Skip to Content

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - 11 வயதில் பெரிய படிப்பைக் குழந்தை பெற்றது, அது பெரிய சாதனை. This is an academic achievement. The same accomplishment in psychology is called for. இதே சாதனையை மனம் பக்குவம் பெறச் செய்தால் போதுமா? வேறு வகையாகச் சொல்ல முடியுமா?

அண்ணன் - முதற்காரியமாகக் குழந்தை சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும்.

தம்பி - அதற்கென்ன செய்வது?

அண்ணன் - குழந்தை சந்தோஷத்தை அழைக்க வேண்டும்.

தம்பி - அழைத்தால் வருமா?

அண்ணன் - வரும். சந்தோஷம் குறையும் நேரம் சந்தோஷத்தை அழைத்தால் அல்லது அன்னையை அழைத்தால் சந்தோஷம் வரும். ஏன் சந்தோஷம் குறைகிறது என ஆராய்ச்சி செய்து சந்தோஷத்திற்குண்டான அடிப்படையை ஏற்படுத்தினால் நிரந்தரமான சந்தோஷம் வரும்.

தம்பி - அவ்வளவு சுலபமா?

அண்ணன் - ஆமாம். சந்தோஷம் என்பது பல நிலைகளில் உள்ளது. நமக்கு அன்னைச் சந்தோஷம் வேண்டும். Pleasure, happiness இரண்டும் lower vitalக்குரியது. Joy higher vitalக்குரியது. Beauty மனத்திற்குரியது. Love ஆன்மாவுக்குரியது. சாப்பாடு தருவது pleasure, வெற்றி தருவது happiness, எதிரியைத் தோற்கடித்துப் பெறுவது சிறு வெற்றி, எதிரியால் புகழப்படுவது பெருவெற்றி. பிரியம் தருவது joy. இத்தனையும் Anandaவின் அம்சங்கள். ஒரு கருத்துப் புரிவது mental happiness. Silentஆகப் புரிவது higher mental happiness. Mother's joy என்பது நன்றியறிதல் ஏற்படும்பொழுது எழுவது. உலகம் இறைவனால் இயங்குகிறது என்றறிவது gratitude நன்றியறிதல். அது அன்னைச் சந்தோஷத்தைத் தரும்.

தம்பி - குழந்தையின் வாழ்வில் அன்னைச் சந்தோஷத்தை விளக்குங்கள்.

அண்ணன் - உடல் வெண்கலம் போலாவது சுலபம். பெற்றோர் படித்தவர். குழந்தைக்கே உடலைப் பற்றிய அறிவு அதிகம். அதைச் செய்து முடிக்கலாம். அது physical joy உடலுக்குரிய சந்தோஷத்தைத் தரும். அதுவே அடிப்படை. அதைச் சாதிப்பது பெரியது. அதற்குரிய சந்தோஷம் நாம் இதுவரை அறியாதது. அடுத்தாற்போல் சிறிய விஷயங்களில் நாம் திருப்திப்படுகிறோம். சந்தோஷப்படுகிறோம். Lower vital pleasure and happiness. அதைவிட உயர்ந்ததைக் குழந்தை நாட வேண்டும்.

தம்பி - அப்படி என்றால்?

அண்ணன் - சாப்பாடு முக்கியம். அதிகமாகச் சாப்பிட்டு அனுபவிப்பதைவிட ருசியாகச் சாப்பிட வேண்டும். இந்தக் குழந்தைக்கு அந்தத் குறையில்லை. ருசிக்கு அடுத்தது ரஸா. அது யோகிக்குரியது. தான் பிறரை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட தன்னை முன்னைவிட உயர்த்த வேண்டும் என அன்னை சொல்கிறார்கள்.

தம்பி - இவற்றிலெல்லாம் இந்தக் குழந்தை பெரும்பாலும் முடித்துவிட்டது.

அண்ணன் - 18 vols. பெரிதன்று. குழந்தையே படித்துவிடும். பெற்றோரும் படிக்கலாம். அல்லது joy, child, happiness என்பவை வரும் இடங்களை மட்டும் எடுத்துப் படிக்கலாம். மொத்தம் 200 அல்லது 300 பக்கங்களிருக்கும்.

தம்பி - அதுவும் குழந்தை பெரும்பகுதி பயின்றுள்ளது.

அண்ணன் - குறையானவற்றைக் கண்டு நிறைவு செய்தால் vital பூர்த்தியாகிறது. Mentalக்கு வரும்பொழுது குழந்தையின் பயிற்சியை ஆராய்ந்து, அன்னை mental happinessயைப் பற்றிக் கூறுவதைக் குழந்தை பயிலவேண்டும்.

தம்பி - அதற்கடுத்தாற்போல் 11 வயதுக் குழந்தைக்கு ஆன்மீகம் போதிக்க முடியுமா?

