Skip to Content

12.தலைவலி

தலைவலி

       அன்பருக்குத் தலைபாரம் தாங்கவில்லை. சுமார் 3, 4 நாட்களாக இருக்கிறது. பிளசிங் பாக்கட்டை நெற்றியில் வைத்தால் ½ மணி நேரத்தில் மெதுவாகக் கரைகிறது. எடுத்தால் மீண்டும் வருகிறது. இதற்கு என்ன காரணமிருக்கலாம் எனில்,

- Life Divine சற்று அதிகமாகப் புரியும்பொழுது இந்தத் தலைவலிவரும். இப்பொழுது படிப்பதால் அது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

- சரித்திர நூல்கள் பழைய காலத்து உணர்வைக் கொண்டு வருவதால், அவற்றைப் படிக்கும்பொழுது தலைவலி, மரக்கட்டைபோல் தூங்குவது போன்றவை symptoms of unconsciousness தெரிவதுண்டு. 7 வால்யூம் உள்ள சரித்திர நூல் இரண்டாம் புத்தகத்தில் அன்பர் இருந்தார்.

- இதரச் சிறு காரணங்கள் பல.

       அவர் வியாபாரத்திலிருந்து ஆடிட்டர் மூலம் அவருக்கு முக்கிய செய்திகள் வரும். அன்று ஆடிட்டர் அவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்க்கப் போகுமுன் தலைவலி சுத்தமாக மறைந்தது. சர்க்கார் முக்கிய நோட்டீஸ் கொடுத்ததாகவும், மானேஜர் முதலாளியைத் தொந்தரவு செய்யாமல் நிலைமையை அன்று காலை சமாளித்ததாகவும் ஆடிட்டர் செய்தி தருகிறார்.

       தம் தொழிலில் உருவான நெருக்கடி பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறது. Life Divine, சரித்திர நூல்களை மீறி நெருக்கடி போனவுடன் தலைவலி போய்விட்டது.

****


 



book | by Dr. Radut