06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
உழுகிற நாளில் உள்ளே போய் அறுக்கிற நாளில் வெளியே வந்தால் அதிர்ஷ்டம் உள்ளும் புறமும் நிறையும்.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.
நினைவிருந்தால் நிதர்சனம்.
அழைப்பிருந்தால் அருள்மயமான அதிர்ஷ்டம். - சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது.
சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சூட்டை அழிக்கும்.
- குறையச் சொல்லி நிறைய அள.
குறையச் சொல்வதும் நிறைவு.
நிறையச் சொன்னாலும் பெரு நிறைவு. - அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி. ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.
பெண்சாதியைப் பெண் தெய்வமாக அறிந்தால், அரைக் காசெல்லாம் ஆயிரம் பொன்னாகும்.
தொடரும்....
******
- Login to post comments