ஜீவியத்தின் ஓசை
ஜீவியத்தின் ஓசை
மனிதன் காணும் நல்லது இறைவன் காணும் நல்லதாக மாற மறுக்கும்பொழுது தன் நிலையிலிருந்து தாழ்ந்து கெட்டதாக மாறும்.
வாங்கிக்கொள்ள ஆசைப்படுவதும், கொடுக்க ஆசைப்படுவதும், இரண்டுமே ஆசை என்ற அளவில் ஒன்றுதான்.
வசதியும், பிரச்சினையும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றன. பிரச்சினையற்ற வசதி ஆன்ம விளக்கம்.
மனம் மாறினால் நடந்தவை அழிந்து நடக்க வேண்டியவை உற்பத்தியாகும்.
*****
- Login to post comments