03. சாவித்ரி
சாவித்ரி
Page 157: Waking and sleep lay locked in mutual arms
விழிப்பும் தூக்கமும் கட்டியணைத்த கருணை
- ஆனந்தமும், வலியும் விவரமில்லாமல் வேறு வழியில்லாமல் வந்தன
- பிரபஞ்ச ஆத்மா @லசாக எழுந்து உடலில் புல்லரித்து நடுங்கிற்று
- அழ முடியாமல், அசையவும் முடியாமல் வாழ்வின் வலிமை எழுந்தது
- ஆழ்ந்த ஆனந்தம் அழகாகப் பாடிப் பரிமளித்தது
- பண்பு எழுப்பும் பவித்திரமான உணர்வைச் சொல்ல முடியவில்லை
- நம்மையறியாத உலகின் இதயம் இன்பமாகத் துடிக்கிறது
- மந்திர மயக்கத்துள் மறைந்தெழுந்து அசைகிறது
- புரியாத நிலையற்ற புல்லரிப்பு, தடுமாறிப் போகும் தாளம்
- மறைந்த நெற்றிக்கண்ணின் மங்கிய மறை பொருள்
- சிறு குழவி தன்னையறிந்து வளர்ந்தது, ஜனனம் பிறந்தது
- தெய்வம் விழித்தது, கனவில் லயித்தது
- தாளிட்ட கதவுகள் திறக்க மறுத்தன
- பார்க்கும் ஊனக் கண்ணுக்குப் பார்வையற்ற நிலை ஏற்பட்டு
- உருவமும், செயலும் உணர்த்தின. சிறைப்பட்ட தெய்வம் மறைந்தது
- வளரும் திறனின் சூட்சும சக்தியுள், அதன் நாடியில் வாழ்வு ஒளிந்தது
- ஜீவியம் பெற்ற ஒடுங்கிய ஊமைப் புலனின் தாள வரிசை
- எண்ணத்தை அறிய முடியாத அடங்கிய மனம்
- ஆத்மா வாழ்வை ஜடமாக ஏற்றது
- குரலெழுப்ப முடியவில்லை, அசைய அச்சப்பட்டது
- உலகின் சக்தி உள்ளே ஓடியது, உயிருள்ள சக்தி உணர்ச்சியாயிற்று
- காலை மண்ணில் ஊன்றி கடுமையாகப் பற்றியது
- தென்றலென எழுந்த சக்திக் கதிர்களின் ஊமை அதிர்ச்சி புல்லரித்தது
- அணைக்கும் ஆசையென அன்பாகப் பற்றின
- சூரிய ஜோதிக்கு ஏங்கும் வலிமையின் எழில்
- மூச்சும், உயிரும் தழுவும் இனிமையை உணர முடியவில்லை
- அழகும், வண்ணமும் பொருந்திய சத்தியம் கனவாக வந்து, கவர்ந்து மறைந்தது
- முடிவாக, மந்திரக் கட்டுண்ட மாபெரும் மலை எட்டிப் பார்த்தது
- அசைந்து, அதிர்ந்து, ஆசைப்பட்டு அது மனத்தைத் தேடியது
- அதன்பின் புலப்பட்டது புலன், எண்ணம் எட்டிப் பார்த்தது
- மறுக்கும் அச்சை ஏற்கப் பணித்தது
- மந்திரமாயம் செதுக்கப்பட்ட ரூபத்தின் விழிப்பு
- சமாதியிலிழந்த ஜீவன் சுருதி கூட்டிச் சட்டென எழுந்தது
- ஒளிமயமான அலையின் அசைவு மூளையையும், நரம்பையும் சுண்டியிழுத்தது
- ஆன்மாவின் அடையாளம் ஜடத்தில் விழித்தது
- உடலின் அற்புதம் ஜோதியாக எழுந்தது
*******
- Login to post comments