அண்ணன் - ஆன்மீகம் வேண்டாம். அன்னையைப் போதிக்கலாம். Mother First என குழந்தை எடுத்துக் கொண்டால், குழந்தைக்கு ஆன்மீகத் (psychic) தொடர்பு ஏற்படும். அதைத் தொடர்ந்தால் Mother's joyஇல் முடியும்.

தம்பி - அதன் பிறகு இடையறாத நினைவு வேண்டுமா?

அண்ணன் - அது இல்லாமல் Mother's joy வாராது. இதுவரை பெற்றோர் செய்துவிட்டால், குறையானவற்றை நாம் சொல்லலாம். சொல்வது எளிது, பயில்வது சிரமம்.

தம்பி - குழந்தையின் உடல் நலம் உயர்ந்து சிறு ஆசைகளை வென்று அழகையும் நன்றியறிதலையும் வெளிப்படுத்தி அன்னைச் சந்தோஷத்தைப் பெற வேண்டும்.

அண்ணன் - அதுவே சரி. நமக்குக் குழந்தை விஷயமாகச் சந்தேகம் வரும்பொழுது அன்னை எழுதியவற்றைப் பார்த்து தீர்த்துக் கொள்ள வேண்டும். Psychic educationஇல் 10 சட்டங்கள் இவற்றையே வேறு வகையாகச் சொல்கின்றன. அவை பயன்படும்.

தம்பி - இதற்கு அப்பலன் வருமா? ஏன் இதுவரை யாருக்கும் வரவில்லை?

அண்ணன் - பலருக்குப் பல அளவுகளில் பலித்துள்ளன. ஆசிரமப் பள்ளியில் படித்த குழந்தைகள் எங்குப் போனாலும் முதலாக இருக்கிறார்கள். எந்த இடத்தில் நமக்குத் திருப்தி ஏற்படுகிறதோ அதுவே லிமிட்.

தம்பி - நாம் திருப்திப்பட்டால் முடிந்துவிடும்.

அண்ணன் - ஆம். தொடர்ந்து முன்னேற்றம் வேண்டும் எனப் பாடுபடவேண்டும். இந்தக் குழந்தைக்கு எல்லாம் சாதகமாக இருக்கிறது. படிப்பில் வெற்றி. பெற்றோர் சிறப்பானவர். ஒரு பள்ளியை ஆரம்பித்து எல்லாக் குழந்தைகளையும் உலகப் பிரசித்தி பெற வைக்கலாம். எல்லா ஆசிரியர்களும், எல்லாப் பெற்றோர்களும் இந்தப் பெற்றோர் போலிருந்தால் முடியும்.

தம்பி - மீண்டும் அடுத்தாற்போல் செய்ய வேண்டியதைச் சொல்லுங்கள்.

அண்ணன் - 1) சிறப்பான உடல் நலம்.

                      2) ருசியிலிருந்து ஆன்மீக ருசியை நாட வேண்டும்.

                      3) அன்னைப் புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும்.

                      4) Mother's joy பெற வேண்டும்.

தம்பி - எந்தக் குழந்தையாலும் இது முடியுமா?

அண்ணன் - முடியும். டென்ஷன், complaint போன்ற வேண்டாத அம்சங்களிருக்கக் கூடாது. உலகப் பிரசித்தி பெற்ற இலக்கியங்களை இக்குழந்தை படிக்கிறது. அது பெரிய விஷயமல்லவா! உணர்வு பக்குவப்படும். நம்பிக்கை, பக்தி, முயற்சி ஆகியவை முழுமை பெற வேண்டும். Psychic educationஇல் உள்ள 10 சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

தம்பி - ஆன்மீகப் பக்குவம் வாராமல் எவரும் சாதிக்கலாம் என்பது நம்ப முடியவில்லை.

அண்ணன் - ஆன்மீகப் பக்குவம் என நாம் நினைப்பது மோட்சம் பெறத் தகுதி. அது ரிஷிகளுக்குத்தான் உண்டு. 1950க்கு முன் காரில் யார் போக முடியும்? அன்று யார் காரில் போக முடியாதோ அவர்கள் இன்று கார் வாங்கும் நிலையிலிருக்கிறார்கள். ஏனெனில் உலகம் மாறிவிட்டது. ஆனால் இன்றும் கார் வாங்க எல்லோராலும் முடியாது. காரில் போகாதவர் உண்டு.

தம்பி - சத்திய ஜீவிய சக்தி 1956இல் வந்துவிட்டதால் நிலைமை மாறிவிட்டதா?

அண்ணன் - இன்று வேண்டிய பக்குவமும், அன்று தேவைப்பட்ட பக்குவமும் வேறு.

தம்பி - அன்று வேண்டியது ஆன்மீகப் பக்குவம், ரிஷிகள் பெற்றது மோட்சத் தகுதி. இன்று என்ன பக்குவம் தேவை?

