01. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- நாள் செய்வதை நல்லவர் செய்யமாட்டார்.
- சமர்ப்பணம் சாதிப்பதை நல்ல சுபமுகூர்த்தம் சாதிக்காது.
- பெண்ணென்று பிறந்துவிட்டால் பெரும்பீழை இருக்கிறது.
- அன்னை என்று வந்துவிட்டால் பேர் அருளிருக்கிறது.
- சூதும் வாதும் வேதனை செய்யும்.
- பக்தியும் நம்பிக்கையும் பரமனை வெல்லும்.
- உடையது விளம்பேல்.
- உள்ளது உலகை வெல்லும்.
- சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
- பழக்கம் பலன் தாராது.
தொடரும்....
*****
ஸ்ரீ அரவிந்த சுடர் ஒரு காரியத்தை முடிக்க அதைப் பூர்த்தி செய்யும் முழு அறிவு பயன்படுவதைவிட, அதைக் கெடுக்கக்கூடிய சக்திகளை அடக்கி, விரட்டும் திறன் பயன்படும். பூர்த்தி செய்வதைவிட, காப்பாற்றுவது முக்கியம். |
*****
- Login to post comments