05. பூரணயோகம் - முதல் வாயில்கள்
பூரணயோகம் - முதல் வாயில்கள்
(சென்ற இதழின் தொடர்ச்சி.....)
கர்மயோகி
53. எது நடக்கலாம் என்பதை அறிவதுடன், எது நடக்கும் என அறியும் திறமை.
- என்ன நடக்கலாம் எனப் பலரும் கூற முடியும்.
- என்ன நடக்கும் என்பதை அறுதியிட்டுத் திட்டவட்டமாக எவராலும் கூற முடியாது.
- அதற்கு முதற் காரணம், நாம் கூறுவதால் அது மாறக் கூடியது.
- வீட்டிலிருந்து புறப்பட்டவர் வருகிறேன் எனப் போனில் சொன்னால் அவரை எதிர்பார்க்கலாம்.
- 99 பங்கு அவர் சொன்னபடி வருவார்.
- 1 பங்கு ஏதோ காரணத்தால் வீட்டிலிருந்து புறப்பட்டபின் மனம் மாறி வராமலிருக்கலாம்.
- அன்பர் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
- மைத்துனிக்குப் பார்த்த வரன் வாரம் ஒரு முறை அவரை வந்து சந்திப்பது வழக்கம்.
- அவர் கீழே படியேறுவதை அன்பர் கண்டார்.
- மனைவியை டிபன் செய்யச் சொல்லிக் கொண்டேயிறங்கி வந்தார்.
- வந்தவர் இளைஞரை எதிர்பார்த்து ஏமாந்தார்.
- தெருவில் வந்து பார்த்தார் காணவில்லை.
- எதிர்பார்த்தால் எதிர்பார்ப்பது நிகழ்ச்சி நடப்பதைத் தடுக்கும்.
- நடக்கக்கூடியதை மனம் கூறும்.
- தடையில்லாமல், தவிர்க்க முடியாதபடி நடக்கக் கூடியதைக் கூறுவது சத்தியஜீவியம்.
- காரியங்கள் நடைபெறுமுன் சூட்சும உலகில் உருவாகின்றன.
- சத்தியஜீவியம் அதைக் காண்கிறது. அதனால் அதைத் திட்டவட்டமாகக் கூற முடிகிறது.
- சில சமயம் என்ன நடக்கும் எனத் தெரிந்து, சொல்லாமலிருந்தால், நடக்கும்.
- வெளிநாட்டு அன்பர் அடுத்த 5 நிமிஷத்தில் போனில் கூப்பிடுவார் எனக் கூறியது அப்படி ஒரு முறை நடந்தது.
- எந்த அன்பருக்கு இதுபோல் எதிர்காலம் தெரிகிறதோ, அவருக்கு யோகம் பலிக்கும்.
- ஒவ்வொரு முறையும் பலிக்க வேண்டுவதில்லை. ஒரு சில சமயம் பலித்தாலும் நடக்கும்.
- அன்பர் புதுவை வரும் வழியில் நின்று கொண்டிருந்த நண்பரைக் கண்டு நின்றார்.
- அவருடன் நண்பர் ஒருவரிருந்தார்.
- பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலிருப்பதால் எங்கு போகிறீர்கள் என விசாரித்தார்.
- ஆசிரமம் போவதாகக் கூறினார்கள். நண்பருக்கு அதுவே முதல் முறை.
- "இந்த நாளைக் குறித்து வைத்து அடுத்த ஆண்டு நினைவுபடுத்தினால் உங்கள் நிலை இரு மடங்காகியிருக்கும்'' என்று அன்பர் கூறினார்.
- அடுத்த ஆண்டு இருவரும் அதே தினம் அன்பரைப் பார்க்க வந்தனர்.
- இம்முறை புதியதாக வந்த நண்பர் பேசினார்.
"எனக்கு ஷாப், லுங்கி வியாபாரம், நிலம், சாயக்கிடங்கு, வட்டிக்கடையென 9 ஸ்தாபனங்கள் உள்ளன. அவை 9உம் சென்ற ஆண்டைவிட இரு மடங்காகின. அவை தவிர 1 ஏக்கர் தென்னந்தோப்புண்டு. அது மட்டும் மாறவில்லை, காய் திருட்டுப்போகிறது'' என்றார்.
- அன்பர் திருட்டை நிறுத்த வழி கூறினார்.
- எதிர்காலம் அனுபவமுள்ளவர்க்குப் பொதுவாகத் தெரியும்.
- அது பெரும்பாலும் நடக்கும்.
- யோகம் ஒருவருக்குப் பலிக்கும் நேரம் வந்துவிட்டால் அவருக்குத் தெரியும் எதிர்காலம் தவறாமல் பலிக்கும்.
அப்படிப்பட்டவர் வாயால் கூறியதாலேயே அது தவறாமல் நடக்கும்.
தொடரும்.....
********
ஸ்ரீ அரவிந்த சுடர் கருத்தைக் கடந்தது காவியம். சாவித்திரி ஆன்மாவின் காவியம். காலத்தைக் கடந்த கருத்தை காவியம் என்கிறோம். |
*******
- Login to post comments