அண்ணன் - இன்று ஆன்மீகப் பலன் உலகுக்கு வந்துவிட்டது. அன்பர் போய் அதைக் கொண்டு வரத் தேவையில்லை. அதை அனுபவிக்க ஒரு பக்குவம் வேண்டாமா? அதுதான் நமக்குத் தேவையானது. அன்று தேவைப்பட்டது மோட்சத் தகுதி. இன்று மோட்சத் தகுதியை அன்னை அன்பர்கட்கு அளிக்கிறார். பெற்று அனுபவிக்கும் தகுதி வேண்டும்.

தம்பி - கடையில் சாமான்கள் விற்கின்றன. அவற்றைப் பெற்றுப் பயன்படுத்த ஒரு தகுதி வேண்டும் அல்லவா? அதைப்போல் அன்னை தரும் அருளைப் பெறும் தகுதி வேண்டும் என்கிறீர்களா? அன்று ஓட்டுரிமை இல்லாதவர்க்கு இன்று MLA, மந்திரியாகும் வாய்ப்புண்டு. அதைப் பெறும் தகுதி வேண்டுமல்லவா?

அண்ணன் - அந்தத் தகுதி பெரும்பாலான இந்தியர்கட்குண்டு. அத்துடன் பொய், சூது, வாது, கலந்துள்ளது. பொய் சொல்லக் கூடாது எனில் அதில் தேறுவது குறைவு. அடக்கம் வேண்டும் எனில் கொஞ்சம் பேரே தேறுவார். இன்று தேவையான பக்குவம் எளிது. அன்று தேவையான பக்குவம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போன்றது. இன்று அமெரிக்கா போக வர பணமிருந்தால் போகலாம். இரண்டும் மலையும் மடுவும் போன்றன.

தம்பி - எந்தக் குழந்தையும் உலகப் பிரசித்தி பெறலாம் எனில் பெற்றோர் அன்னை பக்தருக்குரிய இலட்சணத்துடனிருந்தால் போதுமா?

அண்ணன் - அன்பர்கட்குரிய தகுதிக்கு அவர்கள் பெறக் கூடியன ஏராளம். அது நம்ப முடிவதில்லை. குழந்தை விஷயம் அவற்றுள் ஒன்று. இவற்றையெல்லாம் சொன்னால், "யாராவது இதுவரை செய்திருக்கிறார்களா?'' எனக் கேட்பார்கள்.

தம்பி - அது நியாயமான கேள்விதானே.

அண்ணன் - அப்படி ஒருவர் பெருஞ்செல்வம் சம்பாதித்தார். அதைப் பார்த்து யாராவது பின்பற்றுகிறார்களா? இல்லை.

தம்பி - ஒருவர் செய்தால் உடனே பலரும் செய்ய மாட்டார்கள். பலரும் செய்தபின், இனிச் செய்யாமலிருந்தால் நாம் விடுபடுவோம் என்றால் செய்வார்கள்.

அண்ணன் - அவர்கள் followers பிறரைப் பின்பற்றுபவர்கள். நான் சொல்லும் முயற்சியை அவர்கள் ஏற்கமாட்டார்கள். Pioneers முன்னோடியானவரே ஏற்பர்.

தம்பி - தகுதி என்றால்,

1) நல்லவராக

2) திறமைசாலியாக

3) நேர்மையானவராக

4) முன்னோடியாகவுமிருக்க வேண்டுமா?

அண்ணன் - அன்னை கொடுப்பது புதியது. ஆனால் முறை பழைய முறையாகும். நீ சொல்வதற்கும், நான் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்று. எப்படியாவது எல்லோரும் பெரும் பலன் பெற வேண்டுமென நீ நினைக்கிறாய். அது நடக்காது. நான் சொல்வது எட்டாத பலனை அன்னை எட்டும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். பெறும் தகுதி - உற்பத்தி செய்யும் தகுதியில்லை - யுள்ளவர் முன்னோடியாகப் பெறலாம்.

தொடரும்...


 

சொசைட்டியின் வெளியீடுகள்


கர்மயோகியின் நூல்கள்:

 

1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும்

ரூ. 20

2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

ரூ. 20

3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம்

ரூ. 20

4. சிறியதும் பெரியதும்

ரூ. 20

5. கணவன் மனைவி

ரூ. 20

6. இரத்தினச் சுருக்கம்

ரூ. 20

7. ஸ்வரூபம் சுபாவம்

ரூ. 20

8. பரமனை நாடும் ஜீவாத்மா

ரூ. 20

9. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம்

ரூ. 40

10.ஸ்ரீ அரவிந்தரின் காவிய இதழ்கள்

ரூ. 60

11.யோக வாழ்க்கை விளக்கம் I

ரூ. 80

12. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்

ரூ.100

13. அதிர்ஷ்டம்

ரூ.100

14. பேரொளியாகும் உள்ளொளி

ரூ.100

15. பிரார்த்தனை பலிக்க

வேண்டும்

ரூ.100

தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவு தபால் கட்டணம் ரூ.20/- சேர்த்து M.O. செய்யவும்.


 


 


 


 



book | by Dr. Radut