனித சுபாவம். நாய் பேச விரும்பினால் குரைக்கும். நாய்க்குப் பேச வராது. மனிதனுக்கு நன்றி எழுவதில்லை.

********

ஜீவிய மணி

மனிதன் பணத்தை நம்பி வாழ்கிறான். அல்லது செல்வாக்கை நம்புகிறான். அல்லது சொந்தத் திறமையை நம்பிச் செயல்படுகிறான். நம் உயர்ந்த நம்பிக்கை எதில் இருக்கிறதோ, அதற்குப் பதிலாக அன்னையை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து அன்னையை நம்புவதைக் கற்றுக்கொண்டால் யோகம் பலிக்க உதவும். வாழ்க்கை பலிக்கவும் அது மூல மந்திரம்.

*********



book | by Dr. Radut